செய்திகள் :

அவசர நிலை முதல் அயோத்தி வரை: இந்திய வரலாற்றைக் குரலால் செதுக்கிய மார்க் டல்லி காலமானார்!

post image

தெற்காசியாவின் மிகச்சிறந்த பத்திரிகையாளரும், பிபிசி (BBC) செய்தி நிறுவனத்தின் இந்திய முகமாகப் போற்றப்பட்டவருமான மார்க் டல்லி (90), டில்லியில் நேற்று காலமானார்.

அக்டோபர் 24, 1935-ல் கொல்கத்தாவில் பிறந்த இவர் தன் சீரிய ஆற்றலாலும், தீவிர அர்பணிப்பு மிக்கப் பணிகளாலும் பெரும் உச்சத்தை அடைந்தார்.

சர் மார்க் டல்லி 1964-ம் ஆண்டு பிபிசி நிறுவனத்தில் இணைந்த அவர், சுமார் முப்பது ஆண்டுகள் பிபிசியில் பணியாற்றினார். 1975-ம் ஆண்டு இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை மற்றும் இந்திரா காந்தியின் படுகொலை போன்ற இக்கட்டான காலங்களில், நம்பகமான செய்திகளுக்காக இந்தியர்கள் மார்க் டல்லியின் குரலையே மலைபோல் நம்பியிருந்தனர்.

மார்க் டல்லி
மார்க் டல்லி

அரசு தணிக்கை நிலவிய அவசரநிலை காலத்தில், இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மார்க் டல்லியிடம் கூறப்பட்டது. இதுவே அவரைப் பொதுமக்களிடையே ஒரு தேசிய அடையாளமாக நிலைநிறுத்தியது. மக்கள் ரேடியோக்களில் பெரும் போராட்டத்திற்கு, இடையே மார்க் டல்லியின் செய்திகளைக் கேட்டு நிகழ்வுகளைப் புரிந்து கொண்டனர்.

தெற்காசியாவின் மிக முக்கியமான வரலாற்றுத் தருணங்களை உலகிற்குத் தனது அறிக்கைகள் மூலம் மார்க் டல்லி கொண்டு சேர்த்தார். இந்தியா-பாகிஸ்தான் போர்கள், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் தூக்குத்தண்டனை, 1984 போபால் விஷவாயு விபத்து, ஆபரேஷன் புளூ ஸ்டார், ராஜீவ் காந்தி படுகொலை, பாபர் மசூதி இடிப்பு எனப் பல முக்கிய நிகழ்வுகளை அவர் முன்னின்று பதிவு செய்தார்.

குறிப்பாக1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, பிபிசி மீது கோபத்தில் இருந்த ஒரு கும்பலால் மார்க் டல்லியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. ஒரு அறையில் பல மணிநேரம் அடைத்து வைக்கப்பட்ட அவரை, உள்ளூர் அதிகாரி ஒருவரும், பூசாரி ஒருவரும் இணைந்து அவரை மீட்டு, உயிரைக் காப்பாற்றினர்.

மார்க் டல்லி
மார்க் டல்லி

மேலும், வலிமையான எழுத்துக்குச் சொந்தக்காரரான மார்க் டல்லி, இதுவரை ஒன்பது புத்தகங்களை எழுதியுள்ளார். 1985-ல் சதீஷ் ஜேக்கப்புடன் இணைந்து எழுதிய Amritsar: Mrs Gandhi’s Last Battle அவரது முதல் புத்தகமாகும்.

2017-ல் வட இந்தியாவின் கிராமப்புறக் கதைகளை உள்ளடக்கிய Upcountry Tales என்ற தனது கடைசிப் புத்தகத்தை வெளியிட்டார். அவரது சேவையைப் பாராட்டி 1992-ல் பத்மஸ்ரீ, 2002-ல் Knighted மற்றும் 2005-ல் பத்ம பூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

1994-ம் ஆண்டு பிபிசியின் அப்போதைய இயக்குநர் ஜான் பிர்ட் உடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்குப் பிறகு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் தனது துணைவியாரும் சக பத்திரிகையாளருமான கில்லியன் ரைட்டுடன் வசித்து வந்தார். இருவரும் இந்தி மொழியில் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர்கள்.

மார்க் டல்லி
மார்க் டல்லி

2019 வரை பிபிசி ரேடியோவில் Something Understood என்ற நிகழ்ச்சியை வழங்கி வந்தார். அதற்குப் பிறகு சில உடல்நலப் பிரச்னை காரணமாக ஓய்வில் இருந்தார். இந்த நிலையில்தான் அவர் காலமான செய்தி வெளியாகியிருக்கிறது.

நிஜாமுதீனில் உள்ள அவரது வீட்டின் பெயர்ப்பலகையில் 'மார்க் டல்லி' என்று மட்டுமே இருக்கும். ஆனால், நீண்ட காலமாக பிபிசியின் அதிகாரப்பூர்வமற்ற இந்தியத் தலைமையகமாகச் செயல்பட்ட இடம் அதுதான் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நீலகிரி: மார்க் டவிடார் என்ற மனிதரும் ரிவால்டோ யானையும்... பாசப் பிணைப்பின் கதை - கலங்கும் மக்கள்!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி பகுதியின் அடையாளமாக திகழ்ந்து வந்த ரிவால்டோ என பெயரிடப்பட்ட ஆண் யானை, காயம் காரணமாக நேற்று பரிதாபமாக உயிரிழந்து. மனிதர்களுடனான பிணைப்ப... மேலும் பார்க்க

பத்மா: 'அதே யூனிஃபார்ம்ல வர சொல்லிதான் மரியாதை செய்யணுமா?' - நெட்டிசன் கேள்விக்கு பார்த்திபன் பதில்

கீழே கிடந்த 360 கிராம் தங்கத்தை உரியவர்களிடம் எடுத்துக்கொடுத்த தூய்மைப் பணியாளர் பத்மா தான் கடந்த சில நாள்களாக வைரல். அவரை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பாராட்டி வருகின்றனர். பத்மாவை நட... மேலும் பார்க்க

`தன் உயிரை தியாகம் செய்து..' - தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்றிய அங்கன்வாடி பெண் ஊழியர்

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள மாதவாடா என்ற கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் கஞ்சன் பாய் என்ற பெண், சமையல் வேலை செய்து வந்தார். அவர் அங்கன்வாடியில் சமைத்துக் கொண்டிருந்தபோது அங்கு 20 கு... மேலும் பார்க்க

`குழந்தைங்க பசிக்கும், கல்விக்கும் முன்னாடி பயம் பெருசில்ல...' - ஊக்கமூட்டும் கேப் ஓட்டுநர் நந்தினி

வாழ்க்கை நமக்குச் சவால்களைத் தரும்போது, அதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அந்தச் சவால்களையே ஏணியாக மாற்றி முன்னேறுபவர்கள் மிகச் சிலரே. அந்த வகையில், ஹைதராபாத் நகரின் பரபரப்பான சாலைகளில் தன்னுடைய மூன்று குழந்த... மேலும் பார்க்க

`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி அனுப்பும் இஸ்லாமியர்

`இதைவிட கொடுப்பினை வேறு என்ன இருக்க முடியும் ?’கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கும் வள்ளலாரின் சத்தியஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் உலகம் முழு... மேலும் பார்க்க

"மேதி என் தாய்": நீலகிரி பெட்ட குரும்பர் சமூகத்தின் முதல் இளம் போட்டோகிராபர்!

நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள், கோட்டர்கள், பணியர்கள், நாடோடிப் பழங்குடிகள், காட்டுநாயக்கர்கள், குரும்பர்கள் என ஐந்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், குறும்பர் இனக்குழுவி... மேலும் பார்க்க