செய்திகள் :

"கூட்டணி வச்சதுதான் விஜயகாந்த் செய்த தவறு" - சீமான் கூறுவதென்ன?

post image

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி பேரங்கள், கட்சித் தாவல்கள், அரசியல் வியூகங்கள், சர்ச்சைகள், அதிகாரப்போட்டிகள் எல்லாம் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன.

'INDIA' கூட்டணி, 'NDA' கூட்டணி என இரு பெரும் அணியாகப் பிரிந்து நாடுமுழுவதும் தேர்தல் சூடுபிடித்து வருகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என 'INDIA' கூட்டணி உறுதியாக இருக்கிறது. அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது.

ஸ்டாலின் - திருமாவளவன் - எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையில் பாமக, தவெக, அமமுக, தேமுதிக கட்சிகள் கூட்டணியை இன்னும் முடிவு செய்யாமல் தழும்பிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தீவிரமடைந்து வருகின்றன.

இதில் சீமானின் 'நாதக' எப்போதும்போல தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது.

இந்நிலையில் கூட்டணி குறித்து பேசியிருக்கும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், "விஜயகாந்த் கூட்டணி அமைத்ததால் எதிர்க்கட்சியாக வந்தார் என்பது உண்மைதான். ஆனால், 10.5% வாக்கு வைத்திருந்தார். ஆனால், கூட்டணி வைத்ததால்தான் அவர் வாக்கு விழுக்காடு சீர்குலைந்தது.

கூட்டணி குறித்து பேசும் சீமான்
சீமான்

கூட்டணி வைத்து அண்ணன் விஜயகாந்த் என்ன ஆனார் என்பதைப் பார்த்துவிட்டோம். அதனால் நாதக ஒருபோதும் யாருடனும் கூட்டணி வைக்காது. நாங்கள் மாற்றத்திற்கான அரசியலை செய்ய விரும்புகிறோம். ஏற்கனவே இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மாற்றத்தை எப்படி கொண்டுவர முடியும்.

நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் தேர்தலை சந்திக்கும். கூட்டணி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. இது இப்போது கசப்பாகத்தான் இருக்கும், ஆனால் எதிர்காலத்தின் நல்ல அரசியல் மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும்" என்று பேசியிருக்கிறார் சீமான்.

பாமக: "அன்புமணி தனிக் கட்சி தொடங்கலாம்; பெயரையும் நானே சொல்கிறேன்" - ராமதாஸ்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா கட்சிகளும் தேர்தல் வியூகங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரமாகியிருக்கின்றன.ஆனால், பாமக இன்னும் உட்கட்சி மோதலில் இருந்தே மீளமுடியாமல் த... மேலும் பார்க்க

'2 மணி நேரத்துக்கு மேல் கூட்டம் காத்திருந்தால்...' - அரசியல் கட்சிகளின் பரப்புரை நெறிமுறைகள்!

அரசியல் கட்சிகளின் பரப்புரை கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சமர்பிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா... மேலும் பார்க்க

டிமாண்ட் ஏற்றும் தேமுதிக டு ஆளுங்கட்சியிடமே கறந்த இலைக்கட்சி மா‌.செ! - கழுகார் அப்டேட்ஸ்

ஆலோசனையில் அ.தி.மு.க!டிமாண்ட் ஏற்றும் தே.மு.தி.க...வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பாக, தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தே.மு.தி.க கலந்துக்கொண்டதுதான் அ... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: 121 தொகுதிகள்; 1,314 வேட்பாளர்கள்; நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்?

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படிடையில் முதற்கட்ட வாக்குபதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.121 தொகுதிக்கான சட்டமன்றத் தேர... மேலும் பார்க்க

``அன்பில் மகேஸ் திமுகவிற்கு அழைத்தாரா?'' - அமைதி காக்கும் வைத்திலிங்கம்!

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்தமிழ்நாட்டில் இன்னும் ஆறு மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், த.வெ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வெற்றிக்க... மேலும் பார்க்க