செய்திகள் :

`வேட்புமனு வாபஸ் அச்சம்’ - கூட்டணியில் இருந்தும் வேட்பாளர்களை ஹோட்டலில் தங்கவைத்த பாஜக, சிவசேனா

post image

மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, மனுவை வாபஸ் பெறும் நாள் நேற்றோடு முடிந்தது. வேட்பு மனுவை திரும்ப பெறும் கடைசி நாளில் அரசியல் கட்சிகள் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டன. ஒரு கட்சி வேட்பாளரை மற்றொரு கட்சி விலைக்கு வாங்கிவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தன. அதுவும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், பா.ஜ.கவும் தங்களது வேட்பாளர்களை பாதுகாப்பதில் தீவிரம் காட்டி வந்தன.

ஆட்சியில் கூட்டணியில் இருக்கும் இக்கட்சிகள் மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதையடுத்து வேட்புமனுவை வாபஸ் பெறும் கடைசி நாளில் பா.ஜ.க தங்களது வேட்பாளர்களை விலைக்கு வாங்கிவிடக்கூடாது என்பதற்காக ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி வேட்பாளர்களை தனது சொந்த ஊரான தானேவிற்கு கொண்டு சென்று ஹோட்டல்களில் தங்க வைத்திருந்தார்.

ஏக்நாத் ஷிண்டே

இதே போன்று பா.ஜ.கவும் கடைசி நேரத்தில் சிவசேனா(ஷிண்டே)வுக்கு ஆதரவாக வேட்பு மனுவை வாபஸ் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக தங்களது வேட்பாளர்களை மும்பை மற்றும் டோம்பிவலிக்கு கொண்டு வந்து ஹோட்டல்களில் தங்க வைத்திருந்தனர். வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான காலக்கெடு முடிந்த பிறகுதான் வேட்பாளர்கள் அவரவர் வார்டுக்கு செல்ல சிவசேனாவும், பா.ஜ.கவும் அனுமதித்தன. அம்பர்நாத் நகராட்சி வரலாற்றில் முதல் முறையாக வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில் ஹோட்டல்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

அம்பர்நாத்தில் ஏற்கனவே பா.ஜ.கவை சேர்ந்த 5 வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனையின் போது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதோடு சிவசேனாவும், பா.ஜ.கவும் மாறி மாறி கட்சியில் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் ஈடுபட்டன. இது குறித்து ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவிடமும் புகார் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

`ராஜ் தாக்கரே வேண்டும்’ உத்தவ் உறுதி; காங்கிரஸ் முட்டுக்கட்டை - சரத் பவார் சமாதானம் கைகொடுக்குமா?

மகாராஷ்டிராவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் முடிந்த பிறகு அடுத்த கட்டமாக ஜனவரி மாதம் மும்பை உட்பட மாநிலம் முழுவத... மேலும் பார்க்க

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங். குழு; "அரசல் புரசல் செய்திகளுக்கு முடிவு" -ப.சிதம்பரம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் மெல்ல பரப்புரைகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் கிராமங்கள் தோறும் பரப்புரை நிகழ்த்தி வருகின... மேலும் பார்க்க

`மேக்கேதாட்டு அணை - மெட்ரோ - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு’ - எடப்பாடி பழனிசாமி விரிவான பேட்டி

சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, ``கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் பேட்டியில், மேக்கேதாட்டு அணை ... மேலும் பார்க்க

`அதிமுக ஆட்சியில்தான் மதுரைக்கு மெட்ரோ ரயில் வர மீனாட்சி விரும்புகிறார்' - சொல்கிறார் செல்லூர் ராஜூ

"மெட்ரோ ரயிலை மத்திய அரசு தடுத்து விட்டது என்று பரப்புவது திமுகவின் நாடகம். மத்திய அரசு அனுப்பிய கடிதம் வழக்கமான நடைமுறைதான்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மெட்ரோமதுரைய... மேலும் பார்க்க

`நிதிஷின் 20 வருட முக்கிய இலாகாவும் போனது’ - அதிகாரத்தில் மேலோங்கும் பாஜக! | பீகார் அமைச்சரவை

பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.நவம்பர் 20-ல் நடைபெற்ற... மேலும் பார்க்க

GST Raid: அமைச்சர் ஐ. பெரியசாமி குடும்பத்தினரிடம் நடந்த 7 மணி நேரம் சோதனை நிறைவு | Photo Album

7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்... மேலும் பார்க்க