செய்திகள் :

தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவு: வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 442 ஆக உயர்வு

post image

தென்கிழக்கு ஆசியா முழுவதும் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில், இந்தோனேசியாதான் பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சென்யார் புயல் பாதிப்பும், அதே நேரத்தில் சக்திவாய்ந்த டிட்வா புயல் இலங்கை - இந்தியாவையும் தாக்கியுள்ளது.

இந்தப் புயல், கனமழை காரணமாக நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேஷியா வெள்ளம்
இந்தோனேஷியா வெள்ளம்

தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (BNPB) அளித்திருக்கும் தகவலின்படி, இந்தோனேசியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் உணவு மற்றும் தண்ணீருக்காகத் தவித்து வருகின்றனர்.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுமத்ரா தீவின் சில பகுதிகளுக்குச் சென்றடைவதில் பெரும் சிரமம் நீடிக்கிறது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் ஆச்சே ஆகிய மூன்று மாகாணங்களில் 400-க்கும் மேற்பட்ட மக்களைக் காணவில்லை.

வெள்ளம், நிலச்சரிவுகள், சேதமடைந்த சாலைகள், தகவல் தொடர்பு துண்டிப்பு போன்ற காரணங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

உதவிக்காக ஜகார்த்தாவிலிருந்து இரண்டு போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. சுமத்ரா தீவில் உள்ள மத்திய தபனுலி மற்றும் சிபோல்கா ஆகிய இரண்டு நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போதுவரை நம்பிக்கையற்ற சூழ்நிலையே நிலவுகிறது. சவாலான வானிலை மற்றும் போதிய உபகரணங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் மீட்புப் பணிகள் தொய்வடைந்துள்ளன.

தாய் புலியை பிடித்துச்சென்ற வனத்துறை, ஆதரவின்றித் தவித்த 4 குட்டிகள்; மீட்கப்பட்ட பின்னணி

வனப்பகுதிகளில் வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடக மாநிலம் விளங்கி வருகிறது. அதே வேளையில், புலிகளுக்கு விஷம் வைத்து கொல்வது முதல் வாகனங்களில் அடிபட்டு இறப்பது ... மேலும் பார்க்க

`பிடிப்பட்ட ஆண் புலி' - விடுவிக்க வனத்துறை தேர்வு செய்த இடத்துக்கான காரணம் இதுதான்!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் மனித- வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புலிகளின் எண்ணிக்கை மெல்ல மீண்டெழுந்தாலும் அவற்றுக்கான வாழிட போதாமை என்பது மிகப்பெர... மேலும் பார்க்க

டிட்வா புயல்: நெல்லையில் விடிய விடிய பெய்த தொடர் மழை | Photo Album #Rain Alert 2025-26

டிட்வா புயல்: நெல்லையில் விடிய விடிய பெய்த தொடர் மழை|குளிர்ச்சியடைந்த நெல்லை!#Rain Alert 2025-26Ditwah: இலங்கையில் 'டிட்வா' புயல் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு; அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு மேலும் பார்க்க

டிட்வா புயல்: 'படகுப் படை, மோப்ப நாய்கள்' - புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் |Photo Album

டிட்வா புயல் / புதுச்சேரியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..வீராம்பட்டினம் கடற்கரையில் போலிஸ் பாதுகாப்புகடலோர பாதுகாப்பு படை படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டள்ளன வெள்ள பாதிப... மேலும் பார்க்க

நாகை: டிட்வா புயலால் இரவு முழுவதும் தொடர்ந்த மழை - கரையில் நிறுத்தப்பட்ட 3,700 மீன்பிடி படகுகள்

இலங்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் டிட்வா புயல் தமிழ்நாட்டை நோக்கி நகரும், கடலோர மாவட்டங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. சென்னைக்கு தெற்கே 4... மேலும் பார்க்க

டெல்லி: "காற்று மாசினால் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது" - தலைமை நீதிபதி வருத்தம்!

டெல்லியில் காற்றுமாசு காரணமாக வழக்குகளை காணொலி காட்சி (Virtual) மூலம் விசாரிக்க வலியுறுத்திய இரண்டு வாரங்களுக்குள், வழக்குகளை விசாரிப்பது மட்டுமல்லாமல் டெல்லியில் வசிப்பதே அவதியாக இருப்பதை வெளிப்படுத்... மேலும் பார்க்க