செய்திகள் :

”கோவை, மதுரை மெட்ரோ திட்ட விவகாரம்; யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை!”- அப்பாவு

post image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு. அப்போது பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா குறித்து எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க முடியுமோ ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்து வந்துள்ளார். கிடப்பில் போடப்படும் மசோதாவை நிறைவேற்ற காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், ஆளுநர் விருப்பு, வெறுப்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.

அப்பாவு

தமிழக அரசு தொடர்ந்த இவ்வழக்கில் காலக்கெடு கொடுப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதைத்தான் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வழக்கிற்கான தீர்ப்பு இன்னும் கொடுக்கப்படவில்லை.  கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மத்திய அமைச்சர் அதனை நிராகரித்ததாகச் சொல்கிறார். ஆனால், தமிழக பா.ஜ.கவினர் அதனை நிராகரிக்கவில்லை, திருப்பித்தான் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறி வருகின்றனர்.

யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை. தமிழக அரசால் கொடுக்கப்பட்டுள்ள மெட்ரோ திட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி பல இடங்கள் பாதிக்கப்படும் எனவும், அளவீடுகள் குறைவாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டித்தான் திருப்பி அனுப்பியுள்ளதாக பா.ஜ.கவினர் கூறி வருகின்றனர். மெட்ரோ திட்டத்திற்கு என்று இலவசமாக நிதி கேட்கவில்லை. 50 சதவீத பங்குத்தொகையை மட்டுமே கேட்கிறோம்.

அப்பாவு

சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 6 ஆண்டுகள் எதனையும் செய்யாமல் இருந்த சூழலில்தான் தமிழக அரசு ஆறில் ஐந்து பங்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தற்போது நடைபெற்று பெறுகிறது. மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த வங்கியில் கடன்தான் வாங்கியுள்ளோம். அதனையும் மத்திய அரசு சொல்லித்தான் வாங்கியுள்ளோம் எனச் சொன்னால் அதில் என்ன நியாயம் உள்ளது. ஒரு பங்குத்தொகையை மட்டும் கொடுத்துவிட்டு அனைத்தையும் தாங்கள்கொடுத்ததாக சொல்லி வருகிறார்கள். அதற்கு வட்டித்தொகைகட்ட மத்திய அரசு முன் வருமா?” என்றார்.   

Sanitary Workers : கொளத்தூரில் முதல்வரை எதிர்த்து தூய்மைப் பணியாளரை போட்டியிட செய்வோம்! - கு.பாரதி

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் அம்பத்தூரில் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை... மேலும் பார்க்க

`திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிறதா?’ முந்தி அறிவித்த ப.சி; `திடீர்’ குழு அமைப்பின் பின்னணி!

2021-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தி.மு.க, கா... மேலும் பார்க்க

சேலம் திமுக நிர்வாகி கொலை: ``ரூ. 5000-க்கு துப்பாக்கிகள் கிடைக்கின்றன" - அன்புமணி குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளரும், விவசாயியுமான ராஜேந்திரன் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ... மேலும் பார்க்க

`வேட்புமனு வாபஸ் அச்சம்’ - கூட்டணியில் இருந்தும் வேட்பாளர்களை ஹோட்டலில் தங்கவைத்த பாஜக, சிவசேனா

மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, மனுவை வாபஸ் பெறும் நாள் நேற்றோடு முடிந்தது. வேட்பு மனுவை திரும்ப பெறும் கடைசி நாளி... மேலும் பார்க்க

`ராஜ் தாக்கரே வேண்டும்’ உத்தவ் உறுதி; காங்கிரஸ் முட்டுக்கட்டை - சரத் பவார் சமாதானம் கைகொடுக்குமா?

மகாராஷ்டிராவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் முடிந்த பிறகு அடுத்த கட்டமாக ஜனவரி மாதம் மும்பை உட்பட மாநிலம் முழுவத... மேலும் பார்க்க

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங். குழு; "அரசல் புரசல் செய்திகளுக்கு முடிவு" -ப.சிதம்பரம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் மெல்ல பரப்புரைகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் கிராமங்கள் தோறும் பரப்புரை நிகழ்த்தி வருகின... மேலும் பார்க்க