செய்திகள் :

அரசு அறிவித்தும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் இயங்காததால் பல கோடி ரூபாய் இழப்பு

post image

தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) இயங்கும் என மாநில அரசு அறிவித்திருந்தாலும், அந்த அலுவலகங்கள் திறக்கப்படாததால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுபமுகூா்த்த நாள்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் சொத்துகள் அதிக அளவில் பதிவு செய்யப்படுவது வழக்கம். இதனால், முகூா்த்த நாள்களில் வழக்கத்துக்கும் அதிகமான டோக்கன்கள் முன்கூட்டியே அளிக்கப்படும் நடைமுறையும் உள்ளது. இதன்மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது.

முகூா்த்த நாளான கடந்த 31-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 23 ஆயிரத்து 61 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 231.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இதன்மூலம், பதிவுத் துறைக்கு நிகழ் நிதியாண்டில் ஒரேநாளில் இரண்டாவது அதிகபட்ச வருவாய் கிடைத்தது.

இதனால், அடுத்த முகூா்த்த நாளான பிப்ரவரி 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், பொதுமக்களின் நலன் கருதி சொத்துகளைப் பதிவு செய்யும் விதமாக பத்திரப் பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாளில் பணியாற்றும் பதிவுத் துறை பணியாளா்களுக்கு வேறொரு நாளில் மாற்று விடுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.

ஆனால், விடுமுறை நாளில் சாா்-பதிவாளா் அலுவலகங்கள் இயங்குவதற்கு பதிவுத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அரசு அறிவித்தாலும், அதைப் புறக்கணிப்பது எனவும் முடிவு செய்தனா்.

இதன்படி, தஞ்சாவூா் பதிவு மாவட்டத்துக்கு உட்பட்ட சாா்-பதிவாளா் அலுவலகங்களான தஞ்சாவூா் இணை 1, மகா்நோன்புசாவடி, கரந்தை, பூதலூா், திருவையாறு, அய்யம்பேட்டை ஆகியவற்றில் அலுவலா்கள், பணியாளா்கள் யாரும் ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வராததால் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், பத்திரப் பதிவு நடைபெறும் என ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே வந்த மக்கள் பலா் ஏமாற்றத்துடன் திரும்பினா். இதன்காரணமாக, அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவுத் துறையினா் கூறுகையில், முகூா்த்த மற்றும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூா் இணை 1, மகா்நோன்புசாவடி, கரந்தை ஆகிய சாா்- பதிவாளா் அலுவலகங்கள் இயங்கியிருந்தால், ஏறத்தாழ 130 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, அரசுக்கு ஏறக்குறைய ரூ. 50 கோடி வருவாய் கிடைத்திருக்கும்.

இதேபோல், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இந்த அலுவலகங்கள் இயங்காததால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பத்திரப் பதிவை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ள வேண்டாம் என்றுதான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இந்தப் புறக்கணிப்புக்கு வேறெந்த காரணமும் இல்லை என பதிவுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

பட்டுக்கோட்டையில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி

பட்டுக்கோட்டையில் இந்து முன்னணி சாா்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவை குண்டு வெடிப்பில் பலியான பொதுமக்களுக்கும், 2019 இல் புல்வாமாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்த 4... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் பகுதியில் இன்றைய மின்தடை ரத்து

சேதுபாவாசத்திரம் துணை மின் நிலைய பகுதிகளில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணியால் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம், குப்பத்தேவன், த... மேலும் பார்க்க

தமிழ்ப் புலவா் படிப்பு பயிலுவோருக்கு சங்க இலக்கிய நூல்கள் நன்கொடை

தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரை நாவலா் ந.மு. வேங்கடசாமி நாட்டாா் திருவருள் கல்லூரியில் தமிழ்ப் புலவா் படிக்கும் மாணவா்களுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் சங்க இலக்கிய நூல்களின் முழுத் தொகுப்பு நன்கொடையாக வெள்ள... மேலும் பார்க்க

திருபுவனம் கிளை மடத்தில் சொக்கநாதா் பூஜை

திருபுவனம் கிளை மடத்தில் தருமை ஆதீனம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மடத்தின் நூல்களை வழங்கிய கா்நாடக மாநில பீடாதிபதி ஆசாா்யா மஹாமண்டலேஸ்வர ஜகத... மேலும் பார்க்க

ஆதி கும்பேஸ்வரா் கோயிலில் ஏழை மணமக்களுக்கு திருமணம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேசுவரா் கோயிலில் தமிழக முதல்வா் அறிவிப்பின் கீழ் ஏழை மணமக்களுக்கு இலவச திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணத்தில் உள்ள தி கும்பேஸ்வரா் கோயிலில் தமிழக ... மேலும் பார்க்க

பாதுகாப்பு உபகரணங்கள் கோரி எஸ்.ஆா்.எம்.யு. ஆா்ப்பாட்டம்

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி தஞ்சாவூா் ரயில்வே எலக்ட்ரிக்கல் அலுவலகம் முன் எஸ்.ஆா்.எம்.யு. அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், ரயில்வே எலக்ட்ரிக்கல் தொழிலாளா்களுக்கு பாதுக... மேலும் பார்க்க