செய்திகள் :

'ஆயிரம் கோடிக்கணக்கில் இந்தியாவில் இருந்து வெளியேறும் பணம்' இந்திய ரூபாய் மதிப்பு ரூ.96-க்கு சரிவு!

post image

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்துகொண்டே வருகிறது.

இந்தச் சரிவைத் தடுக்க, அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அது அவ்வளவாக கைக்கொடுக்கவில்லை.

இந்திய ரிசர்வ் வங்கி தலையிடும் போது, வீழ்ச்சி கட்டுப்படுவதும், அதன் பின், மீண்டும் சரிவை சந்திப்பதும் தொடர்கதையாகி விட்டது.

இன்று சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.07-க்கு சென்றது.

ஏன் இந்தச் சரிவு என்று பார்த்தால், அதற்கு நான்கு முக்கிய காரணங்கள்தான் மிஞ்சுகின்றன.
இந்திய ரூபாய்
இந்திய ரூபாய்

> சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது.

> இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர். FIIs இந்திய சந்தைக்குள் பணத்தைக் கொண்டு வரும்போது நூறு கோடிகளில் கொண்டு வருகின்றனர். ஆனால், வெளியேற்றுகையில் ஆயிரம் கோடிகளில் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

> அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவிற்கு சென்றுள்ளார். அங்கே ஈரான் போர் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இதனால், ஈரான் போர் முடிவு பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் எதுவும் தெரியவில்லை.

> ஆசிய நாடுகளிலும் பெரும்பாலான நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பில் வீழ்ச்சியில் தான் இருந்து வருகின்றன.

இப்படியே இந்திய ரூபாயின் மதிப்பு 2027-ம் ஆண்டில் இறுதி அல்லது 2028-ம் ஆண்டு ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.100-ஐ தொட்டுவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

'எடப்பாடிக்கு எதிராகவே `அதிமுக அதிகாரப்பூர்வ' ஊடகங்கள் திரும்பியது எப்படி?

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடும், தொலைக்காட்சியும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியதோடு த.வெ.க ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு துண... மேலும் பார்க்க

பெட்ரோல் விலையேற்றம்: `விலைவாசி உயர்வு முதல் ஹைப்ரிட் வாகனம் வரை'- சிக்கல்களை விளக்கும் கே.பி.முரளி!

மேற்கு ஆசியப் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளன. இந்த வில... மேலும் பார்க்க

குழந்தை பெற கைதிக்கு பரோல் கேட்ட மனைவி: `குழந்தை களங்கத்தை சுமக்க நேரிடும்'- நீதிபதிகள் கருத்து

சிவகங்கை மாவட்​டம் திருப்​பாச்​சேத்தி பகு​தி​யைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில," என் கணவர் மதுரை மத்​திய சிறை​யில் ஆயுள் தண்​டனை கைதி​யாக உள்​ளார். என் கணவர... மேலும் பார்க்க

Petrol Price Hike: நாடு முழுவதும் உயர்ந்த பெட்ரோல், டீசல், CNG விலை; சாமானிய மக்கள் கலவை

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் நேரடி விளைவாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்வு; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி | News Today live update

CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்வு!AG&Pratham CNG Stationபெட்ரோல், டீசலைத் தொடர்ந்து CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் போர் பதற்றத்தால் இந்த விலை... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: எரிபொருள் செலவைக் குறைக்கச் சொன்ன பிரதமர்; தலைமை செயலகத்திற்கு பைக்கில் வரும் முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்கள் தங்கம் வாங்குவதைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்படியும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் படியும், வீட்டில... மேலும் பார்க்க