செய்திகள் :

அஜித் பவார் : `காரணத்தை அறிய அனைவரும் விரும்புகிறார்கள்' - விமான விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை

post image

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த மாதம் 28ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து சந்தேகம் கிளப்பிய சரத் பவார் பேரன் ரோஹித் பவார், விமான விபத்து குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ராவும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து தனது கணவரின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து அஜித் பவாரின் மரணம் மற்றும் விமான விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்கும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ''துணை முதல்வர் அஜித் பவாரின் துயர மரணத்திற்கு வழிவகுத்த விமான விபத்து குறித்து சிபிஐ விசாரிக்கும்.

பட்னாவிஸ்

இது குறித்து நான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசியுள்ளேன். விசாரணையை சிபிஐ செய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்துள்ளது''என்று தெரிவித்தார்.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் பவார் உட்பட சிலர் விமான விபத்தில் சதி இருப்பதாக தெரிவித்து இருப்பது குறித்து பட்னாவிசிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "நடந்தது துரதிர்ஷ்டவசமானது மற்றும் அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற ஒரு துயர சம்பவத்திற்கு என்ன காரணம் என்பதை அனைவரும் அறிய விரும்புகிறார்கள். மேலும் உண்மைகள் வெளிவர வேண்டும். சம்பவம் நடந்த உடனேயே விமான போக்குவரத்து துறை ஆணையம் மற்றும் சி.ஐ.டி விசாரணையைத் தொடங்கி விட்டது. ஆனால் இப்போது தேசியவாத காங்கிரஸ் கோரியபடி சி.பி.ஐ விசாரணைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்" என்றார்.

அஜித் பவாரின் விமானம் விபத்துக்குள்ளானது குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கை வரும் 28ம் தேதிக்குள் வெளியாகும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் முரளிதர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி கூட்டத்தை புறக்கணித்த சரத்பவார் கட்சி

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணைய இருப்பதாக செய்தி வெளியான நிலையில், நேற்று மகாராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று தொடங்கும் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து கலந்து ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

அமெரிக்காவின் அழுத்தம்; போதைப்பொருள் கடத்தல் மன்னன் மெக்சிக்கோவில் சுட்டுக்கொலை - வெடித்த கலவரம்

மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தலுக்கு மிகவும் பெயர் பெற்றது. அங்கு போதைப்பொருள் கடத்தலில் நெமேசியோ ஒசேகுரா ரூபன் செர்வாண்டஸ் என்று அழைக்கப்படும் எல் மென்ச்சோ என்பவன் தான் போதை பொருள் கடத்தலில் கொடிகட்ட... மேலும் பார்க்க

கைவிட்ட தாய்... அரவணைத்த பொம்மை; இதயங்களை வென்ற குட்டிக் குரங்கு உணர்த்தும் வாழ்க்கை பாடம்!

ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 'பஞ்ச்' என்ற ஜப்பானிய மக்காக் குரங்கு குட்டி பிறந்தது. பொதுவாக குரங்கு குட்டிகள் பிறந்தவுடன் தனது தாய... மேலும் பார்க்க

AI மாநாடு: `காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் சதி' - ராகுல் காந்திக்கு எதிராக கருப்புகொடி காட்டிய பாஜக

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது மும்பை அருகில் உள்ள பீவாண்டியில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று பீவாண்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ர... மேலும் பார்க்க

சூப்பர் சென்னை: தொலைநோக்கு பார்வையாளர்களை ஒன்றிணைத்த அறிமுக சூப்பர் சென்னை மாநாடு

சென்னையின் எதிர்காலத்தை வடிவமைப்பது குறித்த ஒரு நாள் முழுவதும் நடைபெறும் உரையாடலுக்காக தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்கள், தொழில் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் நகர்ப்புற த... மேலும் பார்க்க

"பேஸ்புக் காதலனோடு வாழ விரும்புகிறேன்" - சேர்த்து வைத்த கணவன்; உத்தரப்பிரதேசத்தில் நடந்த சுவாரஸ்யம்!

உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்பூர் பகுதியைச் சேர்ந்த பீரு என்பவர் முஜாபர் நகரைச் சேர்ந்த சோனி (23) என்ற பெண்ணைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கி... மேலும் பார்க்க

பிரியாணி பில்களால் வெளிச்சத்திற்கு வந்த ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு! - AI ஆய்வில் வெளியான அதிர்ச்சி!

நாடு முழுவதும் உணவக உரிமையாளர்கள் பில்களில் மோசடி செய்து ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததை, சமீபத்தில் வருமான வரித்துறை கண்டுபிடித்து இருக்கிறது. இதையடுத்து மேற்கொண்டு அனைத்து உணவகங்கள், ... மேலும் பார்க்க