செய்திகள் :

திருப்பரங்குன்றம்: "6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும்; இல்லையென்றால்" - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

post image

டிசம்பர் 2ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, "இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம்" என்று தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை இந்து அமைப்பினர், பாஜகவினர் வரவேற்றனர்.

"கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இதுவரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்ஹாவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வருகிறார்கள் இந்து அமைப்பினர்.

திருப்பரங்குன்ற கார்த்திகை தீபம் விவகாரம்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அதுவும் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்றலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீபம் ஏற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்றாமல், மதநல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே உள்ள நில அளவை கல்லை இந்துத்துவா அமைப்புகள் தீபத்தூண் என்று கூறி அங்கே தீபம் ஏற்றுவாதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி" என்று சமூக செயற்பாட்டாளர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீட்டை நேற்றே தாக்கல் செய்திருந்தது.

இன்று கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் இன்று மதியம் முதல் இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நடந்தது.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

தற்போது இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து உரிய பாதுகாப்புடன் தீபம் ஏற்றும் கொப்பரை திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. சரியாக 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றபடவிருக்கிறது.

கள்ளக்குறிச்சி அரசராம்பட்டு : கவலைக்கிடமான நிலையில் `நூறு நாள் வேலை திட்டம்’ - தீர்வு கிடைக்குமா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்து கிராமவாசிகளுக்கு குறைந்தபட்ச அளவிலான... மேலும் பார்க்க

Wonderla: ``புயல், மின்தடை; 25 ஆண்டுகால அனுபவத்தில் இப்படி நடந்ததில்லை'' -மன்னிப்பு கேட்ட வொண்டர்லா

இந்த மாதம் டிசம்பர் 1-ம் தேதி, இரண்டு நாள்களுக்கு முன்பு, சென்னையில் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லா திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனைத் திறந்து வைத்தார்.இதையடுத்து நே... மேலும் பார்க்க

மின் இணைப்பு: திருப்பூர் மேயருக்கு ரூ.42,500 அபராதம் - மின்வாரியம் நடவடிக்கை ஏன்?

திருப்பூர் தெற்கு கே.என்.பி. சுப்பிரமணிய நகரில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரின் வீடு உள்ளது. இந்த வீட்டைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.அதற்காக தற்காலிக மின் இணைப்புக் கேட்டு கடந்த அக்டோபர் 8... மேலும் பார்க்க

திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்; அரசின் மேல்முறையீட்டை கண்டிக்கும் பாஜக!

நேற்று (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை "இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை ... மேலும் பார்க்க

``தேமுதிக தொண்டர்களை பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை'' - பிரேமலதா விஜயகாந்த்

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூக... மேலும் பார்க்க

கோபி: அதிமுக கூட்டத்தில் தொண்டர் பலி; "ரூ.20 லட்சம் இழப்பீடு" - எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்'எனும் பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.அவ்வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோபிசெட்டிபாளையத்... மேலும் பார்க்க