செய்திகள் :

தேனி: `எம்.எல்.ஏ சீட் உறுதி' - திமுக நிர்வாகியிடம் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி; போலீஸ் விசாரணை!

post image

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற திமுக உறுப்பினர் சுதாவின் கணவர் நாகலிங்கம். திமுக நிர்வாகியான இவர், வருகிற சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுகவில் விருப்பமனு அளித்திருந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக தலைமைக் கழகத்தில் இருந்து `தினேஷ்' பேசுவதாக கூறி ஆசிஃப் ராஜா என்ற நபர்  நாகலிங்கத்திடம் பேசியுள்ளார்.

அப்போது, வருகிற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட சீட் பெற்று தருவதாகவும் அதற்கு பணம் கொடுக்க வேண்டும் என சொல்லியுள்ளார். நாகலிங்கம் கொடுப்பதாக சொல்லியதும் மூன்று கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது.

தொடர்ந்து முன்பணமாக ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் அபுதாஹிர் என்பவரிடம் ஆசிஃப் ராஜா கூறியது போல் நாகலிங்கம் வழங்கியுள்ளார். அந்தப் பணத்தை பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கிடம், அபுதாஹிர் கொடுத்துள்ளார்.

அபுதாஹிர்

திமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்த நிர்வாகிகளுக்கு நேர்காணலுக்கான அழைப்பு வந்த நிலையில், நாகலிங்கத்திற்கு மட்டும் அழைப்பு வராமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த நாகலிங்கம், இது குறித்து அபுதாஹிரிடம் கேட்டுள்ளார். அதற்கு, பணத்தை கார்த்திக் என்பவர் பெற்று சென்று விட்டதாக கூறிய அபுதாஹிர், அதன் பிறகு முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நாகலிங்கம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீஸார் நாகலிங்கத்திற்கு வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்துபோது, தினேஷ் என்கிற பெயரில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த  ஆசிஃப் ராஜா தான் நாகலிங்கத்திடம் பேசியுள்ளார் என்றும், அவருடன் ஓ.பி.எஸ் ஆதரவாளர் அபுதாஹிர், கார்த்திக் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சீட் பெற்று தருவதாக நாகலிங்கத்திடம் பணத்தைப் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது,

ஆசிஃப் ராஜா

இதனை அடுத்து ஆசிஃப் ராஜா மற்றும் கார்த்திக் ஆகியோரை தென்கரைப் போலீஸார் கைதுசெய்து ஆசிஃப் ராஜா வீட்டில் வைத்திருந்த 84 லட்சம் ரூபாய் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அபுதாஹிரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திமுக-வில் சீட் பெற்று தருவதாக மூன்று பேர் மோசடியில் ஈடுபட்டது, பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

`கூட்டணி இருக்கா இல்லையா?’ - காத்திருக்கும் பாஜக; கூலாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்த ரங்கசாமி

புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அந்தக் கூட்டணி அடுத்து வந்த 2024 நாட... மேலும் பார்க்க

‘’அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா?" - டெல்லி சென்ற எடப்பாடி; கடுமையாக விமர்சித்த கே.என்.நேரு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேற்று (மார்ச். 19) டெல்லிக்குச் சென்றிருந்தார். இதனை ... மேலும் பார்க்க

குளித்தலை: `எங்க தொகுதியில இதையெல்லாம் கொஞ்சம் கவனிங்க!' - மக்கள் முன்வைக்கும் `27' கோரிக்கைகள்

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது, குளித்தலை சட்டமன்றத் தொகுதி. முன்னாள் முதல்வர் கலைஞர் தனது முதல் தேர்தலைச் சந்தித்து வெற்றிபெற்ற தொகுதி. இந்த தொகுதியில் தற்போது தி.மு.க-வைச் சேர்ந்த மாணிக்கம் சட்டமன்ற ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரம் எப்போது வெளியாகும்? - டெல்லியில் இபிஎஸ் பதில்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்... மேலும் பார்க்க

'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' - கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்

தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரான அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. பிரசாரத்தின் போது மக்களுக்கு விநியோகிப்பதற்காக அருண் ராஜ் தரப்பில் வாங்கி வைக்கப்பட்டிரு... மேலும் பார்க்க

நினைவுச் சுவடுகள் 10: ஜனநாயக அரசியலின் நினைவுச் சின்னம் - சைக்கிள் பேரணி!

சைக்கிள் பேரணிநினைவுச் சுவடுகள் 10தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் என்றால், பெரிய பொதுக்கூட்டங்கள், திரைப்படக் காட்சிகளை நினைவூட்டும் ஊர்வலங்கள், பரபரப்பான மேடைப் பேச்சுகள் என பல அம்சங்கள் நினைவுக்கு வரும... மேலும் பார்க்க