செய்திகள் :

சி.வி சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த `முதல்வர்' விஜய் - எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா?

post image

தமிழ்நாடு அரசியலில் தேர்தல் முடிவு வெளியான மே-4 க்குப் பிறகு பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பாரா என்பதில் தொடங்கி தற்போது அ.தி.மு.க-வின் எம்.ஜி.ஆர் மாளிகைக்குள் எழுந்திருக்கும் புகைச்சல் வரை தேர்தலுக்குப் பிறகும் அரசியல் களம் பரபரப்பாகவே இருக்கிறது.

இதற்கிடையில் சர்பிரைஸாக தமிழ்நாட்டின் புதிய முதல்வர் விஜய், தி.மு.க தலைவர் ஸ்டாலினின் இல்லம் தேடிச் சென்று சந்தித்தது, வைகோவை சந்தித்தது, இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்யமூர்த்தி பவன் என தொடர்ந்து எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார்.

சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ
சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ

அதன் அடிப்படையில், இன்று அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ சி.வி சண்முகத்தின் அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார் முதல்வர் விஜய். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல், முதல்வர் விஜய் சி.வி சண்முகத்தின் அலுவலகம் சென்றிருப்பது தமிழ்நாடு அரசியலில் மிக முக்கியமான மற்றும் அதிரடியான திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சந்தித்த தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் உச்சத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், முதல்வர் விஜய் எடப்பாடி பழனிசாமியைத் தவிர்த்துவிட்டு சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்தது, அ.தி.மு.க-வில் சி.வி. சண்முகம் தலைமையிலான 'அதிருப்தி கோஷ்டியை' ஆதரித்து, அதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் சிலர்.

மேலும், தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு சட்டமன்றத்தில் போதிய மெஜாரிட்டி இருந்தாலும், த.வெ.க தனித்துப் பெரும்பான்மை பெறவில்லை. வரும் மே 13-ம் தேதி நடைபெறவிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தனக்கான பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழல் முதல்வர் விஜய்க்கு இருக்கிறது.

சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ
சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ

சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் விஜய பாஸ்கர், லீமா ரோஸ் உள்ளிட்ட சுமார் 30 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் விஜய்யின் த.வெ.க அரசுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தச் சந்திப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் தனிமைப்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது, அவர்கள் த.வெ.க-வுடன் ஒரு சுமுகமான உறவை பேண விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இது அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்குக் கடுமையான அரசியல் சவாலாக அமையும்.

இந்தச் சந்திப்பு வெறும் 'மரியாதை நிமித்தமான சந்திப்பு' மட்டுமல்ல. இது எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, விஜய்யின் ஆட்சி நீண்ட காலம் நிலைத்திருப்பதற்கான ஒரு அரசியல் காப்பீடு போன்றது. இதன் எதிரொலியாக அ.தி.மு.க-வில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படவோ அல்லது தலைமை மாற்றம் கோரப்படவோ வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

அதிமுகவை தொடர்ந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்தார் விஜய். அப்போது விஜய்யிடம் எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

'மோடியின் பேச்சில் மர்மம் ஒளிந்திருக்கிறது; இந்திய பொருளாதாரம் மோசமான.!'- கெஜ்ரிவால் காட்டம்

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்ட... மேலும் பார்க்க

தேனி: துடைத்தெறியபட்ட அதிமுக… கட்சிக்கு கஷ்ட காலத்தில் கைகொடுத்த மாவட்டத்தில் வீழ்ச்சி! என்ன காரணம்?

அ.தி.மு.க -வின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் களம் கண்டு வெற்றி பெற்ற மாவட்டம் தேனி. இங்கு உள்ள நான்கு தொகுதிகளிலும் கோலோச்சி வந்த அ.தி.மு.க, தற்போது நடந்... மேலும் பார்க்க

தகர்த்த செந்தில் பாலாஜி; கொடியேற்றிய விஜய்... `கோட்டை'யில் கோட்டைவிட்ட அதிமுக!

“கோவை என்றைக்கும் அண்ணா தி.மு.க கோட்டை. எனவே, கோவையில் அனைத்து தொகுதிகளிலும் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்” என்று தேர்தலுக்கு முன்பு நம்பிக்கையோடு சொல்லி வந்த எஸ்.பி.வேலுமணியைத் தவி... மேலும் பார்க்க

'திமுக அமைச்சர்களின் பணியாளர்களை வேறு வேறு இடங்களுக்கு மாற்றுங்கள்.!' - முதல்வர் அலுவலகம் கறார்?

தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று கோட்டைக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் திமுக சார்பு பணியாளர்களையும் அதிகாரிகளையும் உடனடியாக வேறு வேறு இடங்களுக்கு மாற்றுமாறு முதல்வர் அலு... மேலும் பார்க்க

``தலித் ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை" - திருமாவளவன் விளக்கம்

விசிக மீதான விமர்சனம் குறித்து, விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசிய சில கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமாவளவன் தன் எக்ஸ... மேலும் பார்க்க

"பழையபடி +2 மதிப்பெண்களின்படி, MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்" - முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வினாத்தாள் கசிந்ததால், கடந்த 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக த... மேலும் பார்க்க