செய்திகள் :

"சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது" - அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன?

post image

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேற்று (ஆகஸ்ட் 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் வரியில் இருந்து தப்பிக்க ஒரு மோசடி வழியை பின்பற்றுவதாக கூறியிருந்தது.

அந்த மோசடியின் பெயர், 'சரக்கு மாற்று மோசடி (Transshipment Scam)'. அதாவது, அமெரிக்கா எந்த நாட்டிற்கு குறைவான வரி விதித்திருக்கிறதோ, அந்த நாட்டிற்கு மோசடி செய்யும் நாடுகள் தங்கள் பொருளை ஏற்றுமதி செய்கின்றன.

அங்கே இருந்து அந்தப் பொருள்கள் அமெரிக்கா சென்று இறங்குவதால், வரி குறைகிறது. இதனால், அமெரிக்காவிற்கு ஓராண்டிற்கு சராசரியாக 75 பில்லியன் டாலர் வருமான இழப்பு ஏற்படுகிறது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

ஏற்றுமதி - இறக்குமதி
ஏற்றுமதி - இறக்குமதி

இந்த அறிக்கையில் சீனாவைக் கடுமையாக சாடியிருக்கும் அமெரிக்கா, சென்னை, புனே போன்ற இந்திய மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறது.

அது என்ன?

அமெரிக்காவின் வரி விதிப்பிலிருந்து தப்பிப்பதற்காகச் சீனப் பொருட்கள் வேறு சில நாடுகளின் வழியே அமெரிக்கச் சந்தைக்குள் நுழைகிறது.

இதன் காரணமாக அமெரிக்கத் தொழிற்சாலைகளின் உற்பத்தி முடங்கி பிற வெளிநாடுகள் பயனடைகிறது.

சீனா, பம்ப் மற்றும் கம்ப்ரஸ்ர்களை முதலில் இந்திய மாநிலங்களான சென்னை, குஜராத், புனா ஆகியவற்றிற்கு அனுப்பி, அங்கிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம் சீனா வரி ஏய்ப்பு செய்கிறது என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறது அமெரிக்கா.

அந்த அறிக்கையில் அமெரிக்கா இந்திய மாநிலங்களை மட்டும் குற்றம் சாட்டவில்லை. மெக்சிகோ, வட கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சில மாநிலங்களையும் குறிப்பிடுகிறது.

இப்படி வரி ஏய்ப்பு செய்ய பயன்படும் மாநிலங்களை அமெரிக்கா, 'கெட்ட சகோதரி நகரங்கள்' என்று குறிப்பிடுகிறது.

"இவர்களை பார் கவுன்சிலில் சேர்க்க வேண்டாம்" - BCI உத்தரவு; CJI சூர்ய காந்த்தின் அதிரடி பதில்!

'கரப்பான்பூச்சி' - இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் சொன்ன இந்த வார்த்தைதான், டெல்லி ஜந்தர் மந்தர் முதல் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு அமைச்சரின் விலகல் வரை ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்றே சொல்லலாம்.... மேலும் பார்க்க

`தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கையா?'- ராகுல் பேச்சு; பாஜக கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கையைக் விமர்சிக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி Vs முதல்வர் அலுவலகம்! - சொத்துவரியில் பின்வாங்கிய முதல்வர் அலுவலகம்; பின்னணி என்ன?

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீரென மாற்றப்பட்ட சொத்துவரியால் லட்சக்கணக்கான சாமானிய நடுத்தர மக்கள் கொந்தளித்து போயிருந்தனர். அரசை நோக்கி கடும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.Mayor Pr... மேலும் பார்க்க

பாஜகவிலிருந்து தன்னுடன் வெளியேறியவர்களுக்கு முக்கியத்துவம்; வேகமெடுக்கும் அண்ணாமலை-ன் We The Leaders

அண்ணாமலை தொடங்கியுள்ள We The Leaders அமைப்பில் அடுத்தகட்டமாக மாநில மற்றும் மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளின் ஒர... மேலும் பார்க்க

`பாஜகவை நெருங்குகிறதா திமுக?' - நாடாளுமன்றத் தேர்தலில் எடுக்கப்போகும் முடிவு என்ன?

இந்திய அரசியலில் மாநிலக் கட்சியாக இருந்தாலும், தேசிய அளவிலான முடிவுகளைத் தீர்மானிப்பதில் திமுக எப்போதும் ஒரு முக்கிய காரணியாகவே திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராகக் கட... மேலும் பார்க்க

`திருமணம் ஆகாதவர்கள் குடித்தால் ரூ.5,000 அபராதம்!' - மீனவ கிராமத்தின் `மது ஒழிப்பு' முன்னெடுப்பு

மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் காக்கும் நோக்கோடும், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவ கிராமம்மதுஒழிப்புக்கு எதிராக ஒரு மு... மேலும் பார்க்க