செய்திகள் :

மகாராஷ்டிரா: எரிபொருள் செலவைக் குறைக்கச் சொன்ன பிரதமர்; தலைமை செயலகத்திற்கு பைக்கில் வரும் முதல்வர்

post image

பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்கள் தங்கம் வாங்குவதைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்படியும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் படியும், வீட்டில் இருந்தே பணியாற்றும்படியும் கூறி இருக்கிறார்.

அவரது கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர்கள் தங்களது செலவுகளைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளனர். சிலர் கார்களை தவிர்த்து வருகின்றனர். அதோடு பாதுகாப்புக்கு வருபவர்களின் எண்ணிக்கையையும் குறைத்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது அரசு இல்லத்தில் இருந்து தலைமை செயலகத்திற்கு ராயல் என்பீல்டு புல்லட்டில் வந்தார். அவருடன் மற்றொரு மாநில அமைச்சர் ஆசிஷ் ஷெலார் பின்னால் இருந்து வந்தார்.

அவர்கள் பயணம் செய்த பைக் மும்பை போலீஸாருக்குச் சொந்தமானது ஆகும். முதல்வர் பைக்கில் சென்றபோது அவருக்குப் பாதுகாப்பாக மேலும் 4 பைக்கில் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர்.

பைக்கில் பட்னாவிஸ்
பைக்கில் பட்னாவிஸ்

அதோடு பட்னாவிஸ் தனது பாதுகாப்பையும் குறைத்துக்கொண்டுள்ளார். தனது சக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பொதுபோக்குவரத்தில் பயணம் செய்யும்படியும், வாரத்தில் ஒரு நாளாவது மெட்ரோ ரயில் போன்றவற்றில் பயணம் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து பட்னாவிஸ் அளித்த பேட்டியில், ''நாம் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. புதன்கிழமை முதல், எங்களது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளோம், அதை மேலும் குறைக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் நாங்கள் தடை செய்துள்ளோம், எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் பெட்ரோல்/டீசலைச் சேமிப்போம். அடுத்த ஆறு மாதங்களுக்கு, வெள்ளிக்கிழமை சத்தாராவில் (Satara) நடக்கும் ஒரு நிகழ்ச்சியைத் தவிர, அரசு எந்த ஒரு பெரிய நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யாது.

அது ஏற்கனவே திட்டமிடப்பட்டு, அதற்கான பணமும் செலவிடப்பட்டுவிட்டது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் சுமார் 25-30 லட்சம் குடும்பங்களின் கணக்குகளுக்கு நேரடியாக ரூ.10,000 கோடி நிதி மாற்றப்படும். எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் பணத்தைச் சேமிக்க முயற்சிப்போம்'' என்று தெரிவித்தார்.

முதல்வர் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் பயணிப்பது ஒரு வழக்கமான நடைமுறையாக இருக்குமா என்று மூத்த அரசு அதிகாரியிடம் கேட்டதற்கு, ''முதல்வர் ஒவ்வொரு முறையும் பைக்கில் செல்லும்போதோ அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போதோ, அவருடைய பாதுகாப்பு விவரங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முதல்வரின் பாதுகாப்பு மிக முக்கியமானது, எனவே இது ஒரு வழக்கமான நடைமுறையாக இருக்கும் என்று கூற முடியாது'' என்று தெரிவித்தார்.

Petrol Price Hike: நாடு முழுவதும் உயர்ந்த பெட்ரோல், டீசல், CNG விலை; சாமானிய மக்கள் கலவை

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் நேரடி விளைவாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்வு; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி | News Today live update

CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்வு!AG&Pratham CNG Stationபெட்ரோல், டீசலைத் தொடர்ந்து CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் போர் பதற்றத்தால் இந்த விலை... மேலும் பார்க்க

TVK: சேலத்தில் நடைமுறைக்கு வந்தது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை; பணிகள் என்ன?

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்றிருக்கும் ஜோசப் விஜய், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல்துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவைத் தொடங்க உத்தரவிட்டிருந்தார... மேலும் பார்க்க

15%-ஆக உயர்ந்தது: தங்கம், வெள்ளியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வரி அதிகரிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓர் ஆண்டுக்கு நிறுத்தும்படியும், எரிபொருள், உணவு ஆயில்களை பயன்படுத்துவதை குறைக்கும்படியும், வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யும்படியும், வீட்டில் இருந்து வேலை செய்ய... மேலும் பார்க்க

இந்தியாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்ய 'நோ'- மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

தற்காலிகமாக இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை செய்துள்ளது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலை அமைச்சகம். அமைச்சகம் என்ன சொல்கிறது? வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்தியாவில் இருந்து சர்க்கரை (ரா ச... மேலும் பார்க்க

நிழல் உலகின் பிடியில் NEET: கனவுகளைத் திருடிய வினாத்தாள் கசிவு; நீட் முறைகேட்டின் விரிவான பின்னணி!

கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட்-யூஜி (NEET-UG 2026) தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாள் கசிந்தது பின்புதான் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து... மேலும் பார்க்க