செய்திகள் :

டான் 3 படத்தில் நடிக்க ஷாருக் கான் விதிக்கும் புதிய நிபந்தனை: பர்ஹான் அக்தர் சம்மதிப்பாரா?

post image

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இதற்கு முன்பு நடித்த டான் படம் பெரிய அளவில் ஹிட்டானது. டான் 2 படமும் வெளிவந்துவிட்டது. இப்போது டான் 3 படத்தை இயக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் மீண்டும் நடிக்க ஷாருக் கான் மறுத்துவிட்டார். இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது டான் 3 படத்தில் இருந்து ரன்வீர் சிங்கும் விலகிக்கொண்டார். நடிகர் ரன்வீர் சிங் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ போன்ற திரைப்பட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார். அவர் தொடர்ச்சியாக கேங்ஸ்டர் படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். குறிப்பாக துரந்தர் படம் கேங்க்ஸ்டர் படமாக அமைந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

எனவே அது போன்ற ஒரு படத்தில் மீண்டும் நடிப்பதில்லை என்று ரன்வீர் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் இயக்குநர் பர்ஹான் அக்தர் மீண்டும் ஷாருக் கானிடம் சென்று டான் 3 படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். கதையை கேட்ட ஷாருக் கான் அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஷாருக் கானுடன் அட்லீ

ஆனால் அப்படத்தில் நடிக்க ஷாருக் கான் புதிய நிபந்தனை ஒன்றை விதித்து இருக்கிறார். இயக்குநர் குழுவில் இயக்குநர் அட்லீயை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு பர்ஹான் அக்தர் அதிர்ச்சியடைந்துள்ளார். தனது சொந்த இயக்கம் மற்றும் தயாரிப்பில் டான் 3 படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் ஷாருக் கான் விதித்துள்ள நிபந்தனையால் தனது அங்கீகாரம் குறையும் என்று பர்ஹான் அக்தர் நினைக்கிறார். அதேசமயம் அட்லீயை இதில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே தன்னால் இப்படத்தில் நடிக்க முடியும் என்று ஷாருக் கான் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். ஜவான் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கினார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. டான் 3 படத்தில் இயக்குநர் அட்லீயை சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பர்ஹான் அக்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடமும் அணுகினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அவரும் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.

'5 ஏக்கர் ரூ.37.9 கோடி' - கோலியின் முதலீடு; அலிபாக் நகரில் பாலிவுட் நடிகர்கள் குவியக் காரணம் என்ன?

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.மும்பையில் வசித்து வந்த விராட் கோலி தம்பதி இப்போது இங்கிலாந்தில் கு... மேலும் பார்க்க

"ஐகானிக்கான ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்!" - ஹான்ஸிம்மருடன் பணியாற்றுவது பற்றி ஏ.ஆர். ரஹ்மான்

இயக்குநர் நிதேஷ் திவாரி பிரமாண்டமாக பாலிவுட்டில் ராமாயணம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானும், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸிம்மரும் இணைந்து இசையமைத்து வருகிறார்கள். Ram... மேலும் பார்க்க

"அதற்கு நோ சொல்லியிருந்தேன்; ஆனால், 'ஜெயிலர் 2'வில் அதை செய்திருக்கிறேன்; காரணம்..." - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்திருக்கும் சைலண்ட் திரைப்படமான 'காந்தி டாக்ஸ்' இம்மாதம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மராத்தி சினிமா இயக்குநரான கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் அரவிந்த் சாம... மேலும் பார்க்க

தீபிகா படுகோனேயின் 40வது பிறந்தநாள்: 'ரசம் சாதம், முட்டை, வறுத்த மீன்' - இளமையின் ரகசியம் என்ன?

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு இன்று 40வது பிறந்தநாள் ஆகும். அவர் இந்தப் பிறந்தநாளை தனது மகள் மற்றும் கணவருடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார்.அவருக்கு இந்தப் பிறந்தநாள் இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்... மேலும் பார்க்க

கணவர் தர்மேந்திராவிற்காக தனியாக பிரார்த்தனை கூட்டம் நடத்தியது ஏன்? - நடிகை ஹேமாமாலினி விளக்கம்

பாலிவுட் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் இறந்தவுடன் ரசிகர்களின் நினைவு அஞ்சலிக்காகக்கூட உடலை வைக்காமல் அவர் மகன்கள் அவசர அவசர... மேலும் பார்க்க

Dharmendra: "இது கோடிக்கணக்கான மக்களுக்கு தர்மேந்திரா விட்டுச் சென்ற பொக்கிஷம்!" - அமிதாப் பச்சன்

பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா கடந்தாண்டு இயற்கை எய்தினார். இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்திருந்த 'இக்கிஸ்' திரைப்படம் புத்தாண்டு ஸ்பெஷலாக இன்று திரைக்கு வந்திருக்கிற... மேலும் பார்க்க