சங்கே முழங்கு, ஜுஜு ஜாஜா நடனம், வீரர்களின் சாகசம்; சென்னையில் குடியரசு தின அணிவ...
ரெண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க சரி... ஆனா பணம் எங்க பாஸ்? தம்பதிகளே கவனியுங்க!
இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் 'Double Income' கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. கையில் நிறைய பணம் புழங்குகிறது. வார இறுதி மால்கள், ஆன்லைன் ஷாப்பிங், வருடத்திற்கு ஒருமுறை ஃபாரின் ட்ரிப், குழந்தைகளின் இன்டர்நேஷனல் பள்ளி படிப்பு... வாழ்க்கை வெளியில் இருந்து பார்க்க அமர்க்களமாகப் போவது போல் தோன்றலாம்.
ஆனால், இரவு தூங்கும் முன் ஒரு நிமிடம் கொஞ்சம் யோசியுங்கள். நீங்கள் நிஜமாகவே பணக்காரராகிக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது வாழ்க்கைச் செலவுகள் உங்கள் இருவரின் கடின உழைப்பையும் தின்று கொண்டிருக்கிறதா?
"மாதக் கடைசியில் அக்கவுண்ட் பேலன்ஸ் ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறது?" என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா?
SEBI-யின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 30-45 வயதுக்குட்பட்ட தம்பதியினரில் வெறும் 9.5% பேர் மட்டுமே முறையான நீண்ட கால நிதித் திட்டமிடலைச் (Financial Planning) செய்கிறார்கள். மீதமுள்ள 90% பேர், சம்பாதிப்பதும், EMI கட்டுவதும், செலவு செய்வதுமாகவே தங்கள் இளமையைக் கரைக்கிறார்கள். இது ஓர் ஆபத்தான போக்கு.

தம்பதியர் சந்திக்கும் 3 முக்கிய உளவியல் & நிதிப் பிரச்சனைகள் (The Hidden Traps):
வாழ்க்கைத் தர வீக்கம் (Lifestyle Inflation):
திருமணமான புதிதில் ஒரு சிறிய வாடகை வீட்டில், ஒரு பைக்கில் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். ஆனால் சம்பளம் உயர உயர, தேவைகளும் உயர்கின்றன. ஒரு சம்பளம் வீட்டுச் செலவுக்கு, இன்னொரு சம்பளம் EMI மற்றும் ஆடம்பரச் செலவுக்கு என மாறிவிடுகிறது. "பக்கத்து வீட்டுக்காரர் புது கார் வாங்கிவிட்டார், நம்மால் முடியாதா?" என்ற போட்டி மனப்பான்மை உங்களைச் சேமிக்க விடாமல் தடுக்கிறது.
தள்ளிப்போடும் நோய் (The "Later" Syndrome):
"இன்னும் குழந்தை சின்னதுதானே, படிப்புக்கு அப்புறம் சேர்க்கலாம்", "ரிட்டயர்மென்ட்க்கு இன்னும் 20 வருஷம் இருக்கு, இப்பவே என்ன அவசரம்?" என்ற அலட்சியம். 30 வயதில் மாதம் ₹10,000 முதலீடு செய்வது, 45 வயதில் ₹1 லட்சம் முதலீடு செய்வதற்குச் சமம் என்பதைப் பலர் உணர்வதில்லை. காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நாளும், நீங்கள் உங்கள் ஓய்வுக்கால நிம்மதியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பொதுவான இலக்கின்மை (Lack of Common Goal):
கணவன் ஒரு கணக்கு, மனைவி ஒரு கணக்கு எனத் தனித்தனியாகச் செயல்படுவது. கணவன் பங்குச்சந்தையில் ரிஸ்க் எடுப்பார்; மனைவி பயந்துபோய் தங்கத்தில் போடுவார். இருவருக்கும் இடையே ஓர் ஒத்திசைவு இருக்காது. இதனால், 'யார் எதற்காகச் சேமிக்கிறோம்?' என்ற தெளிவு இல்லாமல் பணம் பல திசைகளில் சிதறி கரைகிறது.
தீர்வு: 15 வருடத்தில் விரைவான ஓய்வுக்காலம் சாத்தியமே!
உங்கள் இருவருடைய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் (உதாரணமாக 30-40%) சரியான முறையில் இணைத்து முதலீடு செய்தால், அடுத்த 10-15 வருடங்களில் நீங்கள் வேலையை விட்டுவிட்டு நிம்மதியாக ஓய்வெடுக்கலாம். இதைத்தான் ஃபினான்ஷியல் இண்டிபெண்டன்ஸ் ரிட்டையர் இயர்லி (FIRE - Financial Independence Retire Early) என்று கூறுகிறார்கள்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்?
கடன் இல்லாத வாழ்க்கை: வீட்டுக் கடனை 20 வருடத்திற்கு இழுக்காமல், ஸ்மார்ட் ப்ரீ-பேமென்ட் (Smart Pre-payment) மூலம் 10 வருடத்திற்குள் முழுமையாக அடைத்துவிடுதல்.
குழந்தைகளின் எதிர்காலம்: படிப்புச் செலவு 10% உயர்ந்தாலும், கவலைப்படாத அளவுக்கு ஈக்விட்டி சார்ந்த ஒரு பெரிய 'கார்பஸ்' (Corpus) நிதியை உருவாக்குதல்.
இரண்டாவது வருமானம்: வேலைக்குப் போகாமலே, உங்கள் முதலீடு உங்களுக்கு மாதம் மாதம் சம்பளம் தரும் SWP (Systematic Withdrawal Plan) முறையை அமைத்தல்.
இதை அடைய மந்திரம் தேவையில்லை; சரியான 'சொத்து பரவலாக்கல் திட்டம்' (Asset Allocation Strategy) இருந்தாலே போதும்.

உங்களுக்கான ஒரு மகிழ்ச்சியான பாதை!:
கற்பனை செய்து பாருங்கள்... உங்கள் வயது 50. பிள்ளைகள் கல்லூரியில். கையில் கடன் இல்லை. நீங்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. நீங்கள் விரும்பியதைச் செய்யவும், உலகத்தைச் சுற்றி வரவும், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவும் உங்களுக்கு முழுச் சுதந்திரம் இருக்கிறது. இந்த வாழ்க்கை சாத்தியமே - ஆனால் அதற்கு நீங்கள் இன்றே ஒரு சிறு மாற்றத்தைச் செய்ய வேண்டும்.
உங்கள் 30s மற்றும் 40s காலத்தை வீணடிக்காதீர்கள். இதுதான் பணத்தைச் சேர்க்கும் 'தங்க காலம்' (Golden Era of Wealth Creation). இதைத் தவறவிட்டால், 60 வயது வரை, உடல் தளர்ந்த பிறகும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த நிலை உங்களுக்கு வேண்டுமா?
உங்கள் இருவருடைய உழைப்பையும் ஸ்மார்ட்டாக மாற்றுவது எப்படி? வாருங்கள், விரிவாக விவாதிப்போம்.

'லாபம்' வழங்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு விவரம்:
தலைப்பு: இரட்டைச் சம்பளம் பெறும் தம்பதியர் - விரைவாக ரிட்டைர்மென்ட் பெற்று வாழ்வை மகிழ்வது எப்படி?
நாள்: ஜனவரி 28, 2026, புதன்
நேரம்: மாலை 07 மணி - இந்திய நேரம்
பேச்சாளர்: ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்
முக்கியம்: வெறும் 75 இடங்கள் மட்டுமே! (தம்பதியராகக் கலந்துகொள்வது சிறந்தது).
பெயரை முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-jan28-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_jan28_2026



















