செய்திகள் :

”பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும்”- தஞ்சாவூர், திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்

post image

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். திருவாரூர் மாவட்டம் விக்கிரப்பாண்டியம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வந்தது. இதற்கு எதிராக பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ், குமார், உத்திராபதி, கலைச்செல்வன் உள்ளிட்ட 22 பேர் கடந்த 2015ம் ஆண்டு போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் போராட்டம்

அப்போது, ஓ.என்.ஜி.சி சொத்துக்களை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 22 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருவாரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி சரத்ராஜ், பி.ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் 5 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.13,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதேபோல் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான செல்வராஜுக்கு 13 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை, ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 18 பேரை விடுவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் இருவரையும் அழைத்து சென்ற போலீஸ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அரசியல் ரீதியான விமர்சனங்கள் எழுந்தன. பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் இருவரையும் விடுதலை செய்யக்கோரியும், ஓ.என்.ஜி.சியை கண்டித்தும் இன்று போராட்டம் நடத்தினர். திருவாரூரில் ரயில் நிலையம் அருகே தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ்

இந்தத் தீர்ப்பு போராடுகின்ற விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும், விவசாயிகளுக்காக போராட வரும் தலைவர்கள் மீது ஓ.என்.ஜி.சி நிர்வாகம் தொடர்ந்து வழக்கு போட்டு அச்சுறுத்துவதை கைவிடவேண்டும். மத்திய, மாநில அரசுகள் பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் உடனடியாக வெளியேற வேண்டும்.

பழைய பணிகள், புதிய பணிகள் உள்ளிட்ட எந்த பணிகளையும் ஓ.என்.ஜி.சி நிர்வாகம் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளக்கூடாது என கோஷம் எழுப்பினர். இதேபோல் தஞ்சாவூரில் தபால் நிலையம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பி.ஆர்‌.பாண்டியன், செல்வராஜ் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

புதுச்சேரி த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் | Photo Album

புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள்... மேலும் பார்க்க

"மதுரைக்காரர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?" - முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

"ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் இல்லை என்று சொல்வது மட்டுமின்றி, பா.ஜ.க தலைவர்களோ மதுரைக்கு மெட்ரோவே தேவையில்லை என்று திமிராகப் பேசுகிறார்கள்" என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மதுர... மேலும் பார்க்க

``திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது" - ஸ்டாலினுக்கு தமிழிசையின் கேள்விகள்

மதுரையில் இன்று நிகழ்ச்சியொன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.மேலும், நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``கடந்த நான்கரை ஆண்ட... மேலும் பார்க்க

``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இன்று மதுரையில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,"சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்; வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண்; முக்கியமாக, ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவற... மேலும் பார்க்க

முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின்

இன்று மதுரையில் பயணம் மேற்கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின்.இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக, 'TN ரைஸிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில்' கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் ரூ.36,660.35 கோடி முத... மேலும் பார்க்க