செய்திகள் :

அஜித் தோவலுடன் சீன அமைச்சர் பேச்சு!

post image

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி தெரிவித்ததாக சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியது.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு வாரமாக மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், இன்று போர் நிறுத்தத்துக்கு இரு நாடும் ஒப்புதல் அளித்தது.

இருப்பினும், இன்றிரவு பாகிஸ்தான் ஒப்புதலை மீறி தாக்குதல் நடத்தியதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அஜித் தோவலுடன் பேசியது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

”மே 10, 2025 அன்று, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் உறுப்பினரும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான வாங் யி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவலுடன் தொலைபேசியில் உரையாடினார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்வது அவசியம் என்றும் தோவல் கூறினார். போர் இந்தியாவின் விருப்பம் அல்ல, எந்தத் தரப்பினரின் நலன்களுக்கும் உகந்ததல்ல. இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உறுதிபூண்டு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க எதிர்நோக்குகின்றன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை சீனா கண்டிப்பதாகவும், அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி கூறினார். ஆசியாவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் கடின உழைப்பால் ஏற்பட்டது, மேலும் போற்றப்பட வேண்டியவை. இந்தியாவும் பாகிஸ்தானும் தவிர்க்க முடியாத சீனாவின் அண்டை நாடுகள். போர் இந்தியாவின் விருப்பம் அல்ல என்ற அஜித் தோவல் தெரிவித்ததை சீனா பாராட்டுகிறது.

மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி காத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைக் கையாண்டு நிலைமை மோசமடைவதைத் தவிர்க்கும் என்று சீனா நம்புகிறது. இரு நாடுகளும் போரை நிறுத்துவதை சீனா ஆதரிக்கிறது மற்றும் எதிர்பார்க்கிறது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அடிப்படை நலன்களுக்காகவும், சர்வதேச சமூகத்தின் பொதுவான விருப்பமாகவும் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூர் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மணிப்பூர் மாநிலத்தில் மிரட்ட... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது!

போர் நிறுத்தத்தால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீரில் நள்ளிரவில் பாகிஸ்தான் எந்தத் தாக்குதலும் நடத்தாத நிலையில், அப்பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பி... மேலும் பார்க்க

ஜம்முவில் வீட்டை தகா்த்த குண்டு: அபாய எச்சரிக்கை ஒலியால் உயிா் தப்பித்த குடும்பம்!

ஜம்முவில் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் விதமாக அபாய ஒலி எழுப்பப்பட்டதால், வீட்டில் இருந்து ஒரு குடும்பம் சனிக்கிழமை அதிகாலை வெளியேறியது. இதைத் தொடா்ந்து சில நிமிஷங்களில், அந்த வீடு பாகிஸ்தான் வீசிய ... மேலும் பார்க்க

எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்: இந்தியா எச்சரிக்கை

‘இந்திய மண்ணில் வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராகவே கருதப்படும்’ என இந்தியா சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தப்படுவதாக ... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: அனைத்துக் கட்சிக் கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு!

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை விரைவில் நடத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியு... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம் அழிப்பு: பிஎஸ்எஃப்

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம் முழுமையாக அழிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறுகைய... மேலும் பார்க்க