செய்திகள் :

`நேபாளமும் இந்தியாவில் ஆக்கிரமித்துள்ளது; இப்போ தான் தெரியவந்தது' - அதிர்ச்சி கிளப்பிய நேபாள பிரதமர்

post image

இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் எல்லைப் பிரச்சனை தற்போது ஒரு புதிய அதிரடி திருப்பத்தை சந்தித்துள்ளது.

"இந்தியா மட்டும்தான் நேபாளத்தின் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் நேபாளமும் இந்தியாவின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என்ற உண்மை எனக்கு இப்போதுதான் தெரியவந்தது" என்று நேபாள நாட்டின் பிரதமர் பாலேந்திர ஷா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சை பிரிவாக இருக்கும் காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியதுரா ஆகிய எல்லைப் பகுதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஷா, இப்பிரச்சனை குறித்து இந்தியாவுக்குத் தூதரகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 நேபாள பிரதமர்
நேபாள பிரதமர்

மேலும், இந்தப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண இரு நாடுகளும் ஒன்றிணைந்து வரலாற்று அறிஞர்கள் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சம்மதித்துள்ளதாகவும், இதுகுறித்து சீனா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடனும் நேபாள அரசு ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், "நேபாளமும் இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது" என்று பிரதமர் ஷா பேசியது நேபாள நாட்டு மக்கள் மற்றும் அரசியல் வல்லுநர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் எல்லையை நேபாளம் ஆக்கிரமித்ததாக எந்த ஒரு வரலாற்று ஆதாரமும் இல்லை என்று நேபாளத்தின் முன்னாள் தூதர்கள் மற்றும் எல்லை நிபுணர்கள் பிரதமரின் இந்த விசித்திரமான கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

எல்லையில் சில இடங்களில் எல்லைத் தூண்கள் காணாமல் போயுள்ளதால், இரு நாட்டு விவசாயிகளும் ஒருவருக்கொருவர் நிலங்களை மாற்றிப் பயன்படுத்தி வருகிறார்களே தவிர, நேபாள அரசு இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று எல்லை நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை வழித்தடம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே சலசலப்பு நிலவி வரும் சூழலில், இந்தியாவின் எல்லையை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளது என்று அந்நாட்டு பிரதமரே நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.

``இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள்; வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்' - அதிமுக ராஜ் சத்யன்

அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தவெகவில் இணைந்த நிலையில் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏக்கள் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராகக் நடந்த செயல்களால் த... மேலும் பார்க்க

வாக்களித்த மக்களுக்கு 'நன்றி' சொல்ல திருச்சிக்கு செல்கிறார் முதல்வர் விஜய் | Live updates

திருச்சி செல்கிறார் விஜய்தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் நின்று களம் கண்டார். இந்த இரண்டு தொகுதிகளிலுமே மக்கள் விஜ... மேலும் பார்க்க

"நான் நினைத்திருந்தால் துணை முதல்வர் பதவியை விஜய் கொடுத்திருப்பார்; ஆனால்..." - பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (மே.31) நடைபெற்றது.இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "பேரத்திற்கும் பதவிக்கும் சோஃபாவு... மேலும் பார்க்க

கண்டுகொள்ளாத துரைமுருகன்; கவனம்பெற்ற தவெக சுதாகர் - காட்பாடி எம்எல்ஏ அலுவலகத்துக்கு விடிவுக் காலம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், காட்பாடி தொகுதியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு படுதோல்வியடைந்தார். த.வெ.க சார்பாக போட்டியிட்ட டாக்டர் எம்.சுதாகர் வெற்றிபெற்... மேலும் பார்க்க

Vijay: "மதவாத இயக்கம் வந்துவிடாமல், மற்றொரு திராவிட இயக்கமாக தவெக வந்துள்ளது" - துரை வைகோ

"தவெக அரசு அமைந்திருப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளதாகப் பேசும் கட்சியினர், கடந்த காலங்களில் நடந்தது குதிரை பேரமா, கழுதை பேரமா என்பதை கூற வேண்டும்” என்று திருச்சி மக்களவை உறுப்பினரும், மதிமுக முதன்மைச்... மேலும் பார்க்க