செய்திகள் :

ஜப்பான்: 2 வருடமாக பணம் கொடுக்காமல் சாப்பிட்ட இளைஞர்; உணவு டெலிவரி நிறுவனத்திடம் சிக்கியது எப்படி?

post image

ஜப்பானைச் சேர்ந்த ஒருவர், உணவு டெலிவரி செயலியை ஏமாற்றி 2 ஆண்டுகளில் 1,095 ஆர்டர்கள், கிட்டத்தட்ட 19 லட்ச ரூபாய் மதிப்பிலான உணவுகளை இலவசமாகச் சாப்பிட்டிருக்கிறார்.

ஜப்பானில் நாகோயா என்ற பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய டாகுயா ஹிகஷிமோட்டோ என்பவர், ஜப்பானில் இருக்கும் பிரபல 'Demae-can' எனும் உணவு டெலிவரி செயலியில் தினமும் விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு, டெலிவரி செய்பவரிடம் வீட்டிற்கு வெளியே உணவை வைத்துவிட்டுப் போகச் சொல்லிவிடுகிறார்.

அதன்பிறகு, உணவு தவறான முகவரியில் டெலிவரி செய்துவிட்டதாக கஸ்டமர் கேரிடம் பேசி ஆர்டர் செய்த பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்கிறார்.

உணவு டெலிவரி ஸ்கேம்
உணவு டெலிவரி ஸ்கேம்

இதையெல்லாம் கண்டுபிடித்துவிட முடியாத, இதை இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து எப்படிச் செய்ய முடியும் என்று கேட்கலாம். ஆனால், அந்த நபர் உணவுகளை ஆர்டர் செய்ய 124 போலி கணக்குகளை உருவாக்கி, போலியான வெவ்வேறு முகவரிகள், வெவ்வேறு தொலைபேசி எண்கள் மற்றும் போலி பெயர்களைப் பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உணவு டெலிவரி செயலியை ஏமாற்றி வந்துள்ளார்.

இந்த யுக்தியை வைத்து இரண்டு ஆண்டுகளில், 1,095 முறை 19 லட்ச ரூபாய் மதிப்பிலான உணவுகளை ஆர்டர் செய்து இலவசமாகவே சாப்பிட்டு ஜாலியாக இருந்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் அந்த டெலிவரி நிறுவனம் ஆண்டு ரிப்போர்ட்டுகளை எடுத்துப் பார்க்கையில் 'Refund' மூலம் அதிகமான இழப்பு ஏற்பட்டதைக் கவனித்திருக்கிறார்கள். அதைப்பற்றி ஆராயும்போது மாட்டியிருக்கிறார் இந்த டாகுயா.

இதையடுத்து உணவு டெலிவரி நிறுவனம் கொடுத்த புகாரின் பெயரில் டாகுயா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 Food Delivey Scam
உணவு டெலிவரி ஸ்கேம்

விசாரணையில் டாகுயா, "முதலில் உண்மையிலேயே தவறான முகவரிக்கு உணவை டெலிவரி செய்துவிட்டார்கள். அப்போது கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டபோது அவர்கள் ஆர்டர் செய்த பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டார்கள். அதையடுத்து உணவைப் பெற்றுக் கொண்டு, டெலிவரி செய்யப்படவில்லை என்று சொன்னேன்.

அப்போதும் பணத்தைத் திரும்பக் கொடுத்தார்கள். அதன்பிறகு பல அழைப்பேசி எண்கள், பல போலி முகவரிகள், போலி கணக்குகளை உருவாக்கி இதைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிட்டேன். அதை என்னால் நிறுத்தவே முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.

பலரும் இதற்கு உணவு டெலிவரி நிறுவனத்தின் விதிமுறைக் குறைப்பாடுகள்தான் காரணம், அதை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.

தென்காசி: 2 நாளில் 27 நபர்களைக் கடித்துக் குதறிய தெருநாய்கள்; பதறவைக்கும் CCTV காட்சிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிவதோடு மட்டுமல்லாமல் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி துரத்திக் கடிப்பத... மேலும் பார்க்க

80's நடிகர்களின் சந்திப்பு: `அப்சரா ஆலி' - வைரலாகும் நடிகை நதியாவின் நடன வீடியோ | Viral Video

தென்னிந்திய சினிமா நடிகர்கள் ஒவ்வோர் ஆண்டும் சந்தித்துக் கொள்வது வழக்கம். அதுபோன்றதொரு சந்திப்பு சமீபத்தில் நடந்தது. 1980-களில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, இந்தி திரைப்படத் துறையில... மேலும் பார்க்க

`29 ஸ்பூன், 19 டூத் பிரஷ்' - போதை ஆசாமியின் வயிற்றில் ஆபரேஷன் செய்து எடுத்த மருத்துவர்கள் அதிர்ச்சி

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாபூரைச் சேர்ந்தவர் சச்சின். 35 வயதான இவர் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சச்சினுக்கு கடந்த சில தினங்களாக வயிற்றுவலி வந்திருக்கிறது. இதனால் ச... மேலும் பார்க்க

Bangkok: தீடீரென சாலையில் ஏற்பட்ட 164 அடி பள்ளம்; தாய்லாந்து அரசு சொல்லும் காரணம் என்ன?| viral video

திடீரென சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம். நம் நாட்டிலும் கூட திடீரென சிறு சிறு பங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால், தாய்லாந்தின் துசிட் மாவட்டத்தில் உள்ள சாம்சென் சாலையில், சும... மேலும் பார்க்க

``இந்த டிரஸ் எல்லாம் போட்டு வரக்கூடாது'' - கோவை கல்லூரி மாணவியை திட்டிய பூ வியாபாரிகள்

கோவை ஆர்எஸ்புரம் அருகே பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. அங்கு 100-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் மலர்க் கடைகள் உள்ளன. கோவை முழுவதும் இருந்து அங்கு தினசரி ஏராளமான மக்கள் பூ வாங்க செல்வ... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் டு டெல்லி: 94 நிமிடம் விமானத்தின் சக்கரத்தில பயணித்த 13 வயது சிறுவன் - என்ன நடந்தது?

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குண்டுஸ் என்ற இடத்தைச் சேர்ந்த 13 சிறுவன் ஈரானுக்கு பயணம் செய்ய நினைத்து, யாருக்கும் தெரியாமல் காபூல் விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கே பயணிகளுடன் கலந்து, விமானம் அ... மேலும் பார்க்க