செய்திகள் :

கோவை: கை, கால்கள் கட்டிப் போட்டு மூதாட்டி கொலை... நகைகள் திருட்டு; நேபாள பணிப்பெண்ணுக்கு வலைவீச்சு

post image

கோவை மாவட்டம், திருச்சி சாலை நஞ்சுண்டாபுரம் பகுதியில் பார்சன் குடியிருப்பு உள்ளது. அங்கு கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட ராம்குமார் குட்டி என்கிற ஆயுர்வேத மருத்துவர், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ராம்குமாரின் அம்மா கஸ்தூரி குட்டி (82) அவர்களுடன் வசித்து வந்தார்.

கொலை நடந்த வீடு

ராம்குமார் குடும்பத்தினருடன் வியட்நாம் சென்றுள்ளார். கஸ்தூரி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக நேபாளத்தைச் சேர்ந்த சுர்ஜா என்பவர் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்து வந்துள்ளார். 

ராம்குமார் இன்று கஸ்தூரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கஸ்தூரி தொலைபேசியை எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன ராம்குமார் அருகில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி கஸ்தூரி சடலமாக இருந்தது தெரியவந்திருக்கிறது.

சடலம்
சடலம்

இதையடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கின்றனர்.

காவல்துறை விசாரணையில் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. கை ரேகைகளைச் சேகரித்து, மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் பின்னால் தூக்கி வீசப்பட்டிருந்த கஸ்தூரியின் செல்போன் மீட்கப்பட்டது.

சுர்ஜா

நேபாளத்தைச் சேர்ந்த பணிப்பெண் சுர்ஜா தான் மூதாட்டியைக் கொலைசெய்து நகையைத் திருடியதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: டி.பி.யில் துணை முதல்வர் படம்! கிளாம்பாக்கம் பஸ் நிலைய கடைகளை காண்பித்து லட்சங்களில் மோசடி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், சென்னை வடக்கு இணை கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் பைஃனான்ஸ் தொழில் செய்து வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்தத் தொழ... மேலும் பார்க்க

`கொடநாடு வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?'- சி.பி.சி.ஐ.டி‌-யிடம் கேள்வியெழுப்பிய நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017- ம் ஆண்டு ஏப்ரல் 23- ம் தேதி நள்ளிரவு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பான ... மேலும் பார்க்க

தருமபுரி: பெற்ற குழந்தையை குப்பையில் வீசிய கல்லூரி மாணவி; விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் சிசுவை குப்பையில் வீசிச்சென்ற கல்லூரி மாணவியின் செயல், தருமபுரியில் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த மாணவி மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகி... மேலும் பார்க்க

`மானாமதுரை சம்பவம் சாதிய மோதலா?' - விளக்கமளித்த சிவகங்கை எஸ்.பி!

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் நடந்த கொடூரத்தின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்குள், அதே பாணியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் என்ற கிராமத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறியிர... மேலும் பார்க்க

Holi: பாட்டி மீது கலர் தண்ணீரை அடித்த பேரன்; கோபமான பாட்டியால் விபரீதத்தில் முடிந்த ஹோலி விளையாட்டு

ஹோலி பண்டிகையின்போது ஒருவர் மீது ஒருவர் கலர் பொடியைத் தூவுவது வழக்கம். அவ்வாறு கலர் பொடியைத் தூவுவது சில நேரங்களில் சண்டையில் முடிந்துவிடும். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள கொராடி என்ற இடத்... மேலும் பார்க்க

சேலம்: "தாழ்த்தப்பட்ட உன்னைத் திருமணம் செய்ய முடியாது" - காதலனின் சாதி ஆணவத்தால் மாணவி தற்கொலை

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த சக்திவேலின் மகன் கார்த்திகேயன். மாற்று சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன், சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம் பயின்ற... மேலும் பார்க்க