செய்திகள் :

மனிதர்களைப் போல பூச்சிகளுக்கும் மன அழுத்தம் ஏற்படும்; ஆய்வில் வெளியான தகவல்

post image

எறும்புகள், தேனீக்கள், வண்டுகள் என சிறய வகை பூச்சிகளுக்கும் மனிதர்களைப் போலவே வலி, மகிழ்ச்சி மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்வுகள் இருக்கலாம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பூச்சிகள், உள்ளுணர்வு அடிப்படையில் மட்டுமே செயல்படும் என்றே கருதப்பட்டு வந்தது. அவை கூடு கட்டுகின்றன, உணவு சேகரிக்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன என்பதைத் தாண்டி, அவற்றிற்கு என்று தனிப்பட்ட உணர்வுகள் ஏதும் இருக்காது என்றுதான் கருதப்பட்டு வந்தது.

ஆனால் 'பிஎல்ஓஎஸ் பயாலஜி' (PLOS Biology - 2023) என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்துள்ளது.

Honey Bee

பூச்சிகளின் நரம்பு மண்டலம் மற்றும் மூளை அமைப்பு சிறியதாக இருந்தாலும், அவை உணர்வு நிலைகளை வெளிப்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முக்கியமாக ஆபத்தான நேரங்களில் அவை 'வலி' போன்ற உணர்வை அனுபவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும், இது வெறும் உடல் சார்ந்த எதிர்வினை மட்டுமல்லாமல் அவற்றின் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களின் மகிழ்ச்சி, சோகம் மற்றும் உந்துதலைக் கட்டுப்படுத்தும் டோபமைன் (Dopamine) மற்றும் செரோடோனின் (Serotonin) போன்ற வேதிப்பொருட்களே பூச்சிகளின் மூளையிலும் சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது பூச்சிகளுக்கும் அடிப்படை அளவிலான உணர்வுகள் இருப்பதற்கான அறிவியல் ஆதாரமாகக் கருதப்படுகிறது.

பூச்சிகளுக்கு காயம் ஏற்பட்டால், அவை அந்த வலியை நினைவில் கொள்வதாகவும், எதிர்காலத்தில் அதேபோன்ற சூழ்நிலை வந்தால் அதைத் தவிர்க்க முயற்சிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இது அவை வலியை வெறும் உணர்வாக மட்டும் பார்க்காமல், அதை அனுபவமாக மாற்றிக்கொள்வதை அதன் நடத்தைகள் மூலம் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

குரல் இனிது... ஆனால் குணம்? - ராஜதந்திரிகளான குயில்களின் மறுபக்கம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Amur Falcon: 150 கிராம்தான் எடை; இந்தியா டு சோமாலியா - 5 நாள்களில் 5000 கி.மீ பயணித்த அமூர் பருந்து

பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர் வலசை செல்வதை நாம் அறிவோம். இந்த வலசை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு சாகசங்கள் நிறைந்தது, சவாலானது, அதீத பொறுமையையும் உழைப்பையும் விடா முயற்சியையும்... மேலும் பார்க்க

சீனா: "இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 ஆண்டுகள் வாழலாம்" - சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு!

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ்வதற்கான ஆராய்ச்சிகள் குறித்து பேசியதாக பரபரப்பாக பேசப்... மேலும் பார்க்க

பாகுபலி ராக்கெட்: `இந்தியாவுக்கு மற்றொரு பெருமை' - விண்ணில் வென்ற செயற்கைகோள் குறித்து இஸ்ரோ தலைவர்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மாலை 5.26 மணிக்கு CMS-03, LVM3-M5 செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு எல்.வி.எம் 3 - எம்5 ராக்கெட் விண்ணை நோக்கிப் புறப்பட்டது.43.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் 18 ஆயிரம்... மேலும் பார்க்க