செய்திகள் :

பாமக: "அன்புமணி தனிக் கட்சி தொடங்கலாம்; பெயரையும் நானே சொல்கிறேன்" - ராமதாஸ்

post image

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா கட்சிகளும் தேர்தல் வியூகங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரமாகியிருக்கின்றன.

ஆனால், பாமக இன்னும் உட்கட்சி மோதலில் இருந்தே மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. பாமகவின் நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான அதிகார சண்டைகள் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருப்பதால் தேர்தலை நோக்கிய அடுத்த அடியை எடுத்து வைக்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது பாமக.

ராமதாஸ், அன்புமணி
ராமதாஸ், அன்புமணி

இதுகுறித்து இன்று (நவ 6), விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்திருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், "அன்புமணி அரசியல் செய்ய விரும்பினால் தனியாக கட்சியை ஆரம்பித்துக் கொள்ளலாம். ஆனால், 'பாட்டாளி மக்கள் கட்சி'யின் பெயரையும், என் பெயரையும் உபயோகப்படுத்தக் கூடாது.

'ஆர். அன்புமணி' என்று மட்டும் அன்புமணி தனது பெயரை வைத்துக் கொள்ளட்டும். 'அன்புமணி ராமதாஸ்' என என் பெயரைச் சேர்த்துப் பயன்படுத்தக் கூடாது. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரையும், புனிதமான அதன் கொடியையும் அன்புமணி எப்போதும் உபயோகப்படுத்தக் கூடாது. பலமுறை இதைச் சொல்லியிருக்கிறேன். கேட்கவில்லை என்பதால் மீண்டும் இதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன்.

ராமதாஸ்
ராமதாஸ்

உங்கிட்ட (அன்புமணி) இருக்க 21 பேர வைச்சு ஒரு தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ. புதிய கட்சிக்குப் பெயர் வேண்டுமானால் அதையும் நானே சொல்கிறேன். உனக்கும் பாமகவிற்கும், எந்தச் சம்பந்தமுமில்லை. என்னோடும் உனக்கு எந்தச் சம்பந்தமுமில்லை என்பதை பலமுறை சொல்லிவிட்டேன்" என்று திட்டவட்டமாகப் பேசியிருக்கிறார் ராமதாஸ்.

` நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும்' - மகனை முதல்வராக்க பீகார் மக்களிடம் லாலு கோரிக்கை

243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில் இன்று முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 11-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.இதில், தே... மேலும் பார்க்க

'2 மணி நேரத்துக்கு மேல் கூட்டம் காத்திருந்தால்...' - அரசியல் கட்சிகளின் பரப்புரை நெறிமுறைகள்!

அரசியல் கட்சிகளின் பரப்புரை கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சமர்பிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா... மேலும் பார்க்க

"கூட்டணி வச்சதுதான் விஜயகாந்த் செய்த தவறு" - சீமான் கூறுவதென்ன?

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி பேரங்கள், கட்சித் தாவல்கள், அரசியல் வியூகங்கள், சர்ச்சைகள், அதிகாரப்போட்டிகள் எல்லாம் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன. 'INDIA' கூட்டணி, 'NDA' கூட்டணி என... மேலும் பார்க்க

டிமாண்ட் ஏற்றும் தேமுதிக டு ஆளுங்கட்சியிடமே கறந்த இலைக்கட்சி மா‌.செ! - கழுகார் அப்டேட்ஸ்

ஆலோசனையில் அ.தி.மு.க!டிமாண்ட் ஏற்றும் தே.மு.தி.க...வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பாக, தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தே.மு.தி.க கலந்துக்கொண்டதுதான் அ... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: 121 தொகுதிகள்; 1,314 வேட்பாளர்கள்; நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்?

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படிடையில் முதற்கட்ட வாக்குபதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.121 தொகுதிக்கான சட்டமன்றத் தேர... மேலும் பார்க்க