செய்திகள் :

கேரளம்: 'அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை வீடியோவாகப் பதிவிட்டால் ரூ.5000 பரிசு' - 'Project Zero' திட்டம்

post image

கேரள மாநிலத்தில் ஊழலை முற்றிலும் ஒழிக்க 'புராஜெக்ட் ஜீரோ'  திட்டத்தை உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தொடங்கி வைத்தார்.

ஊழலின் அடையாளச் சங்கிலியை அறுத்து, புராஜெக்ட் ஜீரோ திட்டத்தை ரமேஷ் சென்னிதலா தொடங்கி வைத்தார். இதில் விஜிலென்ஸ் டி.ஜி.பி மனோஜ் ஆபிரகாம், உள்த்துறை அமைச்சரின் காவல்துறை ஆலோசகர் ஏ.ஹேமச்சந்திரன், விஜிலென்ஸ் ஐ.ஜி. தாம்சன் ஜோஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களின் ஒத்துழைப்புடன் ஊழலை முழுமையாக ஒழிப்பதே லஞ்ச ஒழிப்புத்துறை அமைப்பின் முயற்சியாகும். ஊழல் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஊழல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு சேவைகளுக்கு பணம் கொடுப்பதை மக்கள் நிறுத்த வேண்டும். ஊழல்வாதிகள் குறித்த தகவல்களைத் தைரியமாக வழங்க வேண்டும். அரசு ​துறைகளிலும் கூட்டுறவுத் துறையிலும் விஜிலென்ஸ் கண்காணிப்பு வலுப்படுத்தப்படும்.

அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி விரைவாகப் பெறுவதற்காக துறைத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஊழல்வாதிகளான அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா
செய்தியாளர்களிடம் பேசிய கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா

பெரும்பாலான ஊழல்களை மக்கள் வெளியில் சொல்வதில்லை. ​ஊழல் பரிவர்த்தனைகளை வீடியோவாகப் பதிவு செய்து விஜிலென்ஸிடம் ஒப்படைப்பவர்களுக்கு 5,000 ரூபாய் வெகுமதி வழங்கப்படும். யார் வேண்டுமானாலும் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்து அதற்கான இணையப் பக்கத்தில் (போர்ட்டலில்) சமர்ப்பிக்கலாம்.

ஆதாரங்களை ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னர் வெகுமதி வழங்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். விசாரணை அதிகாரிகளுக்குப் பாதுகாப்பும் சுதந்திரமும் உறுதி செய்யப்படும். ஊழலை வெளிக்கொண்டு வரப் பாடுபடும் ஆர்வலர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். ​

பொதுமக்கள் ஊழல்வாதிகள் பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதற்காக மொபைல் செயலியும், இணையப் பக்கமும் தயார் செய்யப்படும். 24 மணி நேரமும் டிஜிட்டல் முறையில் புகாரளிக்கலாம். ​

புகார்களைப் பகுப்பாய்வு செய்வதற்கும், சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகளைக் கண்டறிவதற்கும், ஊழல்வாதிகளின் முகங்களை அடையாளம் காண்பதற்கும், ஊழல் ஆவணங்களைக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

ஊழலின் அடையாளச் சங்கிலியை அறுத்து, புராஜெக்ட் ஜீரோ திட்டத்தை தொடங்கி வைத்தார் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா

சைபர் விஜிலென்ஸ் பிரிவும், கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான புகாரளிக்கும் முறையும், ஒருங்கிணைந்த வழக்கு மேலாண்மை அமைப்பும் உருவாக்கப்படும். ​சமூக விஜிலென்ஸ் தன்னார்வலர்களும் தயார் செய்யப்படுவார்கள்.

சமூக ஊடகப் பிரசாரங்களும், கேம்பஸ்களில் ஊழல் எதிர்ப்பு கிளப்களும் அமைக்கப்படும். கடந்த​ ​ஐந்து ஆண்டுகளில் ஊழல் வழக்குகளில் விஜிலென்ஸ் அமைப்பிடம் 1,564 அதிகாரிகள் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு எதிராக 734 வழக்குகள் உள்ளன.

இவர்களிடமிருந்து கூடுதல் அபராதம், ராயல்டி, வரி போன்ற பிரிவுகளில் 13,72,06,764 ரூபாய் வசூலிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 57 வழக்குகளில் 62 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அதில் வருவாய்த் துறையில்தான் மிக அதிகம். தற்போது ஊழல்வாதிகளான சுமார் எழுநூறு அதிகாரிகள் விஜிலென்ஸ் கண்காணிப்பில் உள்ளனர்" என்றார்.

கோவை: 'Master Command and Control Centre' - காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு மையம் | Photo Album

மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்ட... மேலும் பார்க்க

யார் அடுத்த சட்ட ஒழுங்கு டி.ஜி.பி?- 3 பேர் பட்டியல் ரெடி; முதல்வர் விஜய்-ன் கிரீன் சிக்னல் யாருக்கு?

தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவி இருந்து வருகிறது. இந்தப் பதவிக்கு தகுதியான சீனியர் டி.ஜி.பி-க்களில் மூன்று அல்லது 5 பேரை மத்திய அரசின் யு.பி.எஸ... மேலும் பார்க்க

சிறு குறு, பெரு விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு! - யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்ப... மேலும் பார்க்க

வெறும் 11 நாள்களில், பெட்ரோல், டீசல் விலை நான்கு முறை உயர்வு; கிட்டத்தட்ட ரூ.7 உயர்ந்தது!|Timeline

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் போர் தொடங்கியது. அன்றிலிருந்தே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்படவில்லை. கடைசியாக, 2022-ம் ஆண்... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; சென்னையில் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

கிட்டத்தட்ட 10 நாள்களில், பெட்ரோல், டீசல் விலை இன்றுடன் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஈரான் போர் தொடங்கி வரும் வியாழக்கிழமையோடு (மே 28), மூன்று மாதங்கள் ஆகப் போகின்றன. பெட்ரோல், டீசல்இந்தியாவ... மேலும் பார்க்க

"பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம்; முதுகில் குத்துவிட்டார்கள்!" - சாடும் உதயநிதி ஸ்டாலின்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக உடனான கூட்டணியில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டிக்கு ஆதரவு வழங்குவதாக, தவெ... மேலும் பார்க்க