செய்திகள் :

கோவை ரோலக்ஸ் யானை திடீர் மரணம் - வனத்துறை பிடித்த ஒரே மாதத்தில் சோகம்!

post image

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றி திரிந்த ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறை கடந்த அக்டோபர் 17 ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சுமார் 3 வாரங்களுக்கு மேல் அந்த யானை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்ஸ்லிப் வரகழியாறு மரக்கூண்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

ரோலக்ஸ் யானை

இதையடுத்து கடந்த நவம்பர் 12 ம் தேதி அந்த யானை மந்திரி்மட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் ரோலக்ஸ் யானை திடீரென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரோலக்ஸ் யானைக்கு ரேடியோ சிக்னல் பொருத்தி தினமும் நேரில் கண்காணித்து வந்தோம். இன்று (26.11.25) பிற்பகல் 2 மணி வரை யானை தொடர் கண்காணிப்பில் இருந்தது. யானை ஓடை அருகே தண்ணீர் குடிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்தது.

ரோலக்ஸ் யானை

சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு ரோலக்ஸ் யானை அருகே சென்று பரிசோதித்த போது உயிரிழந்தது தெரியவந்தது. யானை மரணம் குறித்து விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. யானை இறக்கமான பகுதியில் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளது.

அது பெரிய அளவிலான சரிவு கிடையாது. சிறிய குன்றுகள் உள்ள பகுதி தான். மண் வழுக்கும் தன்மை கொண்டதால் வழுக்கி விழுந்து இறந்துள்ளது. ரோலக்ஸ் யானை ஆரோக்கியமாக இருந்தது. நல்ல முறையில் உணவு உட்கொண்டு வந்தது. இதேபோல நீலகிரியில் பிடிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் கடந்த சில நாள்களுக்கு முன்பு நெல்லை அருகே பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்தது.

ரோலக்ஸ் யானை

தற்போதுவரை 23 யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில்10% மட்டுமே மாற்று இடங்களில் தங்கியுள்ளன. மற்ற யானைகளை மீண்டும் பிடிக்கும் நிலை அல்லது இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.” என்றார்.  

நெல்லை: `டீ குடிக்கச் சென்றவரை தாக்கிய கரடி' - குடியிருப்புக்குள் உலா வரும் கரடிகள்; மக்கள் அச்சம்

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி, மான், மிளா, பன்றி, உடும்பு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில், இரை தேடலுக்காக வனப்பகுதிய... மேலும் பார்க்க

அழிவின் விளிம்பில் வங்குநரி, சமநிலை காக்க `வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம்' - என்ன சிறப்பு?

நாட்டிலேயே முதன்முறையாக குள்ள நரிகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்விற்கென சிறப்பு மையம் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மணக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இது 2 ஆண்டுகளா... மேலும் பார்க்க

சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களுக்கான மருத்துவமனை? - என்ன சிறப்பு?

சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுமார் 70 இலட்சம் செலவில் வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்ற தகவல் கேட்டு குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு சென்றோ... மேலும் பார்க்க

மகுடி ஊதினால் பாம்பு படமெடுத்து ஆடுமா? உண்மை என்ன? - அறிவியல் சொல்வது இதுதான்!

பாம்பு மகுடி இசைக்கு மயங்கி ஆடும் காட்சியை நாம் பல திரைப்படங்களிலும், நிஜ வாழ்க்கையிலும் பார்த்திருப்போம். ஆனால், பாம்புகளால் உண்மையிலேயே மனிதர்களைப் போல ஒலியைக் கேட்க முடியுமா என்ற கேள்விக்கு அறிவியல... மேலும் பார்க்க

நஞ்சுள்ள பாம்புகள் எவை? பாம்பு கடித்தால் மரணத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? - நிபுணர்கள் விளக்கம்

மழைக்காலத்தில் மக்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளில் ஒன்று பாம்புகளின் தொல்லை. இருசக்கர வாகனம், கார், குளிர்சாதனப் பெட்டி போன்ற பல இடங்களில் சென்று பதுங்கி இருப்பதாக பல செய்திகளை நாள்தோறும் கேட்க நேரிடு... மேலும் பார்க்க