செய்திகள் :

ரூ.40,000-க்கு ஏலம் போன ஒரு பப்பாளி பழம் - கர்நாடக கோயிலில் நடந்தது என்ன?

post image

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் அமைந்துள்ள கனசகிரி மகாதேவா கோயிலில் நடந்த ஏலத்தில் ஒரு பப்பாளி பழம் ரூ.40,000-க்கு ஏலம் போயியுள்ளது.

சதாசிவ்காட் பகுதியில் உள்ள கனசகிரி மகாதேவா கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை சோம பிரதோஷத்தை முன்னிட்டு தீபோற்சவ விழா நடத்தப்படும். விழா முடிந்த பிறகு, பக்தர்கள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பழங்களைக் கடவுளுக்குப் படைத்து, அவற்றை ஏலம் விடுவது வழக்கம்.

இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ஒரு கிலோவிற்கும் குறைவான எடையுள்ள ஒரு பப்பாளி பழம் ரூ.40,000-க்கு ஏலம் போயியுள்ளது. உதய் ராணே என்ற பக்தர் இந்தப் பழத்தை ஏலத்தில் எடுத்துள்ளார்.​

இந்த ஏலத்தில் பப்பாளி மட்டுமல்லாமல், மற்ற பழங்களும் அதிக விலைக்கு ஏலம் போயியுள்ளன. ஒரு தேங்காய் ரூ.1,000-க்கும், ஒரு டஜன் வாழைப்பழங்கள் ரூ.800-க்கும் ஏலம் விடப்பட்டுள்ளன.

ஒரே ஒரு தட்டுப் பழங்கள் மூலம் கோயிலுக்கு சுமார் ரூ.1.5 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஏலத்தில் அதிக விலை கொடுத்து பழங்களை வாங்குவது, வணிக நோக்கத்தில் அல்ல, மாறாக பக்தியின் வெளிப்பாடாகவும், சமூகத்தில் ஒரு கௌரவமாகவும் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடவுளுக்குத் தங்களால் முடிந்த காணிக்கையைச் செலுத்துவதே இதன் நோக்கம் என பக்தர்கள் கூறுகின்றனர்.

மும்பை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம், ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து; பயணிகள் 2 பேர் பலி -என்ன காரணம்?

மும்பையில் புறநகர் ரயில் சேவை மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. புறநகர் ரயில் போக்குவரத்து நின்றுவிட்டால், ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்துவிடும்.மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில், புறநகர் ரயிலி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் அழகு ரகசியம் கேட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனை - அவரின் பதில் என்ன தெரியுமா?

வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து தனது பாராட்டுகளை... மேலும் பார்க்க

மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்டா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளி... மேலும் பார்க்க

தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் கா... மேலும் பார்க்க

நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குமாம் - ஆய்வு சொல்வதென்ன?

எந்தவொரு செயலையும் தனியாக செய்வதை விட, நண்பர்களுடன் சேர்ந்து செய்யும்போது அதிக மகிழ்ச்சியை உணர்வதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக செய்யும் செயல் கூட பிறருடன் சேர்ந்து செய்யும்போது மகிழ்ச்... மேலும் பார்க்க

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம் | Photo Album

அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப... மேலும் பார்க்க