செய்திகள் :

வத்தலக்குண்டு: ரௌடியைச் சுட்டுப் பிடித்த போலீஸ் - பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?

post image

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள சிக்கனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (54). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர்மீது இரட்டை கொலை வழக்கு உட்பட 26 குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பிணையில் வந்துள்ள ரௌடி ராஜா, கொலை வழக்கில் தனக்கு எதிரான சாட்சிகளை மிரட்டுவதாக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்குப் புகார் வந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார், ரௌடி ராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தேர்தல் வேட்டையில் ரௌடி ராஜா வத்தலகுண்டு அருகே என்.கோவில்பட்டி கிராமம் தோட்டப் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து சப் இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் தலைமையிலான போலீஸார், ரௌடி ராஜாவை சுற்றி வளைத்தபோது ராஜா கைகளில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு போலீஸாரைத் தாக்க முற்பட்டுள்ளார்.

அதில் காயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத், தற்காத்துக் கொள்ள ரௌடி ராஜா மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் ரௌடி ராஜாவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனை அடுத்து காயமடைந்த ரௌடி ராஜா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் ஆகியோர் இருவரும் மீக்கப்பட்டு, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு மாவட்டக் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மதுரை: 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு; கொலை வழக்காக பதிவுசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்டம், ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற பள்ளி மாணவரின் சடலம் முட்புதர் குட்டையில் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவி... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் ரீல்ஸ் செய்த மகள்; மகனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற தந்தை; குஜராத்தில் கொடூரம்

குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்த சோபியா பரூக்(22) என்ற பெண், மூன்று மாதங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது. அப்பெண... மேலும் பார்க்க

திருடுவதே தொழில்; மனைவிக்கும் கைவரிசையைக் கற்றுக்கொடுத்த கணவன் - போலீஸில் சிக்கிய பின்னணி!

வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா. கடந்த மாதம் 27-ம் தேதி மரியா தனது கணவர் ரவிக்குமாருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் வீட்டுக்குச் சென்றார். ப... மேலும் பார்க்க

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க