செய்திகள் :

`அதான் கை, கால் நல்லா இருக்கே!' - வயர் பின்னும் விழிச் சவால் மாற்றுத் திறனாளி ராஜா வைக்கும் கோரிக்கை

post image

திருநெல்வேலி ராமையம்பட்டியைச் சேர்ந்த எஸ். ராஜா பிறவியிலேயே பார்வை சவாலுடைய மாற்றுத் திறனாளி.

"கண் பார்வை சரியா இல்லன்னா என்ன, அதான் கை, கால் நல்லாதான இருக்கே. 10-ஆம் வகுப்பு வரை மதுரை `மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில்' படிச்சிருக்கேன். பாட்டி அம்மா செஞ்ச வயர் பின்னும் தொழிலை 9 வயதிலேயே கத்துக்கிட்டேன்.

பார்வை சவால் மாற்றுத்திறனாளி எஸ்.ராஜா
பார்வை சவால் மாற்றுத்திறனாளி எஸ்.ராஜா

அதுல இருந்து வயர் சம்பந்தப்பட்ட கட்டில், சேர், சோபா, லாரி ஆட்டோக்களின் டிரைவர் சீட் எல்லாத்தையும் கையாலயே பின்னி கொடுக்கிறேன். எனக்குத் தெரிஞ்ச தொழிலைச் சில பார்வை சவால் மாற்றுத்திறனாளிகளுக்குச் சொல்லியும் கொடுப்பேன். அந்தப் பணத்தை வைத்து கஞ்சி குடிப்பேன்" என்று நம்பிக்கையாக பேசுகிறார் வயர் பின்னும் தொழிலாளி ராஜா.

வயது 45, மனைவியும் பார்வை சவால் மாற்றுத்திறனாளி. தம்பியின் ஆதரவில் இருக்கும் நிலையில், தம்பிக்கு கூடுதல் உதவி செய்ய வேண்டும் என்று 2015ல் சுய முயற்சியில் தச்சநல்லூர் பகுதியில் 'இரு கண் பார்வையற்றோர் மாற்றுத்திறனாளி சிறு தொழில் செய்யும் வயர்ப்பின்னும் பெட்டிக்கடை'யை ஆரம்பித்தார்.

"தொழில் போட்டி அதிகமா இருக்கு, பெருசா வருமானம் இல்லனாலும் வயத்து பொழப்புக்கு போதுமானதா இருக்கு, அதனால சில ஏமாற்றங்களை பெரிசா மனசுல எடுத்துக்க மாட்டேன்.

தொழில் போட்டியினால எனக்கு அப்புறம் கடை ஆரம்பிச்ச எல்லாருக்கும் கரண்ட் வசதி கிடைச்சிருச்சு, என் கடைக்கு இன்னும் கரண்ட் வசதி கிடைக்கல. பலமுறை கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்துட்டேன், ஆனா கண்டுக்கவே இல்ல.

ராத்திரி நேரம் கடை எங்க இருக்குன்னு பல பேருக்கு தெரியாது. இதனால பல ஆர்டர் கைநழுவி போயிருக்கு.

அதுபோக மர பிரேமில் டிரில்லிங் மிஷின் வச்சி ஓட்டை போட கரண்ட் வேணும். டிரில்லிங் மிஷின் வச்சு ஓட்டை போட மத்த கடைல கொடுத்தா, "இந்தா தாரேன், அந்தா தாரேன்"னு 5 நிமிஷம் வேலையை இழுத்து அடிக்கிறாங்க" என தனது வேதனையை வெளிப்படுத்துகிறார் வயர் பின்னும் மாற்றுத்திறனாளி ராஜா.

பார்வை திறன் சவால் இருந்தாலும், நம்பிக்கையாக தொழில் செய்து பயணிக்கும் ராஜா போன்றவர்கள் நமக்கு சிறந்த முன்னுதாரணம். அரசு இவர்களுக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படையான தேவைகளை பூர்த்தி செய்தாலே, கூடுதல் நம்பிக்கையுடன் வாழ்வை முன்நகர்த்தி செல்வார்கள்.!

'குழந்தைகள் இல்லை... சிரிப்பும் இல்லை...' - அமைதியாகும் மெரினா ராட்டினங்கள்

சென்னை மெரினா கடற்கரையில் ஒருகாலத்தில் குழந்தைகளின் சிரிப்பால் சுழன்ற ராட்டினங்கள், இன்று பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் மெரினா கடற்கரை, தினமும் ஆயிர... மேலும் பார்க்க

UPSC இலக்கு... புற்றுநோயாளிகளுக்கு உதவி... வியக்கவைக்கும் காரைக்குடி சிகையலங்கார கலைஞர்!

குடும்பத்தில் பொருளாதாரப் பின்னடைவு இருந்தாலும், TNPSC குரூப் 1 தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றும், அதனைத் தொடராமல் சமூக சேவை மற்றும் முனைவர் பட்ட ஆய்வைத் தொடர்ந்தபடியே சிகை அலங்கார வேலை செய்துவருகி... மேலும் பார்க்க

`5 பஃப்ஸ் ₹20; ஒரு நாளைக்கு ₹600 சம்பாத்தியம்... எனக்கு இது போதும்!'- கோவை பஃப்ஸ் காமராஜின் மனஉறுதி

13 வயதில் மூளைக் காய்ச்சலால் உடல் பாதிப்பு... உழைப்பால் குடும்பத்தை முன்னேற்றும் கோவை காமராஜின் வாழ்க்கைப் பயணம்கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் வெளியே தினமும் மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர... மேலும் பார்க்க

Hare Ram Pandey: கைவிடப்பட்ட 35 பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் தாயுமானவன்!

கைவிடப்பட்ட 35 பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக மாறியுள்ளார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண விவசாயி. அவர்தான் ஹரே ராம் பாண்டே.அவரது மனிதநேயப் பயணம் 2004-ஆம் ஆண்டு தொடங்கியது. அன்று தேவ்கர் மாவ... மேலும் பார்க்க

மதுரை: நாள்தோறும் 1000 பேருக்கு மதிய உணவு; 850 நாள்களாகத் தொடரும் தொண்டு நிறுவனத்தின் மனிதநேய சேவை!

நாள்தோறும் 1000 பேருக்கு மதிய உணவுநாள்தோறும் 1000 பேருக்கு மதிய உணவுநாள்தோறும் 1000 பேருக்கு மதிய உணவுநாள்தோறும் 1000 பேருக்கு மதிய உணவுநாள்தோறும் 1000 பேருக்கு மதிய உணவுநாள்தோறும் 1000 பேருக்கு மதிய ... மேலும் பார்க்க

உயிர்வாழ ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஆட்டோ ஓட்டும் 72 வயது முதியவர்; கேரளத்தில் கவனம் ஈர்த்த முகமது!

கேரள மாநிலம் ​கோழிக்கோடு மாவட்டம், பறம்பில் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முகமது (72). அவரால் சாதாரணமாக காற்றைச் சுவாசிக்க முடியாது என்பதால், ஆக்ஸிஜன் சிலிண்டரைத் தனது இருக்கையின் பின்பக்கம் இணைத்து, முக... மேலும் பார்க்க