செய்திகள் :

Indigo: திணறும் இண்டிகோ; விண்ணைத் தொட்ட விமான டிக்கெட் விலை - மத்திய அரசு நடவடிக்கை!

post image

இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நேற்றையதினம் ஆயிரத்துக்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் விமான ரத்துகள் தொடர்கிறது. நிலைமை இயல்புநிலைக்குத் திரும்ப டிசம்பர் 10-15 வரை ஆகலாம் என அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்திருந்தார். இதனால் நாட்டில் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திர அரசு நடவடிக்கை

Indigo: பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட CEO
Indigo: பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட CEO

இந்த நேரத்தில் மற்ற விமான சேவை நிறுவனங்கள் தங்கள் டிக்கெட் விலையைப் பல மடங்கு உயர்த்தின. இந்த "சந்தர்ப்பவாத விலை நிர்ணயத்திலிருந்து" மக்களைக் காப்பதற்காக புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண உச்சவரம்புகளை (Fare Caps) கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

"தற்போது நிலவும் நெருக்கடியின்போது, சில விமான நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிப்பதை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மிகவும் தீவிரமாகக் கவனித்துள்ளது... புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண உச்சவரம்புகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Airport (Representational Image)

நிலைமை முழுமையாகச் சீரடையும் வரை இந்தக் கட்டண உச்சவரம்புகள் அமலில் இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திணறிய Indigo - விமான கட்டணம் அதிகரிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ, புதிய விமானப் பணி நேர வரம்பு (Flight Duty Time Limitation - FDTL) விதிமுறைகள் காரணமாகப் பணி அட்டவணையைச் சீரமைக்க முடியாமல் திணறியதால், கடந்த சில நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பயணிகளின் துயரத்தை மேலும் அதிகரிப்பது போல, விமான டிக்கெட்டுகளின் விலை அசுர வேகத்தில் உயர்ந்தது. இந்தக் குழப்பமான சூழ்நிலையால், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கான உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரித்தன. எடுத்துக்காட்டாக, டெல்லி-மும்பை நேரடி விமான டிக்கெட்டுகளின் விலை ₹65,460 வரை உயர்ந்தது. ஒற்றை நிறுத்தம் கொண்ட விமானங்களின் விலை ₹38,376 முதல் ₹48,972 வரை விற்கப்பட்டது.

கூட்டணி `டீல்’ - ராகுல் காந்தியை சந்தித்த சபரீசன்! திடீர் விசிட்டின் பின்னணி என்ன?

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்ட... மேலும் பார்க்க

முறையான பராமரிப்பின்றி இருக்கும் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம்... அவதியுறும் பொதுமக்கள்!

கும்பகோணம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லையென்று மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து அங்கிருந்த பயணிகளிடம் கேட்கும் போது," கும்பகோணம் பேருந்து நிலையம் மிக ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது. தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு... மேலும் பார்க்க

TVK: `கியூ-ஆர் கோடு பாஸ்; 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!' - புதுச்சேரி கூட்டத்துக்கு தயாராகும் தவெக

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வ... மேலும் பார்க்க

Ukraine War: ஐரோப்பவுக்கு துரோகம் செய்கிறதா அமெரிக்கா? - பிரான்ஸ் அதிபரின் சந்தேகமும் விளக்கமும்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் ரஷ்யாவுடன் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரி... மேலும் பார்க்க

முல்லை பெரியாறு அணை கட்ட பயன்படுத்தபட்ட தொன்மையான 'கலவை இயந்திரம்' ஏலத்தில் விற்பனையா? - அதிர்ச்சி

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. இந்த அணையானது 1886-ல் கட்ட தொடங்கி, 10.10.1895 ல் கட்டி முடிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை கட்டுமானத்திற்காகவே பித்யோகமான கலவை இயந்திரம் இங்க... மேலும் பார்க்க