செய்திகள் :

இணைந்த 7 எம்.பி-கள்: `மாநிலங்களவையில் பலம் கூடிய பாஜக' - ஏற்றுக்கொண்ட சபாநாயகர்

post image

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) இருந்தனர். இவர்களில் ராகவ் சதா உள்ளிட்ட 7 உறுப்பினர்கள், கடந்த வெள்ளிகிழமை ஆம் ஆத்மி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். தாங்கள் பாஜகவின் சட்டமன்றக் குழுவில் இணைவதாக அவர்கள் அளித்த கடிதத்தை ஏற்றுகொள்வதாக மாநிலங்களவை அவைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று அறிவித்திருக்கிறார்..

எனவே, இனி ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராகவ் சதா உட்பட பா.ஜ.க-வில் இணைந்த ஏழு உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இனி பா.ஜ.க-வின் ஒரு பகுதியாகவே கருதப்படுவார்கள்.

ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால்
ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால்

இதன் மூலம், 245 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அவையில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க தன்வசம் வைத்திருக்கிறது. அதேநேரம், ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை, மக்களவை என இரண்டிலும் தலா மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

தற்போது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது 136 உறுப்பினர்களுடன் வலுவான நிலையில் உள்ளது. மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்த இணைப்பின் மூலம் பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு அவையில் சட்டங்களை நிறைவேற்றுவது மேலும் எளிதாகியுள்ளது.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தற்போது மாநிலங்களவையில் குறைந்தது 136 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட, பா.ஜ.க-வைச் சாராத வேறு ஏழு உறுப்பினர்களும் இந்த அவையில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த இணைப்பு நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவருமான சஞ்சய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகவ் சதா
ராகவ் சதா

இது குறித்து அவர், ``பா.ஜ.க-வுடன் இணைந்த 7 உறுப்பினர்களின் முடிவு அப்பட்டமான கட்சித்தாவல் ஆகும். இது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கட்சித்தாவல் தடைச் சட்டத்தை மீறும் செயலாகும். எனவே, அந்த 7 உறுப்பினர்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று அவைத்தலைவரிடம் மனு அளித்துள்ளேன்," என்றார்.

அவைத்தலைவர் இந்த இணைப்பிற்கு அங்கீகாரம் அளித்துள்ள போதிலும், சஞ்சய் சிங் அளித்துள்ள தகுதிநீக்க மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிந்த சூட்டோடு விநாயகர், காளி கோயிலில் சாமி தரிசனம்; சொந்த ஊரில் வைகோ

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து விட்ட சூழலில் பதிவான அதிக வாக்கு சதவிகிதத்தால் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மே 4 ம் தேதியை திக் திக் மனநிலையுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றன. முதல்வர் மு.... மேலும் பார்க்க

``பையில் வெங்காயம் வைத்திருந்தால் எந்த ஆபத்தும் வராது" - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

மத்தியப்பிரதேச மாநிலம், சிவபுரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``நான் காரிலோ அல்லது தங்கும் இடத்திலோ ஏசியைப் பயன... மேலும் பார்க்க

"எனது இளமைக் காலத்தில் பொன்னான 15 ஆண்டுகளை ஆம் ஆத்மிக்காகவே அர்ப்பணித்தேன், ஆனால்..!" - ராகவ் சதா

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்த ராகவ் சதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "ஒரு பட்டயக் கணக்காளராக எனக்குக் காத்திருந்த நம்ப... மேலும் பார்க்க

”நகையை அடகு வச்சி தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார்” - மறைந்த தாயை நினைத்து உருகும் தவெக வேட்பாளர்

த.வெ.க-வின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் யு.வி.எம்.ராஜராஜன். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் த.வெ.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர். இவரது தாய் வான்மதி என்கிற... மேலும் பார்க்க

மதுபான வழக்கு: "இந்த நீதிபதி முன் ஆஜராக மாட்டேன், அதற்கு பதில்.!"- கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) பதிவு செய்த ஊழல் வழக்கில் இருந்து, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "பாஜக பெண்களுக்கு ரூ. 1.80 லட்சம் தரும்" - மோடியின் வாக்குறுதி என்ன?

மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்குக் கடந்த 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத்தேர்தல்... மேலும் பார்க்க