செய்திகள் :

Wonderla: ``புயல், மின்தடை; 25 ஆண்டுகால அனுபவத்தில் இப்படி நடந்ததில்லை'' -மன்னிப்பு கேட்ட வொண்டர்லா

post image

இந்த மாதம் டிசம்பர் 1-ம் தேதி, இரண்டு நாள்களுக்கு முன்பு, சென்னையில் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லா திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனைத் திறந்து வைத்தார்.

இதையடுத்து நேற்று டிசம்பர் 2-ம் தேதி முதல் வொண்டர்லா பயன்பாட்டிற்கு வந்தது. கடந்த ஒரு மாதமாகவே இதற்கான டிக்கெட்டுகள் பல விதமான சலுகைகளில் கூவி–கூவி சமூக வலைதளங்களில் விற்கப்பட்டன. வொண்டர்லாவைப் பற்றிய எதிர்பார்ப்பை உயர்த்த சமூக வலைதளப் பயனர்களை வைத்து ரீல்ஸ், வீடியோக்கள் என பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. பலரும் ஆர்வத்துடன் முதல்நாளே டிக்கெட்டுகளை புக்கிங் செய்து சென்றிருந்தனர்.

ஆனால் இதில் சோகமாக இருந்தது என்னவென்றால், சென்னை வொண்டர்லா முழுமையாக தயாராகவில்லை. பல விளையாட்டு எந்திரங்களின் பணிகள் முழுமையாக முடியாமல் இருந்துள்ளன. மிகச் சில விளையாட்டு எந்திரங்களே பயன்பாட்டில் இருந்துள்ளன. அதுவும் சில சமயங்களில் கோளாறு ஏற்பட்டதால், ஆர்வத்துடன் சென்றவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சென்னை வொண்டர்லா

வொண்டர்லா நிர்வாகம், பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகே மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கலாம் - ஏன் இந்த அவசரம்? இல்லையென்றால் திறக்கும் முன்பே விளம்பரத்திற்காக சென்று வீடியோக்கள் பதிவிட்ட சமூக வலைதள இன்ப்ளூயன்சர்கள் கொஞ்சமேனும் அக்கறையுடன் அங்குள்ள நிலைமை, உண்மையை எடுத்துச் சொல்லியிருக்கலாம்.

வொண்டர்லாவின் எந்திரக் கோளாறுகள், முழுமையடையாத பணிகள், அங்கு சென்றவர்களின் ஏமாற்றங்கள் என நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் களேபரமாகிக் கொண்டிருந்தன.

இந்நிலையில், இதுகுறித்து வொண்டர்லாவின் நிர்வாக இயக்குனர் அருண் கே. சிட்டிலப்பிள்ளி கூறியதாவது:
"நேற்றுதான் எங்கள் சென்னை வொண்டர்லா பார்க்கை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்த முதல் நாள். முதல் நாளான நேற்று கிட்டத்தட்ட 2,000 பேர் வந்திருந்தார்கள். புயலும் மழையும் இருக்கும் சமயத்திலும் இவ்வளவு பேர் வந்து வரவேற்பு கொடுத்தது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.

இருப்பினும், நேற்று புயல்-மழை மற்றும் அதனால் ஏற்பட்ட மின்தடை காரணமாக வொண்டர்லாவின் சில ரைடுகள் பாதியிலேயே நின்றுவிட்ட எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன. எங்கள் நிர்வாகமும் முழு தீவிரத்துடன் பணியாற்றி அனைத்து தடைகளையும் சரிசெய்தது. எந்தவொரு பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை; அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்தோம்.

சிலருக்கு சில பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது. எங்கள் தரப்பில் இருந்த பிரச்னைகளுக்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இனி இப்படியானது நடைபெறாது.

25 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இந்த தொழிலை நடத்தி வருகிறோம். இதுவரை எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது," என்று அவர் கூறியுள்ளார்.

மின் இணைப்பு: திருப்பூர் மேயருக்கு ரூ.42,500 அபராதம் - மின்வாரியம் நடவடிக்கை ஏன்?

திருப்பூர் தெற்கு கே.என்.பி. சுப்பிரமணிய நகரில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரின் வீடு உள்ளது. இந்த வீட்டைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.அதற்காக தற்காலிக மின் இணைப்புக் கேட்டு கடந்த அக்டோபர் 8... மேலும் பார்க்க

திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்; அரசின் மேல்முறையீட்டை கண்டிக்கும் பாஜக!

நேற்று (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை "இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை ... மேலும் பார்க்க

``தேமுதிக தொண்டர்களை பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை'' - பிரேமலதா விஜயகாந்த்

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூக... மேலும் பார்க்க

கோபி: அதிமுக கூட்டத்தில் தொண்டர் பலி; "ரூ.20 லட்சம் இழப்பீடு" - எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்'எனும் பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.அவ்வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோபிசெட்டிபாளையத்... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பேருந்து விபத்து: ஸ்டாலின் முதல் பிரேமலதா வரை இரங்கல்

காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க

Aadhaar Card: 2 கோடி ஆதார் கார்டுகள் நீக்கம்; மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

மத்திய அரசு ஆதார் தகவல்களை மாற்றியமைத்துள்ளது. இறந்துபோனவர்களின் லட்சக்கணக்கான ஆதார் எண்கள் அகற்றப்படாமல் இருந்துவந்தன. அதன் மூலம் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஆள்மாறாட்டம் மற்றும் சட்டவிரோதமாக நலத... மேலும் பார்க்க