செய்திகள் :

அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

post image

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``என்னை அழைத்தது பாஜக தான். அங்கே என்ன நடந்தது என்பதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை.

கட்சி ஒன்றிணைக்கப்பட வேண்டும் என அவர்கள் கூறினார்கள். நானும் அதையேதான் சொன்னேன். பாஜகவை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லை.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

எங்களை விட்டால் பாஜகவுக்கு வேறு வழி இல்லை எனக் கூறினேன். ஆகவே, எங்களை தமிழ்நாட்டின் அரியணையில் அமரவைக்க தயாராக இருக்க வேண்டும் எனச் சொன்னேன்.

தன்னை முதல்வர் ஆக்கிய சசிகலாவை மிக அவதூறாக எடப்பாடி பழனிசாமி பேசினார்." என்றார்.

செங்கோட்டையனின் பேட்டியைத் தொடர்ந்து, இந்த விவகாரத்துக்குப் பின்னணியில் பா.ஜ.க செயல்படுவது உறுதியாகியிருக்கிறது எனப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

செங்கோட்டையனின் பேட்டி தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ``அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க வேண்டும் என பா.ஜ.க சொன்னதாக கேட்கிறீர்கள். அவர் அ.தி.மு.க-வில் தான் இருக்கிறார்.

அப்படி இருக்கும்போது அவர் எப்படி அதிமுக-வை ஒருங்கிணைக்க யாரிடம் சொன்னார். அவர் கொடுத்தப் பேட்டியை முழுதாகப் பார்த்தேன்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

6 பேர் ஒன்றிணைக்கச் சென்றோம் என்கிறார். யாரிடம் ஒருங்கிணைக்கச் சொன்னோம் என்பதையும் அவர் தெளிவாகச் சொல்லவில்லை.

நேற்று முன் தினம்தான் அ.தி.மு.க-வில் இருந்த மனோஜ் பாண்டியன் தி.மு.க-வில் இணைந்தார். அதற்குப் பின்னணியில் தி.மு.க இருக்கிறது.

செங்கோட்டையன் விவகாரத்துக்குப் பின்னணியிலும் திமுக இருக்குமோ எனச் சந்தேகிக்கிறோம்." எனப் பேசியிருக்கிறர்.

ரூ.1800 கோடி அரசு நிலம் அஜித் பவார் மகனுக்கு ரூ.300 கோடிக்குதானா? - விசாரணைக்கு உத்தரவிட்ட பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன... மேலும் பார்க்க

`எனக்கும் மன வருத்தம் உண்டென ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்'- செல்லூர் ராஜூ

‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்அ.தி.மு.க முன்னாள் அமை... மேலும் பார்க்க

US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே - ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!

அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச... மேலும் பார்க்க

``அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசத்தான் பாஜக என்னை அழைத்தது" - செங்கோட்டையன் ஓப்பன் டாக்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று( நவ.7) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.``பழனிசாமியின் குடும்பத்தினரே கட்சியை நடத்துகிறார்கள். அதிமுக ஆட்சியை பாதுகாத்த பாஜகவுடனான கூட்டணி... மேலும் பார்க்க