செய்திகள் :

அமெரிக்காவிற்கு ஜாக்பாட்: 'செலவே இல்லாமல் 6,500 கோடி பேரல் எண்ணெய்' வெனிசுலாவின் சூப்பர் பரிசு!

post image

கடந்த ஜனவரி மாதம், வெனிசுலாவின் அப்போதைய அதிபர் மதுரோவைக் கைது செய்து, அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்தச் சம்பவத்திற்குப் பின், ட்ரம்பின் டார்கெட் முழுவதும் வெனிசுலாவின் எண்ணெய் மீது இருந்தது.

அமெரிக்கா - வெனிசுலா ஒப்பந்தம்

அதற்கேற்ற மாதிரி, கடந்த 29-ம் தேதி, வெனிசுலாவுடன் எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளது அமெரிக்கா. இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

“அமெரிக்கா வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை இப்போது செய்துள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

எனது வழிகாட்டுதலின்படி, வெளியுறவுத் துறைச் செயலர் மார்கோ ரூபியோவும் பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்சேத்தும் இதில் இணைந்து செயல்பட்டனர்.

அவர்கள் வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் தனியார்த் துறையுடன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை முடித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்கர்களுக்கு ஒரு பைசா கூட செலவில்லாமல், வெனிசுலாவில் உள்ள 6,500 கோடி பேரலுக்கும் அதிகமான எண்ணெயின் பெரும் பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமானது அமெரிக்காவின் எண்ணெய் இருப்பை இரட்டிப்பிற்கும் மேலாக அதிகரிக்கும்.

அமெரிக்காவின் எண்ணெய் விநியோகத்தைப் பெருமளவில் உயர்த்தும்.

மேலும் இன்னும் பல காலத்திற்கு அனைத்து அமெரிக்கர்களுக்குமான எரிபொருள் விலையைக் கணிசமாகக் குறைக்கும்.

அதே வேளையில், வெனிசுலாவை மிகப்பெரிய வெற்றி மற்றும் பெரும் செழிப்பை நோக்கிய பாதையில் தொடர்ந்து கொண்டு செல்லவும் இது உதவும்.

இந்த ஒப்பந்தம் வெனிசுலாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்கனவே வளர்ந்து வரும் உறவை மேலும் வலுப்படுத்தும்!” என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இந்த எண்ணெய் எதற்கு பயன்படப் போகிறது?

தற்போது அந்த எண்ணெய் எதற்காக அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் என்று தனது ட்ரூத் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.

“வெனிசுலா எண்ணெயைக் கொண்டு நான் செய்யப்போகும் முக்கியமான காரியங்களில் ஒன்று, நமது நாட்டின் மூலோபாய எண்ணெய் இருப்பை (Strategic Petroleum Reserve) நிரப்புவதுதான்.

தூங்குமூஞ்சி ஜோ பைடனின் ஆட்சியால் அது கிட்டத்தட்ட முழுமையாகக் காலியாகிவிட்டது.

இந்த இருப்பை நிரப்பும் பணி மிக விரைவில் தொடங்க உள்ளது. இது வெனிசுலா நாட்டு மக்களிடமிருந்து அமெரிக்க மக்களுக்குக் கிடைக்கும் ஒரு பரிசாகும்.”

ட்ரம்ப் மதுரோவைக் கைது செய்த நோக்கங்களில் மிக முக்கியமான ஒன்று - வெனிசுலாவின் எண்ணெய் வளம். தற்போது இந்த ஒப்பந்தம் மூலம் ட்ரம்ப் இந்த விஷயத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

`பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்' அமைக்க வேண்டும்' - ஜக்கி வாசுதேவ்

நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்கி வாசுதேவ், “இந்தப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ ... மேலும் பார்க்க

'கண்ணியக்குறைவாக பேசுபவர்கள் நேரலையில் அம்பலப்படட்டுமே என மக்கள் கேட்கின்றனர்!' - சபாநாயகர் விளக்கம்

சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின் இடையே பேசிய சபாநாயகர் 'சட்டமன்ற நேரலை' குறித்து விரிவாக பேசியிருந்தார். சபாநாயகர்திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசு... மேலும் பார்க்க

TN Assembly : `110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்த 6 அறிவிப்புகள்!' - முழு விவரம்!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.CM Vijayமுதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள், 'கிராம அளவ... மேலும் பார்க்க

"முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது; ஆனால்..." - வைகோ என்ன சொல்கிறார்?

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்' எனத் தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். அ... மேலும் பார்க்க

DMK: "மனக்கசப்புடன் இனியும் திமுகவில் தொடர முடியாது" - தோப்பு வெங்கடாசலம் சொல்வது என்ன?

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தி.மு.க- வின் முன்னாள் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளருமான தோப்பு வெங்கடாசலம், தி.மு.க- வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (... மேலும் பார்க்க

``100 நாள்களில் ரூ.28,000 கோடி கடன்; விஜய்யின் தவெக அரசு நிலைக்காது!" - விளாசிய எடப்பாடி பழனிசாமி

வேலூரில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``த.வெ.க அமைச்சரவையில் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒருத் துறை இருக... மேலும் பார்க்க