செய்திகள் :

"தனுஷ் அரசியலுக்கு வருவாரா?" - தந்தை கஸ்தூரி ராஜா அளித்த பதில் என்ன?

post image

தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னையில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "இன்றைய பிள்ளைகளுக்கு படிப்பு, காதல் அதன் பின் தான் வாழ்க்கை என்று இருக்கிறார்கள். செய்தியில் கவின் என்பவர் கொலை செய்யப்பட செய்தியை பார்த்தேன்.

அந்தப் பையன் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து, உத்தியோகத்துக்கு போன பையன். யாரை குறை சொல்வது? யாரையும் சொல்ல முடியாது. அந்த துர்மரணத்துக்கு ஒரே காரணம், காதல் என்று சொல்லப்படும் கொடிய செயல் தான். படிக்கப்போனால் படி, வேலைக்கு போனால் வேலைக்கு போ.

கஸ்தூரி ராஜா
கஸ்தூரி ராஜா

கல்யாணம் என்ற நிலை வரும் போது அப்பா அம்மாவிடம் விடு. உனக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்பவர்கள். அவர்களின் வலியை இன்றைய பிள்ளைகள் உணர்வதில்லை. உங்களுக்கு ஒரு நல்ல கல்யாணம் செய்து வைக்க அந்த அப்பா அம்மாவுக்கு தெரியாதா?

காதல் தப்பு என சொல்லவில்லை. எனக்கு 20 வயதுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது, என் மனைவிக்கு அப்போது 15 வயதுதான். கிட்டத்தட்ட அது செல்லாத கல்யாணம் தான். அதற்கு முன்பு காதல் வந்தது, எனவே படிப்பு தடம் புரண்டது. டிகிரியை முடிக்காமல் போனதற்கு ஒரே காரணம் காதல் தான்.

நம் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு எதுவெல்லாம் ஆதரவாக இருக்கிறதோ அது எல்லாம் தான் காதல். உன் வாழ்க்கையை பின்னுக்கு இழுக்கும் எதுவும் காதல் கிடையாது. காதல் எந்த வயதிலும் வரும், ஆனால் கொஞ்சம் காத்திருங்கள்" என்று பேசியிருக்கிறார்.

மகன் யாத்ராவுடன் தனுஷ்
மகன் யாத்ராவுடன் தனுஷ்

தொடர்ந்து, ``அரசியல் ரீதியாக பவர் ஃபுல்லான போயஸ் கார்டனில் வசிக்கும் உங்கள் மகன் தனுஷ் அரசியலுக்கு வருவாரா?" என்ற கேள்வி கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதில் அளித்த அவர், " யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என் மகன்களோ, பேரன்களோ கூட அரசியலுக்கு வரலாம். சென்னையில் மிக பவர்ஃபுல்லான இடம் கோபாலபுரம்தான், கலைஞர் வாழ்ந்த அந்த இடம்தான் ஒளி பிறந்த இடம்" என்று கூறியிருக்கிறார்.

Mari Selvaraj: 'அந்த தருணம்'; இளையாராஜா - மாரி செல்வராஜ் கூட்டணி - வெளியான 'மஞ்சணத்தி' பட அறிவிப்பு!

மாரி செல்வராஜ் தன்னுடைய 6-வது படத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோரை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த 'பைசன் காளமாடன்' திரைப்படம், கடந்தாண்டு தீபாவளி வெள... மேலும் பார்க்க

Karuppu: சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா; என்ன கார் தெரியுமா?

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான 'கருப்பு' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இத்திரைப்படம் கிட்டதட்ட 300 கோடி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.ஜி.கே விஷ்ணு'க... மேலும் பார்க்க

`LCU-வில் இணைந்த ரவி மோகன்' - லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய LCU-வில் அடுத்ததாக இணையவிருக்கும் திரைப்படம் 'பென்ஸ்'. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவ... மேலும் பார்க்க

திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் - பெண் தயாரிப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை

பெண் தயாரிப்பாளரை பலர் முன் மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்திய விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர்களான கதிரேசன், ராதாகிருஷ்ணன் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு... மேலும் பார்க்க

"அவர் எங்கள்மீது பொழிந்த அளவற்ற பாசம்..." - தாயார் மறைவு குறித்து அஜித் மற்றும் அவருடைய சகோதரர்கள்

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலை காலமானார். இவருக்கு வயது 85. உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் காலமானார். இவர் சென்னையில் அஜித்துடன் அவருடைய வீட்டில்தான் வசித்து... மேலும் பார்க்க

Karuppu: ரஜினியின் பாராட்டு, ஆமீர் கான் சூர்யாவுக்கு அனுப்பிய மெசேஜ்! - மகிழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் படத்திற்கு மக்களின் வரவேற்புக் கிட... மேலும் பார்க்க