செய்திகள் :

"'ஆபரேஷன் சிந்தூர் 2.0' -க்கு இந்திய ராணுவம் தயாராகி வருகிறது!" - ராணுவத் தளபதி ஜெனரல் திவேதி

post image

தேவை ஏற்பட்டால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கையைத் தொடங்குவதற்கு இந்திய ஆயுதப் படைகள் முழுத் தயார் நிலையில் இருப்பதாக ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியப் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் தங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைத் தீவிரமாக மேம்படுத்தி வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

கடந்தாண்டு பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியானதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

புனேயில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமியின் (NDA) 150-வது பயிற்சிப் படிப்பின் நிறைவு நாள் அணிவகுப்பு விழாவில்செய்தியாளர்களைச் சந்தித்த ஜெனரல் உபேந்திர திவேதி, "ஆபரேஷன் சிந்தூர் பொறுத்தவரை, அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தற்போது தற்காலிகப் போர் நிறுத்தம் மட்டுமே நிலவுகிறது. எனவே, ஒருவேளை அடுத்த கட்டப் போர் மூண்டால், 'ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கையை எதிர்கொள்ள இந்திய ராணுவமும், மற்ற இரு படைகளும் மிகச் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றன.

Upendra Dwivedi
Upendra Dwivedi

தற்போது போர்க்களங்கள் வெளிப்படையாக மாறிவிட்டன. நமது ஒவ்வொரு அசைவும் அடுத்த தரப்பிற்கு எளிதில் தெரிந்துவிடுகிறது.

எனவே, எல்லையோரப் பகுதிகளில் நமது படைகளை நிலைநிறுத்துவது, கையாள்வது மற்றும் நமது வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." எனக் கூறியிருக்கிறார்.

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள் எல்லைக்குள் வராது' என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இந்த வசனத்தை திரைப்படங்களில்கூட கேட்டிருப்போம். சாதாரண மக்களுக்கு எங்கே நடந்த ... மேலும் பார்க்க

'அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம்' - அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் பிரதமர்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே இறுதி செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகப்... மேலும் பார்க்க

`சாதி மறுப்புத் திருமணங்களும், தொடரும் ஆணவக் கொலைகளும்!' - கர்நாடகாவைப் பின்பற்றுமா தமிழ்நாடு?

சாதியும் - திருமணமும்அண்ணல் அம்பேத்கர், 'சாதி மறுப்புச் சிந்தனை' (Annihilation of Caste) என்ற தனது நூலில், ``சொந்தச் சாதிக்குள்ளேயே திருமணம் முடித்துக்கொள்ளும் அமைப்புதான், இன்றளவும் 'சாதி' தப்பிப் பி... மேலும் பார்க்க

`மேட்டூர் அணை வரலாற்றில் ஏற்பட்டுள்ள 62-வது ஆண்டு காலதாமதம் இது!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

காவிரி ஆற்றுப்படுகை பாசனத்தின் அடிப்படை ஆதாரமாகப் பங்காற்றி வருகிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரால் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி எ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் திட்ட வீடியோ சர்ச்சை: அமைச்சர் ராஜ் மோகன் சொல்லும் விளக்கம் என்ன?| Live Updates

லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்ற அமைச்சர் வன்னி அரசு!வன்னி அரசுசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் வன்னி அரசு. சிம்பொனி இசையமைத்து சாதனை நிகழ்த்திய இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்றார். அப்போது,``தமிழ... மேலும் பார்க்க

``கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும்..." - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபனைச் சந்தித்து கோரிக்கை ம... மேலும் பார்க்க