செய்திகள் :

கிருஷ்ணகிரி திமுக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு; முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

post image

கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது சிறுமி, திமுக நிர்வாகியால் பாலியல் வதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க பிரமுகர் பெரியநாயகம்
தி.மு.க பிரமுகர் பெரியநாயகம்

கடந்த டிசம்பர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியில் இரண்டரை வயதுச் சிறுமி உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததால் காவல்துறைக்குப் புகார் சென்று வழக்கை இன்ஸ்பெக்டர் சுமித்ரா விசாரித்தார்.

ஆனால், குழந்தை இறந்ததில் மர்மம் உள்ளது என்று அப்பகுதி மக்களும், பாலியல் டார்ச்சர் செய்யப்பட்டதன் காரணமாக குழந்தை இறந்தது என்று உடற்கூராய்வு அறிக்கையிலும் தெரிய வந்ததால் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தனர்.

போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு

விசாரணையில் குழந்தையின் தாய்க்கும் திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பெரியநாயகத்துக்கும் திருமணம் கடந்த உறவிருந்ததும், குழந்தை என்றும் பாராமல் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் குழந்தை இறந்தது என்பதும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து பெரியநாயகம் போக்சோ சட்டப்பிரிவில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுமித்ரா சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்துக்கு ஏற்கனவே இடமாறுதல் செய்யப்பட்ட நிலையில் வழக்கை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய சேலம் சரக டி.ஐ.ஜி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சுமித்ரா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சென்னை: டி.பி.யில் துணை முதல்வர் படம்! கிளாம்பாக்கம் பஸ் நிலைய கடைகளை காண்பித்து லட்சங்களில் மோசடி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், சென்னை வடக்கு இணை கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் பைஃனான்ஸ் தொழில் செய்து வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்தத் தொழ... மேலும் பார்க்க

கோவை: கை, கால்கள் கட்டிப் போட்டு மூதாட்டி கொலை... நகைகள் திருட்டு; நேபாள பணிப்பெண்ணுக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம், திருச்சி சாலை நஞ்சுண்டாபுரம் பகுதியில் பார்சன் குடியிருப்பு உள்ளது. அங்கு கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட ராம்குமார் குட்டி என்கிற ஆயுர்வேத மருத்துவர், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ... மேலும் பார்க்க

`கொடநாடு வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?'- சி.பி.சி.ஐ.டி‌-யிடம் கேள்வியெழுப்பிய நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017- ம் ஆண்டு ஏப்ரல் 23- ம் தேதி நள்ளிரவு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பான ... மேலும் பார்க்க

தருமபுரி: பெற்ற குழந்தையை குப்பையில் வீசிய கல்லூரி மாணவி; விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் சிசுவை குப்பையில் வீசிச்சென்ற கல்லூரி மாணவியின் செயல், தருமபுரியில் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த மாணவி மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகி... மேலும் பார்க்க

`மானாமதுரை சம்பவம் சாதிய மோதலா?' - விளக்கமளித்த சிவகங்கை எஸ்.பி!

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் நடந்த கொடூரத்தின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்குள், அதே பாணியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் என்ற கிராமத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறியிர... மேலும் பார்க்க

Holi: பாட்டி மீது கலர் தண்ணீரை அடித்த பேரன்; கோபமான பாட்டியால் விபரீதத்தில் முடிந்த ஹோலி விளையாட்டு

ஹோலி பண்டிகையின்போது ஒருவர் மீது ஒருவர் கலர் பொடியைத் தூவுவது வழக்கம். அவ்வாறு கலர் பொடியைத் தூவுவது சில நேரங்களில் சண்டையில் முடிந்துவிடும். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள கொராடி என்ற இடத்... மேலும் பார்க்க