செய்திகள் :

அடுத்தடுத்து இரண்டு கொலைகள்; நாகையில் பரபரப்பு - நேரில் ஆய்வு செய்த எஸ்.பி!

post image

நாகப்பட்டினத்தில் வெவ்வேறு இடங்களில் மீனவர் மற்றும் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகை ரயில் நிலையம் அருகே உள்ள அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் அருண் (38). இவர் கேரளாவில் தங்கி மீன்பிடித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தாயின் இறப்பிற்கு இறுதிச்சடங்கு செய்ய நாகை வந்துள்ளார்.

மீன்பிடிக்க தடைக்காலம் என்பதால் நாகையிலேயே தங்கியும் உள்ளார். இந்நிலையில் தான் நேற்றைய தினம் நாகை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிற்கும் பிளாட்பாரத்தில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மற்றொரு சம்பவமானது, நாகை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கீழ்வேளூரைச் சேர்ந்த சித்ரா (40) என்பவர் ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவர், மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு தாக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இரண்டு கொலை சம்பவங்களுமே அரசு மருத்துவமனையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

இந்தக் கொலைகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் சென்று ஆய்வு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளின் மூலம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் நடந்த அடுத்தடுத்த கொலைச் சம்பவங்கள் நாகை மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை... அம்பத்தூரில் பயங்கரம்!

சென்னை அம்பத்தூர், சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). இவரின் கணவர் தாமோதரன். சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதியினருக்கு 6 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும... மேலும் பார்க்க

திருவள்ளூர்: லிஃப்ட் கேட்ட பெண்ணுக்கு இருட்டில் பாலியல் தொல்லை... இளைஞரைத் தேடும் போலீஸ்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, பணி முடித்து விட்டு வீட்டுக்குச் செல்ல 40 வயதாகும் பெண் ஒருவர் ஆமூர் ஏரிக்கரை சாலை பகுதியில் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் சென்ற இளைஞரிடம் லிஃப்ட் கேட... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மின்கசிவால் சிறுவன் உயிரிழப்பு; மின்சாரத் துறையின் அலட்சியமா? என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரின் 8 வயது மகன் உதய சுதர்சன். இச்சிறுவன் பள்ளி கோடை விடுமுறைக்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவடிப்பிறை தெருவில் உள்ள ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: “யார் பெரிய ஆள்?" - மதுபோதையில் இரு தரப்பினர் மோதல்; ஒருவர் கொடூரக் கொலை

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்னோவின். இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடியில் அம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த திருநங்கை ஒருவரைக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள... மேலும் பார்க்க

ராமேஸ்வரம் கோயில் இலவச லட்டு பிரசாதத்தில் ரூ.3.40 கோடி சுருட்டல் - ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்!

புனித தலமான ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு தனியார் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த பிரசாத உரிமம் ... மேலும் பார்க்க

திருச்சி: சொத்து கேட்டு தாயைத் தாக்கிய மகன்; ஆத்திரத்தில் இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற தந்தை

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புறத்தாக்குடி கிராமம், நோவா நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது: 52). அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க