செய்திகள் :

வரும் 31-ம் தேதி தான் கெடு: பான் கார்டு ரத்தாகலாம்; உங்கள் பான் கார்டை செக் செய்வது எப்படி?| How to

post image

வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை தான் டைம். அதற்குள் பான்‌ கார்டை, ஆதார் கார்டு உடன்‌ இணைத்துவிடுங்கள். இல்லையென்றால், 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் உங்கள் பான் கார்டு செல்லாமல் போய்விடும்.

பான் - ஆதார் இணைப்பு...
பான் - ஆதார் இணைப்பு...

என்ன பிரச்னை?

பான் கார்டு செல்லாமல் ஆகிவிட்டால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது, வருமான வரி ரீ-ஃபண்ட் பெறுவது, முதலீடுகள், வங்கி பரிவர்த்தனைகள் போன்றவை மிகவும் சிரமமாகி விடும்.

மீண்டும் புதிய பான் கார்டு பெற்றாலோ அல்லது பான் கார்டு‌ புதுப்பிக்கப்பட்டாலோ தான் மேலே கூறியவைகளை எளிதில் மேற்கொள்ள முடியும்.

இந்தப் பான் - ஆதார் இணைப்பை இவர்கள் தான் செய்ய வேண்டும்... அவர்கள் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. பான் வைத்திருக்கும் அனைவருமே இந்த இணைப்பை செய்ய வேண்டும்.

ஆதார் - பான் இணைப்பிற்கு என்ன செய்ய வேண்டும்?

வருமான வரி இ-ஃபைலிங் வலைதளத்திற்கு செல்லவும்.

ஹோம் பக்கத்தில் உள்ள 'Link Aadhar'-ஐ கிளிக் செய்யவும்.

அடுத்த பக்கத்தில், பான் எண், ஆதார் எண் மற்றும் பெயரை பதிவிடவும்.

மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ நிரப்பவும்.

முந்தைய இணைப்பு கெடு தேதியை மிஸ் செய்தவர்களுக்கு ரூ.1,000 அபராதம் கேட்கும். அதை இ-பே மூலம் கட்டவும்.

அடுத்ததாக, 'Submit' கொடுக்கவும்.

அடுத்த 3 - 5 நாள்களில் உங்களது ஆதார் - பான்‌ இணைப்பு வருமான வரி இணையதளத்தில் அப்டேட் ஆகிவிடும்.

ஆதார், பான்
ஆதார், பான்

ஏற்கெனவே உங்களது பான் கார்டு செல்லாமல் ஆகிவிட்டதா?

வருமான வரி இணையதளத்திற்குள் செல்லவும்.

மேலே சொன்ன நடைமுறை மூலம் அபராதம் கட்டி, பதிவு செய்யவும்.

அடுத்த 30 நாள்களுக்குள் பான் கார்டு செயல்பாட்டிற்கு வந்துவிடும்.

உங்கள் ஆதார், பான் கார்டு இணைந்திருக்கிறதா எப்படி செக் செய்வது?

வருமான வரி வலைதளத்திற்குள் சென்று கொள்ளவும்.

'Link Aadhar Status'-ஐ கிளிக் செய்யவும்.

அடுத்த பக்கத்தில், ஆதார் எண் மற்றும் பான்‌ எண்ணை பதிவிட்டு 'View Link Aadhar Status' கொடுக்கவும்.

இப்போது ஆதார், பான் இணைந்திருக்கிறதா என்பது‌ தெரிந்துவிடும்.

சாத்தூர்: அரசு அலுவலருக்குப் பினாமியாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த நபர் - எம்.எல்.ஏ ஆய்வில் அம்பலம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் நடைபெறும் பணிகள் குறித்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.ஏ.ஆர்.ஆர். ரகுராமன் வெம்பக்கோட்டை ஊராட்... மேலும் பார்க்க

"ஆணவம் உண்மையை மறைக்கும்; அந்த உண்மை எது என்றால்.!" - செங்கோட்டையன்

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4,5 மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன.அந்த வரிசை... மேலும் பார்க்க

``முருங்கை இலை சாறு டு தென்னிந்திய ரசம்'' - ரஷ்ய அதிபர் புதினுக்கு விருந்து வைத்த குடியரசுத் தலைவர்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார். நேற்று இந்தியா வந்த புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.ராணுவ ... மேலும் பார்க்க

அமெரிக்காவை அதிரவைத்த பேருந்து புறக்கணிப்பு போராட்டம்! 70 ஆண்டுகள் கடந்தும் கவனம்பெறும் `டிசம்பர் 5’

பேருந்துகள் என்பது வெறும் போக்குவரத்து வாகனம் மட்டுமல்ல. நவீன சமுதாயத்தின் கட்டமைப்பு. பேருந்துகள் என்பவை பலரது வாழ்வாதாரத்திற்கான கடத்து சங்கிலி, சாமானிய மக்களை வாழ்வின் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல... மேலும் பார்க்க

மக்களவையில் திருப்பரங்குன்ற விவகாரம்: பாஜக VS திமுக இடையே நடந்த காரசார விவாதம்!

திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் வழக்கம்போல இந்த ஆண்டும் ஏற்றப்பட்டது. எனினும் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்... மேலும் பார்க்க