செய்திகள் :

அதிகாரிகளைத் தாக்கிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவி கைது!

post image

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் கடந்த 2024 டிசம்பர் மாதம் சோதனை நடத்திய அதிகாரிகளைத் தாக்கிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவி மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்மாநிலத்தின் ஜலேஸ்வர் பகுதியைச் சேர்ந்த மல்லிகா பூயான் (வயது 29) என்ற பெண் கமர்டாவிலுள்ள தனது உறவினரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் பிரவுன் சுகர் எனும் போதைப் பொருளை கமர்டா, ஜலேஸ்வர், போக்ரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளார்.

கடந்த 2024 டிச.23 அன்று போதைப் பொருள் விற்பனைக் குறித்து தகவல் அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் கமர்டா பகுதியிலுள்ள சந்தையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மல்லிகா தலைமையிலான கும்பல் ஒன்று அந்த அதிகாரிகளை தாக்கி அவர்களது வாகனங்களை அடித்து உடைத்தார்கள்.

இதையும் படிக்க: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!

இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அந்த கும்பலைச் சார்ந்த 10 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் டண்டன் பகுதியில் பதுங்கியிருந்த மல்லிகா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் அவரது கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது கூட்டாளி குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில் இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு ! சர்ச்சைப் பேச்சு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் பிராமணத் தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அம்மாநில பாஜக அரசின் பிராமண நலவாரியத் தலைவர் பேசியுள்ளார்.இந்தூரில் ந... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: அரசு ஊழியர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் மாநில அரசு ஊழியர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.போகாரோ மாவட்டத்தின் மதுகார்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிண்டு நாயக் (வயது 26) ... மேலும் பார்க்க

நாளைமுதல் 4 நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜன. 14-17 வரை மாற்றப்பட்டுள்ளது.இது பற்றி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது: 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணைய... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியா: சிறிய ரக விமானம் விபத்து! விமானி பலி!

ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளனதில் அதனை ஓட்டி வந்த விமானி பலியானார்.அந்நாட்டின் டார்வின் மாகாணத்திலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள மறுசீரமைப்புப் பகுதியின் வானில் நேற... மேலும் பார்க்க

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருத... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் உள்பட 2 பேர் கைது!

சத்தீஸ்கர் மாநிலம் கங்கர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த மூத்த பெண் நக்சல் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய 2 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.அம்மாநிலத்தின் மாவோயிஸ்டு அமைப்பின் பிரிவுக் குழு உற... மேலும் பார்க்க