செய்திகள் :

இண்டிகோ சேவை ரத்து: மும்பை விமான நிலையத்தில் வேதனையை பகிர்ந்த பயணிகள்; சோக காட்சிகள்

post image

நாட்டின் மிகப்பெரிய தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனமாக கருதப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திடீரென பைலட்டுகளுக்கான பணி நேரம், ஓய்வு தொடர்பான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் மும்பை, டெல்லி, புனே உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு, பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் 1,000 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

IndiGo - இண்டிகோ
IndiGo - இண்டிகோ

நேற்று முன்தினம் மும்பை விமான நிலையத்தில் பயணிகள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இன்று மீண்டும் மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் டிக்கெட் கவுண்டர் முன்பு கூடிய பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு வயதான பெண், இண்டிகோ ஊழியர்களுடன் கடுமையாக வாதிட்டார்.

டெல்லி
டெல்லி

அதோடு விடாமல், அப்பெண் கவுண்டரின் மீது ஏறி நின்று ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கு கூடி நின்ற பயணிகளிடம், இண்டிகோ ஏர்லைன்ஸ் குறித்து கடுமையான புகார்களையும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என்றும், மாற்று விமான வசதி செய்யப்படும் என்றும், தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் இண்டிகோ தரப்பு தெரிவித்துள்ளது.

அப்படி இருந்தும் பயணிகள் தொடர்ந்து கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஒரு பெண் பயணி கூறுகையில், “17 மணி நேரமாக விமான நிலையத்தில் இருக்கிறேன். ஏற்கனவே இரண்டு விமான டிக்கெட்களை ரத்து செய்துவிட்டேன். இப்போது மூன்றாவது டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

மும்பை விமான நிலைய டிக்கெட் கவுண்டரில் ஏறிய பெண்
மும்பை விமான நிலைய டிக்கெட் கவுண்டரில் ஏறிய பெண்

அகமதாபாத் விமான நிலையத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால், ஒரு பெண் பயணி கதறி அழுதார். விமான சேவை அடுத்த 10 நாட்களுக்குள் சரியாகும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் தெரிவித்துள்ளார்.

விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால், பயணிகள் விமான நிலையம் வருவதையே தவிர்க்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். அதிகமான பயணிகள் தங்களது முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

டெல்லி விமான நிலையத்தில் பல மணி நேரமாக காத்துக் கிடக்கும் ஒரு தந்தை, தனது மகள் ரத்தப்போக்கால் அவதிப்படுகிறாள் என்றும், சானிடரி நாப்கின் கொடுக்கும்படி இண்டிகோ ஊழியர்களிடம் கெஞ்சிய காட்சி வைரலாகியுள்ளது.

இதேபோன்று, பெங்களூரு விமான நிலையத்தில் நம்ரதா என்ற பெண் தனது தந்தையின் அஸ்தியை கரைக்க ஹரித்வார் செல்லவேண்டும் என்பதால், அஸ்தியுடன் விமான நிலையம் வந்திருந்தார். ஆனால், அவர் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.

IndiGo - இண்டிகோ
IndiGo - இண்டிகோ

இது குறித்து அவர் கூறுகையில், “நான் டெல்லி சென்று அங்கிருந்து டேராடூன் செல்ல வேண்டும். என் தந்தையின் அஸ்தியை ஹரித்வாரில் கரைக்க வேண்டியுள்ளது,” என்றும் தெரிவித்தார்.

தொடர் விமான சேவை ரத்துகள் தொடர்ந்து நடைபெறுவதால், இது குறித்து மத்திய அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் 109 விமான சேவைகள், டெல்லியில் 86, அகமதாபாதில் 19, பெங்களூரு விமான நிலையத்தில் 50, ஐதராபாத்தில் 69 விமான சேவைகள் என, நாடு முழுவதும் 1,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முறையான பராமரிப்பின்றி இருக்கும் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம்... அவதியுறும் பொதுமக்கள்!

கும்பகோணம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லையென்று மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து அங்கிருந்த பயணிகளிடம் கேட்கும் போது," கும்பகோணம் பேருந்து நிலையம் மிக ... மேலும் பார்க்க

Indigo: திணறும் இண்டிகோ; விண்ணைத் தொட்ட விமான டிக்கெட் விலை - மத்திய அரசு நடவடிக்கை!

இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நேற்றையதினம் ஆயிரத்துக்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் விமான ரத்துகள் தொடர்கிறது. நிலைமை இயல்புநிலைக்குத் திரும்ப டிசம்பர் 10-15 வரை ஆக... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது. தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு... மேலும் பார்க்க

TVK: `கியூ-ஆர் கோடு பாஸ்; 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!' - புதுச்சேரி கூட்டத்துக்கு தயாராகும் தவெக

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வ... மேலும் பார்க்க

Ukraine War: ஐரோப்பவுக்கு துரோகம் செய்கிறதா அமெரிக்கா? - பிரான்ஸ் அதிபரின் சந்தேகமும் விளக்கமும்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் ரஷ்யாவுடன் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரி... மேலும் பார்க்க

முல்லை பெரியாறு அணை கட்ட பயன்படுத்தபட்ட தொன்மையான 'கலவை இயந்திரம்' ஏலத்தில் விற்பனையா? - அதிர்ச்சி

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. இந்த அணையானது 1886-ல் கட்ட தொடங்கி, 10.10.1895 ல் கட்டி முடிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை கட்டுமானத்திற்காகவே பித்யோகமான கலவை இயந்திரம் இங்க... மேலும் பார்க்க