செய்திகள் :

"அகந்தை அகன்றது, அன்பு வென்றது" - 10 ஆண்டு காலத் தனிமைக்கு முற்றுப்புள்ளி - இயக்குநர் பிரியதர்ஷன்

post image

இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோயினி படமாக வெளியானது லோகா. இந்தப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் முக்கிய நாயகியாக வலம் வருபவர் நடிகை கல்யாணிப் பிரியதர்ஷன். இவருடைய அப்பா இயக்குநர் பிரியதர்ஷன் பல மெகா ஹிட் படங்களை இயக்கியவர். இவரும் நடிகை லிஸியும் 1990-ல் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு கல்யாணி, சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். இதற்கிடையில், சுமார் 24 ஆண்டுகால வாழ்க்கைக்குப் பிறகு 2014-ல் இந்த தம்பதியினர் விவாகரத்து கோரி விண்ணப்பித்தனர். 2016-ல் இவர்களது விவாகரத்து முறைப்படி முடிவுக்கு வந்தது.

கல்யாணி பிரியதர்ஷன்

இந்த நிலையில், தற்போது பிரியதர்ஷனும் லிஸியும் சேர்ந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த இயக்குநர் பிரியதர்ஷன், ``நாங்கள் 32 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். இடையில் சலிப்பும், ஈகோவும் எங்களை ஆட்கொண்டன. அதனால் யார் பெரியவர் என்ற விவாத்தாலேயே பிரிந்தோம். ஆனாலும், எங்களுக்குள் ஒரு உண்மையான காதல் எங்கோ மறைந்திருந்தது. வயதான காலத்தில் ஒரு துணை மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து மீண்டும் சேர்ந்தோம். இது மிகவும் எளிமையான முடிவு. தற்போதைக்கு மறுமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை. நாங்கள் ஒரு தம்பதியாகவே வாழ்ந்து வருகிறோம்." என்றார்.

இந்தத் தம்பதியினர் மீண்டும் இணைவதற்கு இவர்களது பிள்ளைகளான நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சித்தார்த் ஆகியோர் முக்கியப் பங்காற்றியுள்ளனர். கடந்த 6 முதல் 8 மாதங்களுக்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள லிஸியின் ஸ்டுடியோவிற்கு நடிகர் மம்மூட்டி நேரில் வந்து, இந்த தம்பதியினரைச் சந்தித்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பிரியதர்ஷன் தற்போது அக்‌ஷய் குமார் நடிப்பில் 'பூத் பங்களா' என்ற பட வேலையில் பரபரப்பாக இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Drishyam 3: "என் படங்கள் மெகா சீரியல்கள்போல் இருக்கிறதா?" - பதிலடி தந்த இயக்குநர் ஜீத்து ஜோசப்

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில், 'திரிஷ்யம் 3' திரைப்படம் மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மோகன்லால் நடிப்பில் வெளியான இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் மெகா ஹிட் ஆன நிலையில், மூன்றாம்... மேலும் பார்க்க

Mohanlal: "நாளை நானும் மறைந்துவிடுவேன்; அதுதான் யதார்த்தம்!" - மோகன்லால் உருக்கம்

நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், மலையாளத்தில் வெளிவரும் 'கிருஹலட்சுமி' இதழுக்க... மேலும் பார்க்க

புதுமுகங்களை வைத்து வசூலை அள்ளிய வாழ 2; உடனடியாக அறிவிக்கப்பட்ட 'வாழ 3' - நெகிழும் இயக்குநர்

மல்லுவுட்டில், 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே', 'குருவாயூர் அம்பலநடையில்' போன்ற திரைப்படங்களை இயக்கி அனைத்துப் பக்கமும் அறியப்பட்டவர் இயக்குநர் விபின் தாஸ். 'குருவாயூர் அம்பலநடையில்' திரைப்படத்திற்குப் பிறகு இவர... மேலும் பார்க்க

"பேசில் ஜோசப்பிற்காக எதையும் செய்ய தயங்க மாட்டேன்" - டொவினோ தாமஸ் நெகிழ்ச்சி

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் ஆகியோர் நடித்திருக்கும் ‘பள்ளிச்சட்டாம்பி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பள்ளிச்சட்டம்பிஇப்படத்தின் ரிலீஸையொட்டி பல்வேறு இடங்களிலும் படக்கு... மேலும் பார்க்க

மேஜர் ரவி முதல் அஞ்சலி நாயர் வரை! - கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கும் திரைப்பிரபலங்கள்

கேரளாவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3 மணி வரையிலான நிலவரப்படி, 62 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு தேர்தலிலும் நடிகர்கள் பலரும் புதிதாக அரசி... மேலும் பார்க்க

Mammootty: " `லோகா' படத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" - மம்மூட்டி கலகல

18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை 'சீ யூ சூன்', 'மாலிக்' போன்ற திரைப்படங்களை இய... மேலும் பார்க்க