செய்திகள் :

தீவிரமாகும் பொதுக்குழு ஏற்பாடு; டெல்லியில் ஓ.பி.எஸ்... அதிமுகவில் கிளைமேட் சேஞ்ச் நடக்குமா?

post image

2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் அனலைக் கிளப்பியது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல், வரலாற்றுச் சிறப்பு பொதுக்குழு என்ற பெயரெடுத்த அதிமுக பொதுக்குழு வரை வெடித்தது. 2022 ஜூலை மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழுவில், அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்ட அதேநேரத்தில், பொருளாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்டார் ஓ.பி.எஸ்.

அதிமுக பொதுக்குழு

அதைத்தொடர்ந்து தர்மயுத்தம் 2.0 நடத்திய ஓ.பி.எஸ், தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டநிலையில், வரும் டிசம்பர் 10-ம் தேதி பொதுக்குழுவைக் கூட்டியிருக்கிறார் எடப்பாடி. அதேநேரத்தில், டிசம்பர் 15-ம் தேதி முக்கியமான ஓர் முடிவை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான், ஆடிட்டர் குருமூர்த்தியுடன் டெல்லியில் ஓ.பி.எஸ் முகாமிட்டிருப்பதால், அதிமுகவில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

இதுதொடர்பாக ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலரிடம் பேசும்போது, " அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ் நீக்கப்பட்ட பிறகு, அவருடன் பயணித்த ஜெ.சி.டி பிரபாகரன், புகழேந்தி உள்ளிட்ட பலரும் பிரிந்து சென்று முன்னாள் எம்.பி-யான கே.சி. பழனிசாமியுடன் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற நடத்தி வருகின்றனர். ஓ.பி.எஸ்ஸுக்கு மிக பக்கப்பலமாக இருந்த மனோஜ் பாண்டியனும் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். அதிமுகவில் இணைப்பை ஏற்படுத்தலாமென்று வண்டியில் ஏறிய செங்கோட்டையனும், த.வெ.க-வில் இறங்கிவிட்டார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

இதனால், இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக தொ.உ.மீ.கு இருக்கிறது. அதன்படி, சமீபத்தில் நடந்த உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், குழுவைக் கழகமாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்மூலம், தி.மு.க, த.வெ.க என யாருடன்வேண்டுமென்றாலும் கூட்டணி வைக்கலாம் என்பதுதான் திட்டம். ஆனால், இதனை ஓ.பி.எஸ் முழு மனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. எனவேதான், இறுதிக்கட்டமாக டெல்லி பாஜக தலைவர்களை ஒருமுறை சந்தித்துப் பேச முடிவெடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ். அதன்படியே, டெல்லிக்கு தனது மகன் ரவீந்தர்நாத் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் பயணப்பட்டிருக்கிறார்.

முதற்கட்டமாக, பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ். அடுத்தப்படியாக பிரதமர் மோடியைச் சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது, ஓ.பி.எஸ்ஸையும் தினகரனையும் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு டெல்லி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல, ரவீந்தர்நாத்தின் எதிர்காலம் குறித்தும் அவரை பாஜகவில் இணைக்கலாமா என்பது குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு பேசப்பட்டது குறித்து முழு விவரம் இன்னும் முழுமையாக எங்களுக்கே தெரியவில்லை. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் வந்தபிறகுதான் அதுகுறித்து முழுவிவரம் தெரிய வரும்" என்றனர் சுருக்கமாக.

நரேந்திர மோடி, ஜெ.பி.நட்டா, அமித்ஷா

" என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில், தினகரனையும் ஓ.பி.எஸ்ஸையும் உள்ளே கொண்டுவர டெல்லி காய்நகர்த்தி வருகிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் முக்கியத் தலைவரான அருண்குமார் கடந்த மாதம் எடப்பாடியை சென்னையில் வைத்து சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது, தினகரனையும் ஓபிஎஸ்ஸையும் அதிமுகவில் இணைக்கவே முடியாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்திருக்கிறார். ஆனால், அவர்களை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி எந்தத் தடையுமே விதிக்கவில்லை. அதன்படி, தினகரனைப்போல ஓ.பி.எஸ்ஸும் புது கட்சியைத் தொடங்கினால், என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வரலாம் என்பது டெல்லி தலைவர்களின் கணக்காக உள்ளது. அப்படி செய்தால், அதிமுகவுக்கு ஓ.பி.எஸ் எப்போதுமே உரிமை கொண்டாட முடியாது. இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அதிமுகவின் அனைத்து அதிகாரங்களும் எடப்பாடியின் கைகளுக்கு முழுமையாகச் சென்றுவிடும். இது த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று ஆசையிலிருக்கும் எடப்பாடிக்குச் சாதகமாகிவிடும். இந்த ரிஸ்கை எடுக்கலாமா என்பது உள்ளிட்ட ஆலோசனைகளைதான் டெல்லி தலைவர்கள் ஈடுப்பட்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாகதான், ஓ.பி.எஸ் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்." என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.

டிசம்பர் 10-ம் தேதி பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் இந்தச் சூழலில், டெல்லியில் ஓ.பி.எஸ் முகாமிட்டிருப்பது அதிமுகவின் நிலைமையை மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ - விஜய் ரோடு ஷோ; `நோ’ சொன்ன ரங்கசாமி

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வ... மேலும் பார்க்க

UN: 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிலுவை; ரூ.5000 கோடி பட்ஜெட் கட்; நிதிப் பற்றாக்குறை ஐநா சபை

ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.2024ஆம் ஆண்டின் முடிவில், ஐநா சபைக்கு 760 மில்லியன... மேலும் பார்க்க

400 பேருக்கு மட்டும் அழைப்பு: சொந்த ஊரை தவிர்த்து பஹ்ரைனில் திருமணம் செய்துகொள்ளும் அஜித் பவார் மகன்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். அவரது மகன் ஜெய் பவாருக்கு வரும் 4ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை திருமணம் நட... மேலும் பார்க்க

``ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்துக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது!'' - அமைச்சர் ரகுபதி காட்டம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி,"பா.ஜ.க மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடல் ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு கொண்ட... மேலும் பார்க்க

``சேகர்பாபு கும்பாபிஷேகம் நடத்துவதால் கடவுளை வணங்குவதையே விட்டுவிடத் தோன்றுகிறது"- தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கமாக இருந்து பிறகு காமராஜர் மக்கள் கட்சியாக மாறிய தமிழருவி மணியனின் கட்சி ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைந்திருக்கிறது. மணியன், ஜி.கே. வாசன் இருவரும் இதை முறைப்படி அறிவி... மேலும் பார்க்க

TVK: "மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால்..." - திமுக அரசு மீது விமர்சனம்

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட மழைப் பொழிவால் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர்... மேலும் பார்க்க