செய்திகள் :

கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ

post image

கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் அதிர்வலைகள் ஓய்வதற்குள் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்ட விசாரணையில் வெள்ளை நிற காரில் ஒரு பெண், ஒரு ஆண், பின் இருக்கையில் ஒருவர் இருந்தனர். “டிரைவர் இருக்கையில் இருந்தவர், அருகில் இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்து அடித்தபோது அவர் வலியால் கத்தினார்.

கோவை இருகூர் சம்பவம்

அவருக்கு உதவி செய்வதற்காக சாலையில் கத்தி கூச்சலிட்டேன். அதற்குள் கார் சென்றுவிட்டது.” என்று சம்பவத்தை நேரில் பார்த்த பெண் காவல்துறையினரிடம் கூறிய ஆடியோ வெளியாகிருந்தது.

இந்நிலையில் காவல்துறை விசாரணையில் அந்தப் பெண் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், தன் கணவர், மகனுடன் வெளியே சென்றபோது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் பேசும் வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.

கோவை இருகூர் பெண்

அதில், “நாங்கள் வெளியில் சென்று வரும்போது கணவர் பழம் வாங்க இறங்க சொன்னார். நான் இறங்க மறுத்துவிட்டேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

நான் காரில் இருந்து இறங்கி செல்ல முயற்சித்தேன். என் கணவரும், மகனும் என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். ‘நான் வரமாட்டேன்’ என்று கூறியதற்கு கணவர் காருக்குள் இழுத்து என்னை அடித்தார்.

இருகூர் கார்

பதிலுக்கு நானும் அவருக்கு ஒரு அடி கொடுத்தேன். மகன் சண்டை வேண்டாம் என்று சொன்னதால் காரில் புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். அவ்வளவுதான்.” என்று கூறியுள்ளார்.

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இளைஞர்கள் கைது!

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் ஹரிஜன தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்கின்ற பாலன் (வயது: 21). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு நாடக மேடை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் - வீட்டுக்கு சென்று பயங்கரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வினிதா (வயது: 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4-ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ஓசூர்: இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின ஈர்ப்பு; கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய் - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26). இந்த தம்பதிக்கு 5 மற்றும... மேலும் பார்க்க

மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2025 தேதியில் இருந்து காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க

அலறி துடித்த இளம்பெண், காரில் கடத்தலா? - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி; கோவை காவல் ஆணையர் விளக்கம்

கோவை விமான நிலையம் அருகே இளம் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை இருகூர் அருகே அத்தப்பகவுண்டன்புதூரில் தீப... மேலும் பார்க்க