செய்திகள் :

திருச்சியில் கிழக்கு: ரேஸில் பலர்; களமிறங்கும் கு.ப.கிருஷ்ணன் மகன்? - பரபரக்கும் அரசியல் களம்!

post image

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க ஆட்சியமைத்ததோடு, அந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், அவர் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. சமீபத்தில், தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல வந்த முதல்வர் ஜோசப் விஜய், 'திருச்சி கிழக்கு தொகுதியில் சாமானியரை வேட்பாளராக்குவோம்' என்று தெரிவித்தார்.

trichy east

இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் போட்டியிட இருக்கிறார் என்ற ஹேஷ்யம் கிளம்பியது. ஆனால், அவர் நேரடி அரசியலில் இறங்க தயக்கம் காட்டுவதாகவும், அதனால் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராக மறுப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, முன்னாள் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா, கு.ப.கிருஷ்ணன், நடிகரும், இயக்குநரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல பெயர்கள் அடிப்பட்டன.

இதில், லால்குடி தொகுதியில் நின்று தோல்வியைத் தழுவிய கு.ப.கிருஷ்ணனுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டதால், வேட்பாளர் ரேஸில் இருந்து அவர் பெயர் நீங்கியது. இந்நிலையில்தான், திருச்சி கிழக்கு தொகுதியில் கு.ப.கிருஷ்ணனின் மகனான சிரஞ்சீவி போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி, தேர்தல் களத்தை சூடாக்கியிருக்கிறது.

இதுபற்றி, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து விவர புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.

"கு.ப.கிருஷ்ணன் கடந்த தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டதால், அப்போது அவரது மகன் சிரஞ்சீவி வேட்பாளராக்கப்படவில்லை. ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட ஜோசப் விஜய்க்கு மாற்று வேட்பாளராக சிரஞ்சீவி பெயரைத்தான் குறிப்பிட்டனர். அதோடு, ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதும், அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றதும் சிரஞ்சீவிதான்.

இதற்கிடையில், லால்குடி தொகுதியில் போட்டியிட்ட அவரது தந்தை கு.ப.கிருஷ்ணன் தோல்வியைத் தழுவியதால், அப்போதே திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் சிரஞ்சீவிதான் என்று பேசப்பட்டது.

siranjeevi

இருந்தாலும், சகாயத்தை நிற்க வைக்க நினைத்து விஜய் பலமுறை அவரிடம் பேசியும், அவர் வேட்பாளராக விரும்பவில்லை. இதற்கிடையில், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் இந்த தொகுதியை குறிவைத்து சமீபத்தில் த.வெ.க-வில் இணைந்தார். தனக்கு அல்லது தனது மகனுக்கு இந்த தொகுதியில் சீட் வாங்கிவிட வேண்டும் என்று அவர் மும்முரம் காட்டி வருகிறார். இந்த சூழலில்தான், தனக்கு மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிரஞ்சீவியையே ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக்க முடிவெடுத்துள்ளாராம்" என்றார்கள்.

ஆக, இப்போதே திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடாகியிருக்கிறது.!

வேலுமணியிடன் உரசல்; எடப்பாடியின் கொங்கு கணக்கு... செந்தில் பாலாஜியின் மெளனம்! - பரபரக்கும் களம்!

செந்தில் பாலாஜி தி.மு.க-விலிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க-வில் இணைவதாக கரூர் மாவட்டத்தில் பரவும் தகவலால், கரூர் மாவட்ட அரசியல் களத்தில் அனலடிக்கிறது. அவரைச் சுற்றி இப்படி வட்டமிடும் அதிரிபுதிரி தகவல... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசுப்பள்ளி வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி! - வீடியோ வெளியாகி சர்ச்சை

தவெக-வின் மாவட்ட துணை செயலாளராக இருப்பவர் அகிலன். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்னலூர் ஊராட்சியை சேர்ந்த எக்கல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ள... மேலும் பார்க்க

`என்னுடன் போட்டோ எடுக்க கெஞ்சினார்' - ட்ரம்பின் பேச்சால் கொதித்த மெலோனி காட்டமான பதிலடி!

சர்வதேச அரசியல் மேடையில் ஒரு புகைப்பட விவகாரம், அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய இரு நட்பு நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.பிரான்சில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டின் போது, இத்தாலி பிரதமர்... மேலும் பார்க்க

விஜய் படங்களுக்கு பணியாயாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர்! - மனோஜ் பரமஹம்சாவுக்கு அரசுப் பொறுப்பு

பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 'ஈரம்', 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'ராதே ஷியாம்', 'என்னை நோக்கி பாயும் தோட்டா' போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக ... மேலும் பார்க்க

"போரை நடத்தி, பில்லியன் கணக்கான டாலர்களையும், உயிர்களையும் இழந்துள்ளோம்"- ட்ரம்ப் மீது ஒபாமா குற்றச்சாட்டு | Live Updes

ட்ரம்ப் மீது ஒபாமா குற்றச்சாட்டு!அமெரிக்கா, ஈரான் இடையே 14 அம்சங்களை உள்ளடக்கிய போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தானது. அதிபர்கள் ட்ரம்ப் மற்றும் மசூத் பெசேஷ்கியா இருவரும் இந்த ஒப்பந்தத்த... மேலும் பார்க்க