செய்திகள் :

'முதல் இந்தியர்' கிராண்ட் செஸ் டூரில் வென்ற பிரக்ஞானந்தா; ரூ.1.91 கோடி பரிசு!

post image

அமெரிக்காவில் கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் பிரக்ஞானந்தா.

இந்தப் பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற சாதனையும் பிரக்ஞானந்தாவிற்குச் சேர்ந்திருக்கிறது.

அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஃபேபியானோ கருவானாவை 15-13 என்ற கணக்கில் வீழ்த்தி இந்த வெற்றியைத் தட்டியுள்ளார் பிரக்ஞானந்தா.

இறுதிப் போட்டியின் தொடக்கம் பிரக்ஞானந்தாவிற்குச் சாதகமானதாக இருந்திருக்கவில்லை. அவர் அப்போது கருவானாவை விட 6 புள்ளிகள் பின்தங்கியே இருந்திருக்கிறார்.

பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா

இந்த நிலையில், கருவானாவுக்கு எதிரான இரண்டு ரேபிட் போட்டிகளில் வெற்றி பெற்று, தனக்கும் அவருக்குமான புள்ளி வித்தியாசத்தைப் பிரக்ஞானந்தா முதலில் சமன் செய்திருக்கிறார்.

அடுத்து நடந்த நான்கு பிளிட்ஸ் சுற்றுகளில் சிறப்பாக விளையாடி வெற்றியைத் தன் வசமாக்கியிருக்கிறார் பிரக்ஞானந்தா.

இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தாவிற்கு 2,00,000 டாலர் (சுமார் ரூ.1.91 கோடி) பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளார் பிரக்ஞானந்தா.

வாழ்த்துகள் பிரக்ஞானந்தா!

BWF உலக சாம்பியன்ஷிப்: இறுதி வரை போராடிய ட்ரீசா–காயத்ரி… வெண்கலம் வென்று அசத்தல்

புதுடெல்லி: உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டாலும், இந்திய பேட்மிண்டனுக்கு பெருமை சேர்த்திருக்கிறது ட்ரீசா ஜாலி–காயத்ரி கோபிசந்த் ஜோடி. சீனாவ... மேலும் பார்க்க

"வறுமையை உதைத்துத் தள்ளிய கால்பந்து வீரங்கனை"- ஸீனாவின் வரலாறு கேரள பாடத்திட்டத்தில் இடம்பிடித்தது!

கேரள மாநிலம், எர்ணாகுளம் சளிக்கம்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சி.வி.ஸீனா. தற்போது 56 வயதாகும் அவரது விடாமுயற்சி நிறைந்த வாழ்க்கை, கேரள அரசின் 11-ம் வகுப்பு மலையாளப் பாடப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.... மேலும் பார்க்க

BWF: உலக சாம்பியனையே வீழ்த்திய ஆயுஷ் ஷெட்டி; முதல் நாளிலேயே 5-க்கு 5; இந்தியாவின் மிரட்டல் தொடக்கம்!

புதுடெல்லியில் நடைபெற்று வரும் 2026 BWF உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி. ஆண்கள் ஒற்றையர் பிரிவ... மேலும் பார்க்க

ஆலப்புழா: கோப்பையின் பின்னால் மறைந்திருக்கும் நிதிச் சுமை; புகழ்பெற்ற படகுப் போட்டிகளின் மறுபக்கம்!

கேரளாவின் ஆலப்புழை மாவட்டம், கைனகரி கிராமத்தின் படகு சங்கம் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டது."முப்பத்தைந்து ஆண்டு இடைவெளி... ஒரே இரவில் கை நழுவிய சாம்பியன் அணி... ஆனாலும் தோற்றுப்போக மறுத்த ஒரு அணி!" — 2... மேலும் பார்க்க

மீண்டும் சர்வதேச டென்னிஸ் மேடையாகும் சென்னை... நவம்பரில் தொடங்குகிறது WTA 250!

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில், வரும் நவம்பர் 2 முதல் 8-ம் தேதி வரை WTA 250 சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும், மொத்தத்தில் மூன்... மேலும் பார்க்க

சேலம் விறகு வியாபாரியின் மகள் காமன்வெல்த் வாள்வீச்சில் வரலாற்றுச் சாதனை! யார் இந்த கனகலட்சுமி?

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் பரஞ்சோதி. விறகு வியாபாரியான இவரின் மகள் கனகலட்சுமி வாள்வீச்சில் திறமை வாய்ந்த வீராங்கனையாக சிறு வயது முதலே களமாடி வருகிறார். தமிழ்நாடு அளவில் நடைபெற்ற வாள்வீச்ச... மேலும் பார்க்க