செய்திகள் :

விசிக: `ஸ்டாலின் அண்ணனின் மனசாட்சிக்குத் தெரியும்' - தொல்.திருமாவளவனின் உருக்கம்

post image

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோவையிலிருந்து தன் தொண்டர்களுடன் முகநூல் லைவ் மூலம் உரையாடினார். அந்த உரையில், ``அரசியல் நெருக்கடியை உணர்ந்துதான் தவெக அரசுக்கு நம் ஆதரவை வழங்கியிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்றக் கூட்டணியில் இருந்திருக்கிறோம். எனவே, நம் முடிவுகள் குறித்து விமர்சனம் எழுவது இயல்பு, அதை தவிர்க்க முடியாது. இதில் வருந்தவோ, அல்லது ஆத்திரப்படவோ கூடாது.

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிப்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதை வெற்றிகரமாக முறியடித்தோம். இஸ்லாமிய, கிறிஸ்த வாக்குகளை பெருமளவில் தவெக பிரிக்கும். இதனால் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழக்கும் என்ற கணிப்பு நம்மிடம் இருந்தது.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

நானும் தமிழ்நாடு அரசியலில் தீவிரமாக இயங்க வேண்டும் என தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்தேன். ஆனால், தேர்தல் முடிவு எதிர்பார்க்காத வகையில் அமைந்தது. அதன் பிறகே தீவிர ஆலோசனைக்குப்பிறகு வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டுக்கு வந்தோம். இதற்கு இடையில்தான் என் மீது பேரம் பேசுகிறார், துணை முதல்வராக கேட்கிறார், முதல்வராக முயற்சிக்கிறார் என்றெல்லாம் அவதூறுகளை அள்ளி வீசினார்கள். கரூரில் 41 பேர் இறந்தபோது ஆதவ் அர்ஜுனாவை தொடர்புகொண்டு பேசி, நடந்தவைகள் குறித்து விசாரித்து, ஆறுதல் கூறினேன். விஜய்யிடன் மனம் தளரவேண்டாம் எனக் கூறச்சொன்னேன்.

சமீபத்தில் ஆ.ராசா நம் மீது விமர்சனம் முன்வைத்தார். காங்கிரஸ், இடதுசாரிகள் என பலரும் அணி மாறிய நிலையில், நம் மீதுதான் இப்படியான விமர்சனம் வைத்திருக்கிறார். ஆதரவு நிலைப்பாடு எடுத்தபோது அண்ணன் ஸ்டாலினிடம் பேசிவிட்டுதான் ஆதரவு தெரிவித்தோம். ஆனால், அமைச்சரவை இடம்பெறும்போது அண்ணன் ஸ்டாலிடன் பேசவில்லை. ஆனால், சில முன்னணி முன்னாள் அமைச்சர்களிடம் பேசி தகவல் தெரிவித்தோம். நாம் எடுத்த இந்த முடிவை ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட சிலர் புரிந்துகொண்டார்கள்.

திருமாவளவன், ஸ்டாலின்
திருமாவளவன், ஸ்டாலின்

ஆனால், ஆ.ராசா போன்ற பலருக்கு இதில் உடன்பாடு இல்லை என்பது புரிகிறது. எனவே, அவர்களின் ஆதங்கத்தில் ஒரு நியாயம் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, திமுகவுக்கு எதிராக விமர்சனமோ, அல்லது போராட்டமோ தேவையற்றது. நம் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும். நம் மீது விமர்சிப்பவர்கள் எப்போதும் விமர்சனங்களை பேசிவருகிறார்கள். விசிக மதச்சார்பற்ற கூட்டணிக்கு எவ்வளவு உண்மையாக இருந்தது என்பது ஸ்டாலின் அண்ணனின் மனசாட்சிக்குத் தெரியும். எனவே, நாம் தேவையற்ற கவனச் சிதறல்களைத தவிர்ப்போம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தவெக: ``அரசு குடியிருப்பு வழங்குவதில் சாதிய பாகுபாடு காட்டுவதா?" - மா.சுப்ரமணியன் கடும் தாக்கு!

சென்னை சைதாப்பேட்டையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, த.வெ.க எம்.எல்.ஏ அருள் பிரகாசம் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீடுகள... மேலும் பார்க்க

கர்னூல் : `எங்கள் மகளின் மரணத்தை அரசியலுக்குதான் பயன்படுத்தினீர்களா' - பவன் கல்யாண் மீது சாடும் தாய்

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், தங்கள் மகளின் மரணத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டு, தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு நீதியை வழங்கத் தவறிவிட்டார் என்று 2017-ல் கர்னூலில் பாலியல் ... மேலும் பார்க்க

பக்ரீத்: `வாங்குபவர் இல்லை... விற்கவும் வழியில்லை' - சிக்கலில் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம்!?

பக்ரீத்இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) ஈதுல் அழ்ஹா எனும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இறைத்தூதராகக் கருதப்படும் இப்ராஹிம் (ஆபிரஹாம்) நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், ... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: ``உதயநிதி ஸ்டாலின் ஏன் Silent Mode-ல் இருக்கிறார்?" - மாணிக்கம் தாக்கூர் MP கேள்வி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதற்கு எதிரான தமிழ்நாடு அரசின், தீர்ப்பு மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தச் சூழலில், அங்கு விரைவில் பூமி பூஜை நட... மேலும் பார்க்க

டெல்லி செல்லும் முதல்வர் விஜய்; பிரதமரிடன் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்னென்ன? | News Today Live Update

பசுவதை: அவசரமாக விசாரிக்க முடியாதுஉச்ச நீதிமன்றம்பசுவதைக்கு எதிரான சட்டங்களை நாடு முழுவதும் உறுதியாக அமல்படுத்தக் கோரி, அகில பாரத இந்து மகாசபாவின் முன்னாள் துணைத்தலைவர் சதீஷ்குமார் அகர்வால் உச்ச நீதிம... மேலும் பார்க்க