செய்திகள் :

"தொடர் மருத்துவ உதவியும் தடையற்ற கண்காணிப்பும்.." - சோனம் வாங்சுக் உடல்நிலை எப்படி இருக்கிறது?

post image

சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைகிறது என்று நேற்று முன்தினம் (ஜூலை 18), டெல்லி அரசு மருத்துவமனை சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதை 'சட்டவிரோதக் காவல்' என்று சோனம் வாங்சுக்கும், அவரது மனைவி கீதாஞ்சலியும் குறிப்பிடுகிறார்கள். உடல்நிலையில் பிரச்னை இல்லையென்றாலும், மருத்துவமனையில் சட்டவிரோதமாக வைத்துள்ளனர் என்பதே இவர்களது குற்றச்சாட்டு.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது...

அறிக்கை
அறிக்கை

"சோனம் வாங்சுக் தொடர்ந்து வி.எம்.எம்.சி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் மருத்துவப் பராமரிப்பைப் பெற்று வருகிறார். அவரது அத்தியாவசிய உடல் நலம் சார்ந்த அளவீடுகள் சீராக உள்ளன.

இருப்பினும், ரத்தத்தின் அளவீடுகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலும், பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவின் தீவிர மேற்பார்வையிலும் இருந்து வருகிறார்.

புது டெல்லியில் உள்ள வி.எம்.எம்.சி, சஃப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவக் குழுக்களின் மருத்துவப் பரிசோதனையின்படி, அவரது உடல்நிலையில் ஏற்படக்கூடிய சாத்தியமான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் நிர்வகிப்பதற்கு, தொடர்ச்சியான மருத்துவ உதவியும் தடையற்ற கண்காணிப்பும் தொடர்ந்து அவசியமாகிறது.

அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவப் பராமரிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன, மேலும் அவரது உடல்நிலை ஒரு பல்துறை நிபுணர் குழுவால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. !

CJP: ``நாடாளுமன்றத்தில் இணையம் துண்டிப்பு; ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒத்திவைப்பு" - சு. வெங்கடேசன்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என சிஜேபி அமைப்பு டெல்லியில் போராட்டத்தை முன்னெடு... மேலும் பார்க்க

'தோலை உரிப்பேன், எலும்பை உடைப்பேன்' - முதல்வரை 'இறங்கி' அட்டாக் செய்வதன் பின்னணியும் பின்விளைவும்

'சட்டசபைக் கதவை மூடிப் பார், உன் எலும்பை உடைக்கிறோம்' என முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டு மேடையில் முழங்கி (?) கைதாகியிருக்கிறார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்.திமுகவில் ஏற்கனவே வெற்... மேலும் பார்க்க

CJP: ``நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகரிலும் எதிரொலிக்கிறது" - உதயநிதி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசு தேர்... மேலும் பார்க்க

CJP: மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்த சிஜேபி அமைப்பினர் - கொடுத்த கடிதத்தில் என்ன இருந்தது?

நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பில் போராட்ட... மேலும் பார்க்க

`பாஜக-வை கோபப்படுத்தாத நாடாளுமன்ற அரசியலை நோக்கி.!' - திமுக, பாஜக கைகோர்க்குமா?

தவெக-வின் வெற்றி தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகளைப் பெரிய அளவில் மாற்றியமைத்து வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பிரதானக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. அந்தவகையில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

``முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலக்க கேரள அரசு அனுமதிக்கக் கூடாது" - ஜெகநாத் மிஸ்ரா

தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் ... மேலும் பார்க்க