செய்திகள் :

ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!

post image

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங்கியதையடுத்து இவர் இணையதளத்தில் பார்த்து ஒரு கிரீமை வாங்கி உள்ளார்.

ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்து வாங்கிய அந்த கிரீமை கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்த கிரீமை முழுமையாக நம்பியதால் சுமார் ஒரு லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் 12 லட்சம் வரை) செலவு செய்திருக்கிறார்.

எதற்காக இதனை தொடர்ந்து பயன்படுத்தி இருக்கிறார் என்றால், ஆரம்பத்தில் அந்த கிரீம் அரிப்பை கட்டுப்படுத்தி நல்ல பலனை அவருக்கு தந்திருக்கிறது.

cream

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த தொற்று மோசமடைந்து சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் பாம்புகளில் இருக்கும் கோடுகள் போன்று தோன்றுகிறது. கால்களில் வீக்கம், தொடர் வாந்தி, குமட்டல் ஆகியவை ஏற்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவரை பரிசோதனை செய்த தோல் மருத்துவர், அந்தப் பெண்ணின் உடலில் கார்டிசோல் ஹார்மோனின் அளவு மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்து இருக்கின்றார்.

அவரது உடல் அத்தியாவசிய ஹார்மோன்களை போதுமான அளவு உற்பத்தி செய்யாததால் 'செகண்டரி அட்ரினோகார்டிகல் இன்சஃபிஷியன்சி' (Secondary Adrenocortical Insufficiency) என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மருத்துவர் வாங் ஃபே கூறுகையில், "ஆன்லைனில் ஸ்டீராய்டு இல்லாத, தூய மூலிகை என்று கூறி ஆன்லைனில் விற்கப்படும் பல க்ரீம்களில் சக்திவாய்ந்த ஸ்டீராய்டுகள் கலக்கப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் உடனடி நிவாரணம் அளித்தாலும் நீண்ட காலம் பயன்படுத்தினால், இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இது போன்ற தோல் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி அதற்கேற்ற சரியான மருந்துகளை பயன்படுத்துமாறும்” கூறியிருக்கிறார்.

ரூ.40,000-க்கு ஏலம் போன ஒரு பப்பாளி பழம் - கர்நாடக கோயிலில் நடந்தது என்ன?

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் அமைந்துள்ள கனசகிரி மகாதேவா கோயிலில் நடந்த ஏலத்தில் ஒரு பப்பாளி பழம் ரூ.40,000-க்கு ஏலம் போயியுள்ளது. சதாசிவ்காட் பகுதியில் உள்ள கனசகிரி ... மேலும் பார்க்க

மும்பை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம், ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து; பயணிகள் 2 பேர் பலி -என்ன காரணம்?

மும்பையில் புறநகர் ரயில் சேவை மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. புறநகர் ரயில் போக்குவரத்து நின்றுவிட்டால், ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்துவிடும்.மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில், புறநகர் ரயிலி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் அழகு ரகசியம் கேட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனை - அவரின் பதில் என்ன தெரியுமா?

வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து தனது பாராட்டுகளை... மேலும் பார்க்க

மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்டா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளி... மேலும் பார்க்க

தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் கா... மேலும் பார்க்க

நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குமாம் - ஆய்வு சொல்வதென்ன?

எந்தவொரு செயலையும் தனியாக செய்வதை விட, நண்பர்களுடன் சேர்ந்து செய்யும்போது அதிக மகிழ்ச்சியை உணர்வதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக செய்யும் செயல் கூட பிறருடன் சேர்ந்து செய்யும்போது மகிழ்ச்... மேலும் பார்க்க