செய்திகள் :

1 லட்சம் சிலந்திகளுடன் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலை கண்டுபிடிப்பு - எங்கே தெரியுமா?

post image

ருமேனிய விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிரீஸ்-அல்பேனியா எல்லையில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்ட குகைக்குள், சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் சிலந்திகள் ஒன்றாக வசிக்கும் இந்த ராட்சத வலையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குகையின் இருள் சூழ்ந்த பகுதியில், ஆயிரக்கணக்கான புனல் வடிவ வலைகள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு ஒரு பட்டு கூடாரம் போல பரந்து விரிந்திருக்கும் சிலந்தி வலையை கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்துள்ளனர். இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட சிலந்தி வலைகளிலேயே இதுதான் மிகப்பெரியது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பில் விஞ்ஞானிகளை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்த வலையில் வசிக்கும் சிலந்திகளின் வகைகள்தான். பொதுவாக தனித்து வாழும் குணம் கொண்ட, ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு சிலந்தி இனங்கள் (பார்ன் ஃபனல் வீவர் மற்றும் ஷீட் வீவர்) இங்கு ஒரே வலையில் சமாதானமாக வாழ்ந்து வந்தது விஞ்ஞானிகளை மேலும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

Scientists discover the world’s biggest spiderweb

கிரீஸ் மற்றும் அல்பேனியா நாடுகளின் எல்லையில், 1,140 அடி உயரத்தில் இருக்கும் அந்த குகையை ஆய்வு செய்தபோது இந்த அதிசயத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் இஸ்த்வான் உராக் இது குறித்து கூறுகையில், "அந்த வலையைக் கண்டபோது எனக்குள் ஏற்பட்ட பிரமிப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது, நேரில் அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த சிலந்தி வலையின் பிரமாண்டத்தைக் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நுரையீரல் இல்லாமலும் சுவாசிக்கும் தவளைகள் - சுவாரஸ்யத் தகவல்கள்

தவளைகள், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய உயிரினம் என்று பலருக்கும் தெரியும். அவை நுரையீரல்கள் இல்லாமலேயே தங்கள் தோல் மூலம் சுவாசிக்கும் திறன் கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து விரிவாக தெ... மேலும் பார்க்க

தென்காசி: யானை - மனித மோதல்களைத் தடுக்க பூர்வீகத் தாவரங்கள் நடவு; வனத்துறை திட்டத்தின் பின்னணி என்ன?

தென்காசி மாவட்டத்தில், சமீபகாலமாக மனித-யானை மோதல் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. உணவுத் தேவைக்காக யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது, இங்குள்ள விளை நிலங்களைச் சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

சீனாவில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடும் பாறை; அறிவியல் சொல்லும் ரகசியம் இதுதான்

சீனாவின் குயிசூ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பாறை, சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டை வடிவிலான பெரிய கற்களை வெளியிடுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த விசித்திரமான நிகழ்வு விஞ்ஞா... மேலும் பார்க்க

சென்னை: கேப்டன் காட்டன் கால்வாய் தூர்வாரும் பணி; ஆகாயத்தாமரை அகற்றும் ஊழியர்கள் | Photo Album

கொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கை... மேலும் பார்க்க

விழுப்புரம்: நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வழியும் படுகை அணைகள்..!

வெள்ளப்பெருக்கால் நிரம்பி வழியும் படுகை அணைகள்படுகை அணையில் நிரம்பி வழியும் வெள்ளம்படுகை அணையில் குளித்து மகிழும் வாலிபர்கள்படுகை அணையில் நிரம்பி வழியும் வெள்ளம்படுகை அணையில் நிரம்பி வழியும் வெள்ளம்பட... மேலும் பார்க்க

சிறிய பறவை; கோவக்கார பறவை; ஒருவேளைக்கு 100 பூச்சிகளையாவது உண்ணும் பறவை - ஆச்சர்ய தகவல்கள்

''ஓர் அதிகாலை நேரம். எனக்கு மிகவும் பிடித்த குருவிகளில் ஒன்றை பார்ப்பதற்கும் அது இரையெடுக்கும் வேகத்தை ரசிப்பதற்கும் வரப்பு ஓரம் உட்கார்ந்துகொண்டிருந்தேன். காதுகளுக்குள் கீச் கீச் என்று நுழையாமல், கீச... மேலும் பார்க்க