செய்திகள் :

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

post image

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர்.

இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தது அதானி குழுமம்.

இந்தச் சம்பவம் 2020-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2021-ம் ஆண்டு ஜூலை வரை நடந்தது என்று 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டது.

அதானி குழுமம்
அதானி குழுமம்

இவரது பதிவுகள் அதானி குழுமத்தின் புகழைக் கெடுப்பதோடு, முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அதானி குழுமம் புகார் எழுப்பியிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டை ரவி நாயர் மறுத்து வந்தார். பொது வெளியில் இருக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே தனது பதிவுகளும், செய்திக் கட்டுரைகளும் எழுதப்பட்டது என்று வாதாடினார் இவர்.

இந்த வழக்கிற்கான தீர்ப்பைச் சமீபத்தில் வெளியிட்டது குஜராத் நீதிமன்றம்.

அந்தத் தீர்ப்பில், "குற்றம் சாட்டப்பட்டவரின் பதிவுகள் மற்றும் செய்திக் கட்டுரைகள் எந்தவொரு ஆய்வுமின்றி வெளியிடப்பட்டுள்ளது.

அவை அதானி குழுமத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறது. இது அதானி குழுமத்தின் புகழைக் கெடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

அதனால், நாயர் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: எகிறும் தங்கம் விலை; சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் பக்கம் திரும்பிய கேரள மாஃபியா கும்பல்!

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கிழக்கிந்திய கம்பெனி மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள்‌, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் ... மேலும் பார்க்க

ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டும் பிஷ்னோய் கேங்க்! - பாதுகாப்பு அதிகரிப்பு

குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தான். அதோடு சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமான மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை ல... மேலும் பார்க்க

நடுரோட்டில் இளம்பெண் சுட்டுக்கொலை; விபரீதத்தில் முடிந்த முக்கோணக் காதல்; பெண் கைதான பின்னணி என்ன?

மும்பை கோவண்டி பகுதியைச் சேர்ந்த ஷிபாஷேக் (19) என்ற பெண் தனது வீட்டில் இருந்து மாலை நேரத்தில் தேநீர் அருந்துவதற்காக வெளியில் வந்தார். அப்பெண்ணை யாரோ மர்ம நபர் துப்பாக்கியால் அருகில் இருந்து சுட்டனர்.இ... மேலும் பார்க்க

சென்னை: தாய் தற்கொலை; மருத்துவமனையில் மகன் - வெளிநாட்டிலிருந்து வந்ததும் விபரீத முடிவு!

உத்தரப்பிரதேசம், நொய்டாவைச் சேர்ந்தவர் நீராஜ் ஜெயின். இவர், சென்னையில் டிராக்டர் கம்பெனியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சோனாலி. இந்தத் தம்பதியினருக்கு கிஷிதிஜ் என்ற மகன் உள்ளார். இ... மேலும் பார்க்க

விழுப்புரம்: `கரண்ட் வேணும்னா ரூ.4,000 ஃபீஸ்’ - மின்துறை அதிகாரி கையும் களவுமாக கைதானது எப்படி?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்திருக்கும் நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றைக் கட்டினார். அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக ரெட்டண... மேலும் பார்க்க

ஆந்திரா: திருடிய பணத்தில் சொகுசு கார், வெளிநாட்டுப் பயணம்; வெளியான எஞ்சினியரின் ரகசிய வாழ்க்கை

ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பூட்டை உடைத்து திருட்டு நடப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்துகொண்டே இருந்தன. குறிப்பாக விசாகப்பட்டினத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன.இது ... மேலும் பார்க்க