செய்திகள் :

ஆவடி தொகுதி: “ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’ - அமைச்சர் சா.மு.நாசர் உறுதி

post image

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ஆவடி தொகுதியின் தி.மு.க வேட்பாளரும் அமைச்சர் சா.மு.நாசரை ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஆவடி தொகுதி வேட்பாளரும் தி.மு.க-வின் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளருமான நாசரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

“ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறீர்கள், கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை சதவிகிதம் நிறைவேற்றியிருக்கிறீர்கள்?”

“இந்தத் தொகுதி மண்ணின் மைந்தன் நான். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 10,516 கோடி மதிப்பிலான திட்டங்களை தொகுதிக்குக் கொண்டு வந்திருக்கிறோம்.

குறிப்பாக பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட டைடல் பார்க்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்பை உறுதி செய்திருக்கிறோம்.

அடுத்து 36 கோடியில் ஆவடி பேருந்து நிலையம் (பணிகள் நடைபெற்று வருகிறது), 78.31 கோடியில் பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம், 36 கோடியில் அரசு பொதுமருத்துவமனை, 84 கோடியில் திருவேற்காடு கோயில் புனரமைப்புப் பணிகள் ஆகியவற்றை செய்துள்ளேன்.

தொகுதியில் 81,000 பேருக்கு பட்டா வழங்கி உள்ளோம். அறிவுசார் மையம், முதல்வர் படைப்பகம், சார் பதிவு அலுவலகம், ஸிஜிளி அலுவலகம், எனப் பல்வேறு பணிகளும் செய்யப்பட்டுள்ளன”

அமைச்சர் சா.மு.நாசர்
அமைச்சர் சா.மு.நாசர்

“தேர்தலின் கதாநாயகனான தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பு இருக்கிறது?”

“மகளிர் உரிமைத் தொகையை இருமடங்காக உயர்த்தி வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். அதோடு இல்லத்தரசிகளுக்காக 8,000 கூப்பன் திட்டத்துக்கு மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். தி.மு.க வாக்குறுதி கொடுத்தால் அதை நிச்சயமாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது”

“உங்களை எதிர்த்து பா.ஜ.க களமிறங்கியிருக்கிறதே... த.வெ.க-வால் சிறுபான்மையினரின் ஓட்டுகள் சிதறுமா?”

“எந்தக் கட்சி போட்டியிட்டாலும் தொகுதியில் தி.மு.க-வுக்குத் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களால் பெண்களிடையே மிகப்பெரிய எழுச்சி இருக்கிறது. சிறுபான்மையின மக்களும் நிச்சயம் தி.மு.க-வுக்குத்தான் ஓட்டு போடுவார்கள்.”

அமைச்சர் சா.மு.நாசர்
அமைச்சர் சா.மு.நாசர்

“இந்தத் தேர்தலில் ஆவடி தொகுதிக்கு என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறீர்கள்?”

“அடுத்து வரும் தி.மு.க ஆட்சியில் ரூ. 138 கோடியில் ஆவடியில் நீதிமன்ற வளாகக் கட்டடப் பணிகள் தொடங்கப்படும். குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். ஆவடி தொகுதியில் ஸ்டேடியம் கட்ட துணை முதல்வர் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிவிட்டார். திருவேற்காடு நகராட்சியில் 500 கோடியில் குடிநீர் திட்ட பணிக்கு டென்டர் முடிக்கப்பட்டு விட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தை ஆவடி தொகுதிக்குக் கொண்டு வந்துள்ளோம். குடிநீர் பிரச்னைக்கு முழுமையாக தீர்வு காணப்படும்.”

“உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது?”

“கடந்த தேர்தலில் அ.தி.மு.க நேரடியாகப் போட்டியிட்ட போதே 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்தத் தடவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதைப் போல, ஒரு லட்சத்துக்கு அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்!”

அண்ணா நகரில் களமிறங்கும் ‘தளபதியின்’ நம்பிக்கைக்குரிய தளபதி! - திமுக வேட்பாளர் சிற்றரசு

சென்னை மாநகரின் ‘விஐபி’ தொகுதி என வர்ணிக்கப்படும் சட்டமன்ற தொகுதி அண்ணா நகர். இங்கு, இம்முறை திமுக ஒரு புதிய, ஆனால் தொகுதிக்கு மிகவும் பரிச்சயமான முகத்தைக் களம் இறக்கியுள்ளது. அவர்தான் நே.சிற்றரசு.இளை... மேலும் பார்க்க

“இப்போதே எம்.எல்.ஏ-வாக ஏற்றுக்கொண்டு மனு கொடுக்கிறார்கள் மக்கள்”- தி.மு.க அரூர் வேட்பாளர் அ.சண்முகம்

தர்மபுரி மாவட்டத்தின் அரூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கி இருப்பவர் அ.சண்முகம். 15 ஆண்டுகள் உள்ளாட்சிப் பொறுப்பு வகித்தவர் என்பதும், பகுதி மக்கள் எளிதில் அணுகும் நபராக இருப்பதும் அவரது தனி... மேலும் பார்க்க

`பினாமிகளை வைத்துத் தமிழகத்தை ஆள நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ்!' - குளச்சலில் கடுகடுத்த ராகுல் காந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குளச்சல் அருகே லட்சுமிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்க... மேலும் பார்க்க

`ராயபுரத்தால் நான்... ராயபுரத்துக்காக நான்!' - `இஸ்லாமியர்களின் செல்லப்பிள்ளை’ டி.ஜெயக்குமார்

ராயபுரத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஜெயக்குமார் ஏழாவது முறையாகத் தேர்தல் களத்தில் இருக்கிறார். "கடந்த ஐந்து முறையைக் காட்டிலும், வரும் தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்று, ஆறாவது ம... மேலும் பார்க்க

ஜோலார்பேட்டையில் ஜொலிக்கும் தி.மு.க வேட்பாளர் - களத்தில் முந்தும் கவிதா தண்டபாணி

“தி.மு.க-வின் ஐந்தாண்டுக்கால ஆட்சியும், தமிழக முதல்வர் கொண்டுவந்த திட்டங்களுமே தி.மு.க-வின் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்கும். எங்கள் தொகுதியில் தி.மு.க-வுக்கு உள்ள ஆதரவைப் பார்த்தா... மேலும் பார்க்க

NOTA: தேர்தலில் 'நோட்டா'அறிமுகமானது எப்படி?|Vote Vibes

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வேட்பாளர்களை நிராகரிப்பதும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா. இந்த நோட்டா எப்படி அமலுக்கு வந்தது என... மேலும் பார்க்க